கொரோனா என்றாலே எங்கள நம்மை தாக்கி விடுமோ என்ற பயத்தில் தின்தோறும் வாழ்க்கையை பயத்துடன்  ஓட்டி வருகிறோம். ஆனால்... மருத்துவரை துறையில் உள்ள டாக்ட்டர்கள், செவிலியர்கள், மற்ற பிற மருத்துவ ஊழியர்கள்.. மாநகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர், தொடர்புடைய அரசியல் தலைவர்கள் என பலரும்  மும்முரமாக ஓடோடி வேலை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

23 நாட்களாக வீட்டிற்கே போகாத "நர்ஸ்"! 2 சின்ன குழந்தைகளையும் கூடபார்க்காம.. கொரோனா பாதித்தவருக்கு சிகிச்சை!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கேரளாவில் தொடர்ந்து 22 நாட்கள் தன்னுடைய வீட்டிற்கே செல்லாமல் மருத்துவமனையிலேயே தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நர்ஸ் பற்றிய பதிவு இது...

கொரோனா என்றாலே எங்கள நம்மை தாக்கி விடுமோ என்ற பயத்தில் தின்தோறும் வாழ்க்கையை பயத்துடன் ஓட்டி வருகிறோம். ஆனால்... மருத்துவரை துறையில் உள்ள டாக்ட்டர்கள், செவிலியர்கள், மற்ற பிற மருத்துவ ஊழியர்கள்.. மாநகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர், தொடர்புடைய அரசியல் தலைவர்கள் என பலரும் மும்முரமாக ஓடோடி வேலை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது, மலையாள சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும், #Pappa #Hentry.. இவர், கேரள மாநிலம் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில், Staff Nurse ஆக பணிபுரிந்து வருகிறார். இடுக்கி மாவட்டம், பீருமேட்டை சேர்ந்தவர் இவர், கோட்டயம் மருத்துவக் கல்லூரியின், Isolation Wardல், போர்க்கால அடிப்படையில் கொரோனா நோயாளிகளுக்கு பணியாற்றி வருகிறார்.

இதற்காக தனது வீட்டிற்கு செல்லவோ, உற்றார் உறவினர்களையோ சந்திக்காமல், கொரோனா நோயாளிகளை, Isolation Wardல், இரவு பகல் பாராமல், கருணையுடன் கவனித்து வருகிறார்! கடந்த 22 நாட்களுக்கு மேலாக, தனிமை வார்டில், பணியாற்றும் இவருக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் இரண்டு பேர்... தனது செல்லக் குழந்தைகள் #Pappa #Hentry, இது வரை சென்று பார்க்கவில்லை... என்றால் பாருங்களேன்.

தற்போது இவரை பற்றி தான் ஒரே பாராட்டு பேச்சு. ஆனால் இவரை போலவே, பல்லாயிர செவிலியர்கள், மருத்துவர்கள், மற்ற மருத்துவ பணியாளர்கள் என அனைவரும் கொரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு அருகில் இருந்து சிகிச்சை கொடுத்து வருபவர்களே... அனைவருக்கும் பாராட்டுக்கள்.