பணம் பெருக..."இன்று" மறக்காம பெருமாள் கோவிலுக்கு சென்று வாங்க..!
தமிழ் வருட பிறப்பை தொடர்ந்து வரும் முதல் திங்ட்கிழமையன்று திருப்பதிக்கு சென்று வந்தால் வாழ்வில் அனைத்து வளமும் பெற்று இன்பமாக வாழவும், சகல ஐஸ்வர்யமும் பெறவும் வழிவகை ஏற்படும் என்பது ஐதீகம்.
அதனால் தான், உலகில் உள்ள மாபெரும் மனிதர்கள் குறிப்பாக பணக்கார வர்கத்தினர் முதல் சாதாரண மக்கள் வரை திருப்பதிக்கு சென்று வருவர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,திருப்பதிக்கு செல்ல ஸ்பெஷல் நாட்கள் இருக்கு. அது பற்றி பணவளக்கலை என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.
வரும் ஏப்ரல் 16 திருப்பதி சென்றால்,...
ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை திருப்பதி சென்றால்,நம் வாழ்வில் அனைத்தும் ஐஸ்வர்யம் தானாம்.
7 மலையை ஏறி இறங்கும் போது, நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனை இறங்கு முகமாகிவிடும். நம் வாழ்வோ மேலோங்கி செல்லுமாம்.
இன்றைய தினத்தில் திருப்பதிக்கு சென்று தான் வழிபட வேண்டும் என்பதில்லை...மறக்காமல் அருகில் உள்ள வெங்கடேஷ பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தாலே போதுமானது.
இன்றைய தினத்தில் தாங்கள் வேண்டும் அனைத்தும் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகமாக பார்க்கப் பார்க்கப்படுகிறது.