சென்னையில் காலரா...! உஷார்...
சென்னை மருத்துவமனையில் காலரா தாக்கிய இரண்டு நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 நபருக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை கண்டறியப் பட்டு உள்ளது
தற்போது காலராவால் பாதிக்கப்பட்டு உள்ள 2 நபர்களை தனியான அறையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
திடீரென காலரா நோய் ஏற்பட்டு உள்ளதால்,சென்னை மாநகராட்சி,மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில், காலரா மற்ற யாருக்கும் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.