பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்பதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி பதில் அளித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சீராக இருந்தால், அடுத்த காலாண்டில் இந்த நிறுவனங்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் விவகாரத்தை எண்ணெய் நிறுவனங்கள் கவனிக்கும் நிலையில் இருக்கும் என்று பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஏப்ரல் 2022 முதல் எண்ணெய் விலை உயர்வு இல்லை என்பதை உறுதி செய்துள்ளது, மேலும் நுகர்வோர் எந்த சிரமமும் இல்லாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

மோடி அரசாங்கத்தின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியை முன்னிட்டு பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பூரி, ரஃபேல் மற்றும் பிற விவகாரங்களில் ராகுல் காந்தியின் கருத்துகள், அரசியல் நம்பகத்தன்மையைப் பற்றியது என்றும், கடந்த காலத்தில் காங்கிரஸ் தலைவரின் அறிக்கைகள் பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும், 1983 ஆம் ஆண்டு நெல்லையில் முஸ்லிம்கள் மீதான படுகொலை மற்றும் 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களின் படுகொலைகள் காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்ததாக ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டார்மோடி அரசாங்கத்தின் கீழ் உள்கட்டமைப்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியை அமைச்சர் மேற்கோள் காட்டி பேசினார்.

Cyclone Biparjoy: புயல் எங்கு கரையை கடக்கும்? அதி தீவிர புயல் குறித்த முக்கிய தகவல்கள் இங்கே..

நாட்டில் எண்ணெய் விலை குறைப்பு பரிசீலனையில் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விவகாரம் குறித்து அறிவிப்பை வெளியிடும் நிலையில் தான் இல்லை என்றார். மேலும் இலவசங்கள் குறித்து பேசிய அவர், ஒருவர் எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்க விரும்பலாம் ஆனால் அவர்கள் இலவச அரசியலின் ஆபத்தான பகுதிக்குள் நுழைகிறார்கள், எதிர்க்கட்சிகள் இலவச அரசியல் செய்வதாக பூரி குற்றம் சாட்டினார்.

விலை நிர்ணயம் என்பது ஒரு முக்கியமான விஷயம், மக்களுக்கு உதவ அரசாங்கம் தனது ஒன்பது ஆண்டு காலத்தில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கூறினார்பாஜக அல்லாத மாநில அரசுகள் வாட் வரியை குறைக்காமல் பாஜக அரசுகளை விட அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்கும் போதும் பெட்ரோலியம் விலை குறித்து அதிகம் குரல் கொடுக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

ஒடிசா சோகம்.. ரயில் பெட்டிக்கு அடியில் இன்னும் மனித உடல்கள் உள்ளதா? துர்நாற்றத்திற்கு என்ன காரணம்?