10:34 PM (IST) Mar 02

திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக வெற்றி; மேகாலயாவில் தொங்கு சட்டசபை!!

திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில் மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் திரிபுராவில் கடந்த பிப்.16 ஆம் தேதியும் மேகாலயா நாகாலாந்து மாநிலங்களில் கடந்த பிப்.27 ஆம் தேதியும் வாக்கு பதிவு நடைபெற்றது. மூன்று மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பின்னர் கட்சிகளின் முன்னிலை நிலவரமும் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்த நிலையில் மூன்று மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க

04:25 PM (IST) Mar 02

Breaking: நாகாலாந்தில் நசுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி: ஒரு இடம் கூட இல்லை!

நாகாலாந்தில் நடந்த சட்டப்பேரைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாகாலாந்து மக்களால் துடைத்தெறியப்பட்டது காங்கிரஸ் கட்சி. விரிவான செய்திகளுக்கு ...

03:57 PM (IST) Mar 02

திரிபுரா, நாகாலாந்தில் பாஜக வெற்றி; பிரதமருக்கு பாராட்டு!!

திரிபுராவில் பாஜக தனித்தும், நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியுடன் (என்டிபிபி) தனித்தும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நிலையில், இன்று பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெறும் கட்சியின் மூத்த தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன

03:55 PM (IST) Mar 02

Breaking: நாகாலாந்து முதல்வர் நெபியூ ராய் 5-வது முறையாக வெற்றி

நாகாலாந்தில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாகாலாந்தில் பாஜக, என்டிபிபி கூட்டணி 36 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் நகர்ந்துவருகின்றன. இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.

இதில் என்டிபிபி கட்சியின் தலைவரும் நாகாலாந்து முதல்வருமான நெபியு ரியோ 5வதுமுறையாக வெற்றி பெற்றுள்ளார். வடக்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட ரியோ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செய்விலி சாச்சுவைவிட 15,824 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றி பெற்றுள்ளார். இதன் மூலம் நாகாலாந்து முதல்வர் நெபியு தொடர்ந்து 5-வது முறையாக வடக்க அங்காமி தொகுதியில் வென்றுள்ளார்.

03:39 PM (IST) Mar 02

மேகாலயாவில் தொங்கு சட்டசபையா? கான்ராட் சங்மா யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு?

மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது விரிவான செய்திகளுக்கு...

02:01 PM (IST) Mar 02

Breaking: நாகாலாந்து வரலாற்றில் முதல் பெண் எம்எல்ஏ | யார் இந்த ஹெக்கானி ஜக்காலு?

நாகாலாந்து மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், மாநில வரலாற்றில் முதல்முறையாக, பெண் எம்எல்ஏ-வாக ஹெக்கானி ஜக்காலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரிவான செய்திகளுக்கு..

01:30 PM (IST) Mar 02

Breaking: திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி! திப்ரா மோத்தா கட்சிக்கு வலைவீசும் பாஜக

திரிபுராவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கிறது என்று தேர்தல் முடிவுகள் வாயிலாக தெரியவருகிறது. அதேநேரம், புதிதாக களம்கண்ட திப்ரா மோத்தா கட்சிக்கும் பாஜக வலைவீசத் தொடங்கியுள்ளது. விரிவான செய்திகளுக்கு..........

12:26 PM (IST) Mar 02

Breaking: திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியைத் தக்கவைக்கிறது பாஜக

திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில், இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் நிலவரங்கள் தெரிவிக்கின்றன விரிவான செய்திகளுக்கு -------

12:18 PM (IST) Mar 02

Breaking: திரிபுரா முதல்வர் மாணிக் சஹா வெற்றி

திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக ஆட்சியைத் தக்கவைக்குமா என்ற சந்தேகம் எழுந்தநிலையில் தற்போது தனிப்பெரும்பான்மையை நோக்கி நகர்ந்துள்ளது. திரிபுராவில் பாஜக 31 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மைக்கு சரியாக இருக்கிறது

இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திப்ரா மோத்தா கட்சி 11 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. இதில் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, டவுன் பர்தோவலி தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.தேர்தல் ஆணையம்இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றபோதிலும் அங்குள்ள களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

பிஸ்ஹால்கார்க் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுஷாந்தா தேப், சிபிஎம் வேட்பாளர் பிரதா பிரதிம் மஜூம்தாரை தோற்கடித்துள்ளார்


12:09 PM (IST) Mar 02

Breaking: மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியானது கான்ராட் சங்மாவின் என்பிபி

Meghalaya Assembly election result 2023:மேகாலயாவில் நடந்த 59 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணியை ஆட்சி அமையும். அந்த கூட்டணியை கான்ராட் சங்கமா முடிவு செய்யும் நிலையில் உள்ளார்.

முதல்வர் கான்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்த பாஜக வேட்பாளர் மாரக்கைவிட 44 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

சுத்கா சாய்பங் தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் வின்சென்ட் ஹெச் பாலா, என்பிபி வேட்பாளர் சாந்தா மேரி ஷைலாவிட 1,257 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.

முன்னாள் முதல்வர், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் முகுல் சங்மா, சான்சக் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார், திக்ரிகிலா தொகுதியில் பின்தங்கியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் எர்நெஸ்ட் மாவ்ரி பின்தங்கியுள்ளார். யுபிடி கட்சி வேட்பாளர் பால் லிங்டோ 6 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

11:59 AM (IST) Mar 02

Breaking: கொண்டாட்டத்துக்கு தயாராகும் மேகலாயா முதல்வர் இல்லம்

Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் நடந்த 59 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தனிப்பெரும் கட்சியாக கான்ராட் சங்மா கட்சியான என்பிபி 25 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது.

இதனால் மேகாலயாவில் கான்ராட் சங்கமா கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, துரா நகரில் உள்ள கான்ராட் சங்மா இல்லத்தில் இனிப்புகள் செய்யும் பணி படுவேகமாக நடந்து வருகிறது. தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபடும்போது இனிப்புகளை வழங்குவதற்காக சமையல்கலைஞர்கள் இனிப்புகளை செய்யும் மும்முரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேகலாயாவில் பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை. இதில் கான்ராட் சங்மா கட்சி என்பிபி 25 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஆட்சி அமைக்க பாஜக, திரிணமூல் காங்கிரஸ், இதர கட்சிகளுடன் கூட்டணி சேரவும் கான்ராட் சங்மா தயங்கமாட்டார் என்பது அவரின் சமீபத்திய பேச்சில் சூசகமாகத் தெரிவித்துவிட்டார்.

11:50 AM (IST) Mar 02

Breaking: நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ முன்னிலை

Nagaland Election Results 2023: நாகாலாந்தில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாகாலாந்தில் பாஜக, என்டிபிபி கூட்டணி 35 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் நகர்ந்துவருகின்றன. இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.

இதில் என்டிபிபி கட்சியின் தலைவரும் நாகாலாந்து முதல்வருமான நெபியு ரியோ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செய்விலி சாச்சுவைவிட 6,394 வாக்குகள் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறார்

துணை முதல்வரும் பாஜக வேட்பாளருமான ஒய் பட்டான் 110 வாக்குகள் முன்னிலையுடன் நகர்ந்துவருகிறார்.

11:37 AM (IST) Mar 02

Tripura Assembly Election Result 2023: திரிபுராவில் ‘கிங் மேக்கராக’ வரும் திப்ரா மோத்தா கட்சி

Tripura Assembly Election Result 2023 : திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக ஆட்சியைத் தக்கவைக்குமா என்ற சந்தேகம் ஒவ்வொரு சுற்றிலும் எழுகிறது. பாஜகாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி செயல்பட்டு, 16 இடங்களில் முன்னிலையில் உள்ளன. ஆளும் கட்சியான பாஜக தற்போது 32 இடங்களில் முன்னிலையுடன் செல்கிறது. ஆனால், சிறிது நேரத்துக்கு முன் பெரும்பான்மைக்கு வழியில்லாமல் பின்தங்கியது

ஆனால், 2019ம் ஆண்டு கட்சி தொடங்கி, அசுரவளர்ச்சியில் உள்ள திப்ரா மோத்தா கட்சி தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், இடதுசாரிக்கு கடும் சவாலாக இருக்கிறது. திரிபுராவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை ஒருவேளை கிடைக்காத பட்சத்தில் கிங் மேக்கராக திப்ரா மோத்தா கட்சி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிரத்யோத் கிஷோர் மணிக்யா தீபர்மா என்பவரால் உருவாக்கப்பட்ட திப்ரா மோத்தா கட்சி, அடுத்த மாநிலத்தை யார் ஆளப்போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். 20 ரிசர்வ் தொகுதியில் திப்ரா மோத்தா கட்சி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் வாக்குகளைப் பெறமுடியாமல் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் திணறி வருகிறார்கள், அவர்களின் வாக்குகளை எல்லாம் திப்ரா மோத்தா அறுவடை செய்துவருகிறது.

கிரேட்டர் திரிபுரா உருவாக்க வேண்டும், பழங்குடியினருக்கு தனிமாவட்டம்,பகுதி கேட்டு தொடங்கப்பட்ட திப்ரமா மோத்தா கட்சியின் நோக்கம் நிறைவேறுமா என்பது தேர்தல் முடிவுகளுக்குப்பின் தெரியும்

11:22 AM (IST) Mar 02

Meghalaya Assembly election result 2023: மேகலாயாவில் பாஜக மாநிலத் தலைவருக்கு வந்த சோதனை!

Meghalaya Assembly election result 2023 மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தனிப்பெரும் கட்சியாக கான்ராட் சங்மா கட்சியான என்பிபி 25 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. 2வது இடத்தைப் பிடிக்க பாஜக, திரிணமூல் காங்கிரஸ், யுடிபி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மாநில பாஜக தலைவர் எர்நெஸ்ட் மாவ்ரீ பின்னடைந்துள்ளா். மேற்கு ஷில்லாங் தொகுதியில் போட்டியிட்ட மாவ்ரீ ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் பால் லிங்கோடவை விட 6ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார். என்பிபி வேட்பாளர் 2,920 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.

நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதில் நான் சார்ந்திருக்கும் பாஜக கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியது மாநில பாஜக தலைவர் எர்னெஸ்ட் மாவ்ரி என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் மாட்டிறைச்சி விவகாரத்தை எழுப்பி அரசியல் செய்துவரும் பாஜக மேகாலயாவில் மாட்டிறைச்சி விவகாரத்தை எழுப்பவில்லை. அங்குவாழும் மக்களுக்கு மாட்டிறைச்சி முக்கியமான உணவு என்பதால், அங்கு இந்த விவகாரம் தேர்தல் நேரத்தில் எழுப்பப்படவில்லை.

11:15 AM (IST) Mar 02

Tripura Assembly Election Result 2023: திரிபுராவில் பாஜக நிலை!…கரணம் தப்பினால் மரணம்!

Tripura Assembly Election Result 2023: திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என்ற கேள்வியுடன் நகர்ந்து வருகிறது. ஒவ்வொரு சுற்றுகள் எண்ணப்பட்டு முடிக்கும்போதும் பாஜக ஒவ்வொரு படியாக இறங்குகிறது. தனிப்பெரும்பான்மையுடன் 2வது முறையாக ஆட்சிஅமைக்கலாம் என்ற பாஜகவின் கனவில் மண்விழும்வகையில் திப்ரா மோத்தா கட்சி அடித்து நொறுக்குகிறது.

இதனால் 30 இடங்களுக்கு மேல் பாஜகமுன்னிலையுடன் இருந்தநிலையில், சரியாக 30 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது எந்தநேரத்திலும் மாறுபடலாம் என்பதால் கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் பாஜக நிலை இருக்கிறது.

பாஜகவை ஒழிக்க ஒன்று சேர்ந்த இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களில் முன்னிலையில் பெற்றுள்ளனர். திப்ரோ மோத்தா 11 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது.

இடதுசாரி, காங்கிரஸ், பாஜகவுக்கு கடும் சவாலாக திப்ரா மோத்தா இந்த தேர்தலில் முளைத்திருக்கிறது. இந்த 3 கட்சிகளின் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறிக்கவும், பல இடங்களில் தோல்வி அடையவும் திப்ரா மோத்தா காரணமாக அமைந்துள்ளது.

11:05 AM (IST) Mar 02

Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் கான்ராட் சங்மா, முகுல் சங்மா முன்னிலை

Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல்தான் நிலவி வருகிறது.

தனிப்பெரும் கட்சியாக என்பிபி கட்சி வரலாம், ஆனால், தனிப்பெரும்கட்சியாக ஆட்சியமைக்க முடியாது. ஆதலால் மேகாலயாவில் கூட்டணி ஆட்சிக்கே வாய்ப்புள்ளது. என்பிபி கட்சித் தலைவர் கான்ராட் சங்மா, மீண்டும் பாஜகவின் பக்கம் செல்வாரா அல்லது வேறு வாய்ப்பை நாடுவாரா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதில் முதல்வர் கான்ராட் கே சங்மா தெற்கு துரா தொகுதியில் போட்டியி்ட்டார். பாஜக வேட்பாளர் பெர்னார்ட் மாரக்கைவிட 44 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையுடன் சங்மா நகர்கிறார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வரான முகுல் சங்மா, சாங்சக் தொகுதியில் முந்துகிறார், ஆனால், திக்ரிகில்லா தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

10:58 AM (IST) Mar 02

Tripura Assembly Election Result 2023: திரிபுராவில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் திப்ரா மோத்தா

Tripura Assembly Election Result 2023: திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக தனிப்பெரும்பான்மையுடன் முன்னிலைபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் வகையில் முன்னிலையுடன் நகர்ந்தது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகள் முடிவுகள் வெளிவரத் தொடங்கிய நிலையில் பாஜக பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட திப்ரா மோத்தா கட்சி முதல் தேர்தலிலேயே வெளுத்து வாங்குகிறது. 12 இடங்களி்ல் முன்னிலை பெற்று, இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி சவாலாக இருக்கிறது. திரிபுரா துணை முதல்வர் ஜிஷு தேவ் வர்மா 1000 வாக்குகள் , திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் சுபோத் தேவ் வர்மாவிடம் பின்தங்கியுள்ளார். திரிபுராவில் பல இடங்களில் பாஜகவுக்கு சவால் விடுத்து, அந்தக் கட்சி வெல்ல வேண்டிய இடங்களில் திப்ரா மோத்தா கட்சி வாக்குகளை பிரித்துள்ளது.

10:49 AM (IST) Mar 02

Meghalaya Assembly election result 2023: மேகலாயாவில் நம்பர் 2 இடத்துக்கு 3 கட்சிகள் போட்டி!

Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மேகாலயாவில் நம்பர் 2 இடத்துக்கு 3 கட்சிகள் கடும் போட்டியிட்டு வருகின்றன. கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி 23 இடங்களில் முன்னிலையுடன் தனிபெரும் கட்சியாக நகர்ந்துவருகிறது.

ஆனால், பாஜக, திரிணமூல் காங்கிரஸ், யுடிபி கட்சிகள் ஒருவொருக்கொருவர் கடும் போட்டியாக இருக்கின்றன. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் 3 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால், ஒருவர் மாறி ஒருவர் முன்னிலை பெற்றுள்ளனர். ஒரு கட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. அந்தக் கட்சியை இறக்கிவிட்டு, பாஜக முன்னிலை சென்றது. இப்போது இரு கட்சிகளையும்பின்னுக்குத் தள்ளி ஐக்கிய ஜனநாயக முன்னணி 8 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. பாஜக, திரிணமூல் காங்கிரஸ் தலா 7 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

10:33 AM (IST) Mar 02

Election Results 2023: திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல் முடிவுகள்

10:29 AM (IST) Mar 02

Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் பாஜகவுக்கு பின்னடைவு! ரேஸில் யுடிபி முந்துகிறது

Meghalaya Assembly election result 2023: மேகாலயாவில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மேகலாயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி தனிபெரும் கட்சியாக நகர்ந்துவருகிறது

நம்பர் -2 இடத்தைப் பிடிக்க மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி தொடக்கத்தில் இருந்து நிலவி வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் இரு கட்சிகளும் ஒருவர் மாறி ஒருவர் முன்னிலை பெற்று வந்தனர். இந்நிலையில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி, ஐக்கிய ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்று வருகிறது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் முன்னிலையும், இணையாக, ஐக்கிய ஜனநாயக முன்னணியும் உள்ன. ஆனால், பாஜக 7 இடங்களில் பின்தங்குகிறது. காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலையுடன் உள்ளது. மற்ற கட்சிகள் 10 இடங்களில் உள்ளனர். மேகாலயாவில் கான்ராட் சங்கமா, பாஜகவுடன் சேர்ந்து ஆட்சிஅமைப்பதற்கு கூட பெரும்பான்மை கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.