மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
2019-ம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி ” எப்படி எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான பெயர் உள்ளது என்று லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை குறிப்பிட்டு பேசியிருந்தார். இதை தொடர்ந்து அவர் மீது, மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து ராகுல்காந்தி மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்தியதாக கூறி அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு, டெல்லியில் தான் வசித்து வந்த, அரசு பங்களாவை ராகுல்காந்தி காலி செய்தது என அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறின.
இதனிடையே தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் ராகுல் காந்திக்கு எதிராக சுமார் 10 கிரிமினல் அவதூறு புகார்கள் நிலுவையில் இருப்பதாகவும், செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவு சரியானது என்பதால் அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மாஜிஸ்திரேட்நீதிமன்றத்தால்விதிக்கப்பட்டஇரண்டுஆண்டுசிறைத்தண்டனைக்குஉயர்நீதிமன்றம்தடைவிதிக்கமறுத்ததைத்தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்செய்திருந்தார். தனது சிறைதண்டனையைஉடனடியாகநிறுத்துமாறு மனுவில் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இந்த தண்டனைஉத்தரவுசுதந்திரமானபேச்சு, சுதந்திரமானகருத்து, சுதந்திரமானசிந்தனைமற்றும்சுதந்திரமானகருத்துஆகியவற்றைத்தடுக்கவழிவகுக்கும்என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் "இதுஜனநாயகஅமைப்புகளின்முறையான, மீண்டும்சீர்குலைக்கப்படுவதற்கும், அதன்விளைவாகஜனநாயகத்தின்கழுத்தைநெரிப்பதற்கும்பங்களிக்கும், இதுஇந்தியாவின்அரசியல்சூழல்மற்றும்எதிர்காலத்திற்குமிகவும்தீங்குவிளைவிக்கும்" என்றுஅவர்கூறினார். இந்த நிலையில் இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சட்டத்தின் இரண்டுஆண்டுகள்சிறைத்தண்டனை பெற்றதால் ராக்குல்காந்தி 8 ஆண்டுகளுக்குநாடாளுமன்றத்தின்இருஅவைகளிலும்நுழைய முடியாது. மேலும் தேர்தலிலும் போட்டியிட முடியாது. ஆனால் உச்சநீதிமன்றம் ராகுல்காந்தியின் தண்டனையைரத்துசெய்தால் இந்த விதி பொருந்தாது. அவர் மீண்டும் நாடாளுமன்றத்தில் எம்.பியாக நுழையலாம். தேர்தலில் போட்டியிடவும் தடை இருக்காது.
ஷாக்கிங் நியூஸ்.. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்..!
