Asianet News TamilAsianet News Tamil

எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் இருந்து திடீரென வெளியேறிய புகை.. பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்

செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரஸ் ஏசி கோச்சில் இருந்து புகை வந்ததால் ஒடிசா பிரம்மாபூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.

Smoke suddenly came out from the AC coach of another express train.. the train stopped midway
Author
First Published Jun 6, 2023, 7:42 PM IST

இன்று செகந்திராபாத்-அகர்தலா விரைவு ரயிலில் ஏசி பெட்டி ஒன்றில் ஏசி யூனிட்டில் இருந்து புகை வெளியேறியது. ரயிலின் பி-5 பெட்டியில் புகை வெளியானதை அடுத்து பயணிகள் பிரம்மபூர் ரயில் நிலையத்தில் இறங்கினர். உடனடியாக புகையை கட்டுப்படுத்திய போதிலும், பீதியடைந்த பயணிகள் மீண்டும் மின்கசிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பெட்டியில் பயணிக்க மறுத்துவிட்டனர். மேலும் தங்களின் கோச்-ஐ மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். புகையை கட்டுப்படுத்திய பின் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

கிழக்கு கடற்கரை ரயில்வே (ECoR) அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது "பிரம்மாபூர் ஸ்டேஷன் அருகே செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரஸின் பெட்டி எண். B-5 இல் சிறிய மின் பிரச்சனை ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக பிரச்சினையை சரிசெய்தனர்," என்று தெரிவித்தார்.

கடந்த 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த கோர ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் விபத்தில் சிக்கியதால் பெரும் சேதம் ஏற்பட்டது. சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், அருகில் உள்ள தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பின்புற பெட்டிகள் மூன்றாவது பாதையில் கவிழ்ந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

அதே நேரத்தில் அந்த வழியாகச் சென்ற பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸின் கடைசி சில பெட்டிகள் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் கவிழ்ந்தன. நாட்டின் மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விபத்தில் 275-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios