நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் பிரபல கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சார்யாவின் கேலிச்சித்திரம் சமூக ஊடக தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் பிரபல கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சார்யாவின் கேலிச்சித்திரம் சமூக ஊடக தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, கோவிலின் கருவறையில் இருந்த ராமரிடம், ” யார் நீ” என்று கேட்பது போல் இந்த சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. பகவான் ராமரை மட்டுமின்றி பிரதமர் மோடியை சதீஷ் ஆச்சார்யா அவமதித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

கார்ட்டூனிஸ்ட் தனது கார்ட்டூனை நீக்க வேண்டும் என்றும், அதற்கு, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அவரை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

Scroll to load tweet…

இன்னும் சிலரோ, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவை இதில் தலையிட்டு தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

யார் இந்த நீதிபதி தல்வீர் பண்டாரி? இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து வாக்கு!

நாடு முழுவது கடந்த மாதம் முதல் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், 7-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் எண்ணிக்கை ஜூன் 4 நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பது குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்திய நிலையில், சதீஷ் ஆச்சார்யாவின் கார்ட்டூன் வெளிவந்துள்ளது. சமீபத்தில் என்டிடிவிக்கு பிரதமர் மோடி அளித்த பிரத்யேக பேட்டியில், தன்னை நம்பும் மக்களுக்கு சேவை செய்வது தனது கடமை என்று பிரதமர் மோடி கூறினார். "(எனக்காக) மோசமான துஷ்பிரயோகங்களைப் பயன்படுத்தும் நபர்களை நீங்கள் காண்பீர்கள், மேலும் நல்ல விஷயங்களைச் சொல்பவர்களையும் நீங்கள் காண்பீர்கள். தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் மக்கள் காயப்படவோ அல்லது ஏமாற்றமடையவோ கூடாது என்பதை உறுதிப்படுத்துவதே எனது கடமை.

சிலர் என்னை பைத்தியக்காரன் என்று அழைக்கலாம், ஆனால் கடவுள் என்னை ஒரு நோக்கத்திற்காக அனுப்பினார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, அந்த நோக்கம் நிறைவேறியவுடன், எனது பணியும் நிறைவேறும். அதனால்தான் நான் கடவுளுக்கு என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். 

இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

நிறைய வேலைகளைச் செய்ய கடவுள் தூண்டுகிறார், ஆனால் எந்த பெரிய திட்டங்களையும் வெளிப்படுத்தவில்லை பிரதமர் மோடி கூறினார். "அவர் (கடவுள்) தனது ஆசைகளை வெளிப்படுத்தவில்லை, அவர் என்னை வேலை செய்ய வைக்கிறார். மேலும் நான் அவரை நேரடியாக அழைத்து அடுத்து என்ன நடக்கும் என்று அவரிடம் கேட்க முடியாது," என்று பிரதமர் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.