Asianet News TamilAsianet News Tamil

குடித்து விட்டு குருத்வாரா; நிர்வாண வீடியோ - பஞ்சாப் முதல்வர் மீது மகள், முன்னாள் மனைவி குற்றச்சாட்டு!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் மீது அவரது மகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

Punjab CM Bhagwant Mann Daughter Accuses him and ex wife threatens his nude drunken video smp
Author
First Published Dec 10, 2023, 3:46 PM IST

பஞ்சாப் மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மன் உள்ளார். அவர் மீது அவரது முதல் மனைவியின் மகள் சீரத் கவுர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் வீடியோவை ஷிரோமணி அகாலி தளம் தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசும் சீரத் கவுர், தந்தை என அழைக்கும் உரிமையை பகவந்த் மன் இழந்து விட்டதால், அவரை முதல்வர் பகவந்த் மன் என்று அழைப்பதாக கூறுகிறார்.

முதல்வர் மீது குற்றம் சுமத்தும் வீடியோவை வெளியிடுவதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை எனவும், இன்று வரை தானும் தனது தாயும் அமைதியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். “எங்கள் மௌனம் பலவீனமாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக நான் உணர்கிறேன். எங்களின் மௌனத்தினால் அவர் தற்போது உயர் பதவியில் அமர்ந்திருக்கிறார்.” என சீரத் கவுர் கூறியுள்ளார்.

பகவந்த் மன்-இன் இரண்டாவது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், மூன்றாவது குழந்தைக்கு அவர் தந்தையாகப் போவாதாகவும் தெரிவித்த சீரத் கவுர், இது குறித்து மற்றவர்களிடம் இருந்து தான் தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார். தன்னிடமோ அல்லது தன் சகோதரரிடமோ இதுகுறித்த தெரிவிக்க கூட பகவந்த் மன் அக்கறை காட்டவில்லை எனவும் அவர் கூறினார்.

“உங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விட்டீர்கள், இப்போது மூன்றாவதாக ஒருவரை இந்த உலகத்திற்குக் கொண்டுவர விரும்புகிறீர்கள். இதற்கு என்ன காரணம்.” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

முதல்வரின் மகனும் தனது சகோதரருமான தோஷன் பகவந்த் மானை சந்திக்க இரண்டு முறை சென்றதாக சீரத் கவுர் கூறினார். அவர் தனது தந்தையுடன் நேரத்தை செலவிட விரும்புவதாகவும் அவர் கூறினார். “தோஷனை முதல்வர் வீட்டிற்கு வர அனுமதிக்கவில்லை. இரண்டு முறையுமே தோஷனுடன் நிறைய நடந்து விட்டது. அதன் பிறகு அவர் குடும்ப நண்பர்களுடன் சண்டிகரில் தங்கினார். ஒரு நாள் மீண்டும் முதல்வர் மான் வீட்டிற்கு தோஷன் சென்றார். ஆனால், அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். தனது சொந்த குழந்தைகளை கூட கவனித்துக் கொள்ள முடியாத ஒருவர், பஞ்சாப் மக்களின் பொறுப்பை எப்படி ஏற்றுக்கொள்வார்.?” எனவும் சீரத் கவுர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

நாங்கள் பார்த்தது இப்போது பஞ்சாப் மக்களுக்கும் நடக்கிறது. அரசியலுக்கு வரக்கூடாது என்று எனது தாயார் தடுத்ததுதான் விவாகரத்துக்கு காரணம் என பகவந்த் மன் தெரிவித்திருந்தார். ஆனால், விவாகரத்துக்கு பல காரணங்கள் உள்ளன, அது என்னுடைய அம்மாவின் கதை. எனது அம்மா தயாராக  இருக்கும்போது, அவருக்கு நடந்த விஷயங்களை நிச்சயமாக அனைவருக்கும் கூறுவார் எனவும் சீரத் கவுர் விளக்கம் அளித்துள்ளார்.

மாயாவதியின் அரசியல் வாரிசு: யார் இந்த ஆகாஷ் ஆனந்த்?

பகவந்த் மன் மற்றும் அவரது முதல் மனைவிக்குமான விவாகரத்து குறித்து சில காரணங்களை வெளிச்சம் போட்டி காட்டிய மகள் சீரத் கவுர், மது அருந்துதல், உணர்ச்சி மற்றும் உடல் ரீதியாக தாக்குதல், பொய் சொல்லும் பழக்கம் உள்ளிட்டவைகள்  பகவந்த் மானுக்கு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். பகவந்த் மன் மது போதையில் சட்டசபை, குருத்வாராவுக்கு செல்வதாகவும் அவரது மகள் குற்றம் சாட்டியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, மது அருந்திவிட்டு நிர்வாணமாக நடனமாடும் பகவந்த் மான் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதனை வெளியிடுவதாகவும் சமூக ஊடக பக்கம் மூலம் அவரது முதல்  மனைவி மிரட்டல் விடுத்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios