Prime Minister Narendra Modi : பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் ஒரு பெரிய முன்னெடுப்பை, அதாவது PM PVTG (பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள்) மேம்பாட்டு இயக்கத்தை பாரத பிரதமர் மோடி அவர்கள் தொடங்குகிறார்.

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி நமது இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மோடி அரசாங்கம் ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் அன்று PVTG-களின் (Particularly Vulnerable Tribal Groups) முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக சுமார் 24,000 கோடி அளவிலான ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது நாம் அறிவோம்.

2023-24 பட்ஜெட்டில், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் (PVTGs) சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்காக பிரதான் மந்திரி PVTG மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்பட்டது. சுமார் 28 லட்சம் அளவிற்கு மக்கள்தொகை கொண்ட 22,544 கிராமங்களில் (220 மாவட்டங்கள்) 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 75 PVTGகள் உள்ளன அன்று ஆய்வு கூறுகின்றது.

"இந்திய ராணுவ வீரர்கள் உள்ள இடமே எனக்கு அயோத்தி" - ராணுவ வீரர்களோடு தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி! Video!

இந்த பழங்குடியினர் பரந்துபட்ட, தொலைதூர மற்றும் அணுக முடியாத வசிப்பிடங்களில், பெரும்பாலும் வனப்பகுதிகளில் தங்கியிருப்பதால், சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு, மின்சாரம், பாதுகாப்பான வீடுகள், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம், மேம்பட்ட அணுகல் போன்ற அடிப்படை வசதிகளுடன் PVTG குடும்பங்கள் மற்றும் குடியிருப்புகளை நிறைவு செய்ய ஒரு பணி திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் உள்ளிட்டவைகளை வழங்குவது தான் அது.

9 அமைச்சகங்களின் 11 தலையீடுகளின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த பணி செயல்படுத்தப்படும். உதாரணமாக, PMGSY, PMGAY, ஜல் ஜீவன் மிஷன் போன்றவற்றின் கீழ், இந்த தொலைதூர வாழ்விடங்களை உள்ளடக்கும் வகையில் சில திட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும்.

உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு: முதல்வர் அசோக கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு!

கூடுதலாக, தனித்தனியாக, PMJAY, அரிவாள் செல் நோய் ஒழிப்பு, காசநோய் ஒழிப்பு, 100% நோய்த்தடுப்பு, PM சுரக்ஷித் மாத்ரித்வா யோஜனா, PM மாத்ரு வந்தனா யோஜனா, PM போஷன், PM ஜன் தன் யோஜனா போன்றவற்றுக்கு தனித்தனியாக செறிவூட்டல் உறுதி செய்யப்படும். இவை அனைத்தையும் வருகின்ற நவம்பர் 15ம் தேதி பிரதமர் மோடி துவங்கிவைக்கவுள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.