ஹிமாச்சலில் சிக்கித் தவிக்கும் 45 மருத்துவர்களில், 27 பேர் கொச்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் 18 பேர் திருச்சூரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இமாச்சலப்பிரதேசத்தில் பெய்து வரும்கனமழைமற்றும்திடீர்வெள்ளத்திற்குமத்தியில், கேரளாவைச்சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள்உட்படஏராளமானநபர்கள்பாதிக்கப்பட்டபகுதியில்சிக்கித்தவிக்கின்றனர். இவர்களில்களமசேரிமற்றும்திருச்சூரில்உள்ளஅரசுமருத்துவக்கல்லூரிகளைச்சேர்ந்தபயிற்சி மருத்துவர்கள்உள்ளனர். சிக்கித்தவிக்கும் 45 மருத்துவர்களில், 27 பேர்கொச்சியைச்சேர்ந்தவர்கள்மற்றும் 18 பேர்திருச்சூரைச்சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் வர்கலாமற்றும்கொல்லத்தைச்சேர்ந்தநபர்களும்மணாலியில்மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனிடையே களம்சேரி அரசு மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் என்.எஸ்.கே உமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர் “ ஹமிச்சலில் சிக்கி உள்ள பயிற்சி மருத்துவர்கள், தங்களின் இருப்பிடம் குறித்த தகவலை எங்களுக்கு அனுப்பினர். நாங்கள் அதனை மணாலி ஆட்சியருக்கு அனுப்பி உள்ளோம். இளம் பயிற்சி மருத்துவர்கள் தற்போது பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஹிடிம்பா கோயிலுக்கு அருகே உள்ள நசோகி உட்ஸ் ஹோட்டலில் அவர்கள் தங்கி உள்ளனர்” என்று தெரிவித்தார்.

அன்னபாக்யா திட்டம்: பொதுமக்களுக்கு பணம் கிடைப்பதில் சிக்கல் - என்ன காரணம்?

இதனிடையே திரிச்சூரில் இருந்து பயிற்சி மருத்துவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்த, டிராவல் ஏஜென்சியும் பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் மணாலியில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது. டெல்லியில்உள்ளகேரளஅரசாங்கப்பிரதிநிதிகேவிதாமஸ், கொச்சியில்இருந்துவரும்சுற்றுலாப்பயணிகள்அனைவரும்பாதுகாப்பானஇடங்களுக்குமாற்றப்பட்டுள்ளனர்என்றுஉறுதியளித்தார்.

இமாச்சலப்பிரதேசத்தில்பெய்துவரும்கனமழையால்நிலச்சரிவு, திடீர்வெள்ளம்மற்றும்பெரும்சேதம்ஏற்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது கனமழை பெய்து வருவதால், மாநிலம்முழுவதும்வெள்ளப்பெருக்குஏற்பட்டுபள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் சண்டிகர்-மணலிதேசியநெடுஞ்சாலைஉட்பட 765 சாலைகள்மூடப்பட்டன.

இதன்விளைவாகலாஹவுல்மற்றும்ஸ்பிதியில்உள்ளசந்திரதால்மற்றும்சோலன்மாவட்டத்தில்உள்ளசதுபுல்போன்றபல்வேறுபகுதிகளில்நூற்றுக்கணக்கானமக்கள்சிக்கித்தவித்தனர். கடந்த 48 மணிநேரத்தில் 20 நிலச்சரிவுகள், 17 திடீர்வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் 30க்கும்மேற்பட்டவீடுகள்முழுமையாகஅழிந்தன. ராவி, பியாஸ், சட்லஜ், ஸ்வான், செனாப்உள்ளிட்டமுக்கியஆறுகள்நிரம்பிவழிகின்றன. துரதிர்ஷ்டவசமாக, மணாலியில்கடைகள்அடித்துச்செல்லப்பட்டன, நுல்லா, குலு, கின்னவுர்மற்றும்சம்பாஆகியஇடங்களில்ஏற்பட்டதிடீர்வெள்ளத்தில்வாகனங்கள்அடித்துச்செல்லப்பட்டன.

வட மாநிலங்களைப் புரட்டிப் போடும் வெள்ளப் பெருக்கு: தத்தளிக்கும் இமாச்சல், டெல்லி மக்கள்!