Asianet News TamilAsianet News Tamil

ஒரு முஸ்லீம் கூட இல்லை.. ஆனால் மொஹரம் கொண்டாடும் கிராம மக்கள்.. ஏன் தெரியுமா?

இந்தியாவில் மத நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கலாச்சாரத்தின் மற்றொரு உதாரணமாக கருதப்படுகிறது.

Not a single Muslim.. but this karnataka villagers celebrating Muharram.. Do you know why?
Author
First Published Jul 25, 2023, 8:22 AM IST

ஒரு முஸ்லிம் கூட இல்லாத கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில், ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகையை கொண்டாடப்பட்டு வருகிறது.முஹமது நபியின் பேரன்கள் இமாம் ஹுசைன் மற்றும் இமாம் ஹசன் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூரும் துக்க மாதமான மொஹரம் மாதத்திற்காக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மத நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கலாச்சாரத்தின் மற்றொரு உதாரணமாக கருதப்படுகிறது. பெலகாவி மாவட்டத் தலைமையகத்திலிருந்து 51 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சவுந்தட்டி தாலுகாவில் உள்ள ஹிரேபிதனூர் கிராம மக்கள் மொஹரம் மாதத்துடன் தொடர்புடைய சடங்குகளை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கடைப்பிடித்து வருகின்றனர்.

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட மசூதியை உள்ளூர்வாசிகள் ‘ஃபகீரேஷ்வர் ஸ்வாமி’ மசூதி என்று பெயரிட்டுள்ளனர், இந்த கிராமத்தில் இஸ்லாத்தின் ஒரே அடையாளம் காணக்கூடிய ஒரே அடையாளமாகும். மேலும் மொஹரம் மாதம் வந்தாலும், கிராமத்தின் தெருக்கள் விளக்குகளால் ஒளிரும். மசூதியைக் கவனித்து அங்கு தொழுகை நடத்தும் இந்து மதகுரு யல்லப்ப நாயக்கரின் கூற்றுப்படி, நீண்ட காலத்திற்கு முன்பு இரண்டு முஸ்லிம் சகோதரர்கள் மசூதியைக் கட்டினார்கள். மேலும் குடாநட்டி கிராமத்திற்கு அருகில் மற்றொரு பகுதியையும் கட்டினர்.

சகோதரர்கள் இறந்த பிறகும், முஸ்லீம் இல்லாததால் அப்பகுதி உள்ளூர்வாசிகள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மொஹரம் பிரார்த்தனை அனுசரிக்கப்பட்டது. குறிப்பாக இந்து மக்கள் இதனை செய்து வருகின்றனர். கிராம மக்கள் கர்பலா நடனம் ஆடி கிராமத்தை கயிற்றால் அலங்கரிக்கின்றனர். அவர்கள் தீயின் மீது நடந்து, தியாகத்தின் அடையாளமான தசியாவை, மாதத்தின் கடைசி ஐந்து நாட்களில் கிராமத்தின் தெருக்களில் அழைத்துச் செல்கிறார்கள்.

எப்போதும் போல, இந்த ஆண்டும் கிராம மக்கள் அருகில் உள்ள மசூதியில் இருந்து இஸ்லாமிய குரு ஒருவரை ஏழு நாட்களுக்கு மசூதியில் பிரார்த்தனை மற்றும் சடங்குகளை நடத்த அழைத்துள்ளனர். அவருக்கு கிராம மக்கள் விருந்தளிக்கின்றனர்.  மேலும் அவருக்கு தங்குமிடமும் வழங்கப்படுகிறது. அவரது அனைத்து தேவைகளும் அவர்களால் கவனிக்கப்படுகின்றன.

இந்த காலகட்டத்தைத் தவிர, மசூதியைக் கவனித்துக்கொள்பவர் இந்துப் பூசாரி யல்லப் நாயக்கர் மற்றும் கிராமவாசிகள் தினமும் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். ஹிரேபிதனூரில் குருபா மற்றும் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் வசிக்கின்றனர்.

ரமலான் மாதத்திற்குப் பிறகு இஸ்லாமிய நாட்காட்டியின் இரண்டாவது புனிதமான மாதமான மொஹரம் மாதத்தின் இந்த நாட்களில், ஹெரிபிதனூர் தெருக்கள் கர்பல் நடனம், கயிறு கலை மற்றும் தீயில் நடக்கும் சடங்கு போன்ற கலைகள் நடத்தப்படுகின்றன.கடந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மகாந்தேஷ் கவுஜலகி மசூதி கட்டிடத்தை புதுப்பிக்க 8 லட்சம் ரூபாய் அனுமதித்தார்.

முஹமது நபியின் பேரனுக்காக மொஹரம் தொடர்பான துக்க சடங்குகளை ஏற்பாடு செய்யும் பாரம்பரியம் நூற்றாண்டு பழமையானது என்று உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

பாஜக எம்எல்ஏவை தாக்கிய கும்பல்.. தலைவர்கள் சந்திக்கவே வரவில்லை - மனைவி பகீர் குற்றசாட்டு

Follow Us:
Download App:
  • android
  • ios