பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரிய அறிவிப்பை வெளியிடுவார் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரிய அறிவிப்பை வெளியிடுவார் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இலங்கைக்கு கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: அதானி குழும நிறுவங்களில் மேலும் முதலீடுகளை அதிகரித்த எல்ஐசி!!

இந்த நிலையில் இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து நிதியமைச்சர் தனது ஜப்பானிய பிரதிநிதி மற்றும் பிரான்ஸ் நிதியமைச்சின் மூத்த அதிகாரி ஒருவருடன் நாளை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப் ஆகிய இரு நாடுகளின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இலங்கைக்கு கடன் வழங்கிய மூன்று நாடுகளின் நிதியமைச்சர்கள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.

இதையும் படிங்க: பதிண்டா ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு! - சக ராணுவ வீரர் கைது!

ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை நாளை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கும் என ஜப்பானின் நிதி அமைச்சின் அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் மேற்கோள் காட்டியுள்ளது. கடன் வழங்கும் மூன்று நாடுகளும் இலங்கைக்கான கடன் மறுகட்டமைப்புக்காக கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களுடன் உரையாடும் போது, சீதாராமன் ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி மற்றும் பிரெஞ்சு நிதித் துறையின் இயக்குநர் ஜெனரல் புருனோ லு மைரே ஆகியோருடன் இருப்பார்.