கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், இனி அரசு வேலைகளுக்கு தகுதியானவர்கள் என்று விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், திருத்தப்பட்ட அளவுகோலின்படி இனி அரசு வேலைகளுக்கு தகுதியானவர்கள் என்று விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "வலுவான விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு, அடிமட்ட அளவில் திறமைகளை வளர்ப்பது மற்றும் விளையாட்டை லாபகரமான மற்றும் சாத்தியமான வாழ்க்கைத் தேர்வாக மாற்றுவது" என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பார்வைக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

GGT vs RCBW: கடைசியாக கிடைத்த வெற்றி – மகிழ்ச்சியோடு கொண்டாடும் குஜராத் ஜெயிண்ட்ஸ்!

தொடர்ந்து பேசிய அவர் “ விளையாட்டு அமைச்சகம், "அரசு வேலை தேடும் விளையாட்டு வீரர்களுக்கான தகுதி அளவுகோல்களில் திருத்தங்களை செய்துள்ளது. இந்த அற்புதமான நடவடிக்கை காரணமாக இனி பல்கலைக்கழகம், பாரா மற்றும் குளிர்கால விளையாட்டுப் போட்டி என அனைத்து கேலோ விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலைகளை பெறுவதற்கான தகுதியை விரிவுபடுத்துகிறது. மேலும், விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகள் பல்வேறு விளையாட்டுகளில் உள்ளடக்கத்தை உறுதிசெய்ய தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.

2 கை இல்லாத மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் அமீர் ஹூசைனுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின் – வைரலாகும் வீடியோ!

மேலும் "இந்த திருத்தப்பட்ட விதிகள் நம் நாட்டை ஒரு விளையாட்டு வல்லரசாக மாற்றுவதில் நமது விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார்.

கேலோ இந்தியா விளையாட்டுகள் முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அடிமட்ட அளவில் விளையாட்டு கலாச்சாரத்தை புத்துயிர் பெறுவதற்கான மோடி அரசாங்கத்தின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.