கர்நாடகா தேர்தல் லைவ் அப்டேட்: வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள் !!

Karnataka Assembly Election 2023 LIVE Updates

கர்நாடக மாநிலத்தின் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. 

8:30 PM IST

”வெற்றி உறுதி”.. கொண்டாட்டத்தில் காங்கிரஸ்.! 2வது இடம் யாருக்கு பாஜக Vs ஜேடிஎஸ்? எக்சிட் போல் முடிவு என்ன?

கர்நாடகா எக்சிட் போல் 2023ல் பாஜக, காங்கிரஸ், ஜேடி(எஸ்) ஆகியவற்றின் முழுமையான கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்க்கலாம்.

மேலும் படிக்க

7:42 PM IST

கர்நாடகாவில் அரியணை ஏறுவது யார்.? ஜன் கி பாத் - ஏசியாநெட்டின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு

கர்நாடகாவில் தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த எக்சிட் போலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது. ஜன் கி பாத் - ஏசியாநெட்டின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு பற்றி இங்கு காணலாம்.

மேலும் படிக்க

7:41 PM IST

கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !!

கர்நாடகாவில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

4:01 PM IST

ஜனநாயகக் கடமையைச் செய்த 100 வயது மூதாட்டி

கர்நாடக மாநிலம் எல்லப்பூரில் 100 வயதான மூதாட்டி சுப்பக்கா கோமாரா நேரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

80 வயதைக் கடந்தவர்கள் விரும்பினால் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வசதி இந்தத் தேர்தலில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

3:51 PM IST

இன்னும் 2 மணிநேரம் மட்டும்... இதுவரை வாக்குப்பதிவு நிலவரம் எப்படி?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 9 மணி வரையான முதல் இரண்டு மணிநேரத்தில் 7.83 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகளும் பகல் 1 மணி நிலவரப்படி 44.16 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் சுமார் 2 மணி நேரம் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

3:42 PM IST

வாக்குப்பதிவுக்குப் பின் வெளியாகும் எக்ஸிட் போல் கணிப்புகள்

கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து, CVoter, Lokniti-CSDS, Axis My India மற்றும் Today's Chanakya உள்ளிட்ட பல ஏஜென்சிகள், தொலைக்காட்சி சேனல்களில் தங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக் காத்திருக்கின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் போட்டி நிலவுகிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், நடைபெறும் தேர்தல் என்பதால் காங்கிரஸ் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

3:29 PM IST

காங்கிரஸ் ஜேடி(எஸ்) ஆதரவாளர்கள் இடையே மோதல்

செவ்வாய்க்கிழமை இரவு மங்களூரு வடக்கு பகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் பி ஏ மொகிதீன் பாவாவின் ஆதரவாளர்கள் தங்களைத் தாக்கியதாக காங்கிரஸ் தொண்டர்கள் பாஜ்பே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதற்கு ஜேடிஎஸ் தரப்பிலும் எதிர்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த நிஜாம், ஹஷர் ஆகிய இரண்டு காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3:21 PM IST

திருமணம் முடிந்த கையோடு வாக்களிக்க வந்த தம்பதி

பெங்களூருவின் நெலமங்களாவில் டாக்டர் சின்மயி - மனோஜ்குமார் ஜோடி திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்களித்தனர்.

 

3:15 PM IST

சிலிண்டரைப் பார்த்துவிட்டு ஓட்டு போடுங்கள்: டி.கே. சிவக்குமார் வேண்டுகோள்

"அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து காஸ் சிலிண்டர்களைப் ஒரு முறை பார்த்துவிட்டு வாக்களிக்கவும். வாக்குச்சாவடிக்கு வெளியே ஒரு காஸ் சிலிண்டரை வைத்து அதற்கு மாலை அணிவிக்குமாறு எங்கள் கட்டியினரை அறிவுறுத்தியுள்ளேன்" என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பாஜக அரசு தவறிவிட்டதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

2:58 PM IST

எக்ஸிட் போல் கணிப்புகளே பாஜக வெற்றியை பிரதிபலிக்கும்: எடியூரப்பா உறுதி

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா பாஜக தெளிவான பெரும்பான்மையைப் பெறும் என்றும் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளிலேயே அதைப் பார்க்க முடியும் என்றும் கூறியுள்ளார். சிவமோகா மாவட்டம் ஷிகாரிபுரா நகரில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார். அப்போது ஷிகாரிபுராவில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திராவும் உடன் இருந்தார்.

2:50 PM IST

காங்கிரஸ் 60 சதவீதம் ஓட்டுகளைப் பெறும்: சித்தராமையா எதிர்பார்ப்பு

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 60 சதவீத வாக்குகளைப் பெற்று 130 முதல் 160 இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். வருணாவில் வாக்களிக்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, மாநிலத்தில் காங்கிரஸ் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். "வாக்களிப்பதில் உற்சாகம் தெரிகிறது. பாராட்டுக்குரிய வகையில் வாக்குப்பதிவுக்கு அதிக அளவு மக்கள் வருகை தந்துகொண்டிருக்கின்றனர்" என்று அவர் கூறினார்.

2:03 PM IST

ராம்நகரில் குமாரசாமி குடும்பத்துடன் வாக்குப்பதிவு

கர்நாடகாவில் ஜேடிஎஸ் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி ராம்நகரில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். பிடாதி பேரூராட்சிக்கு உட்பட்ட கெட்டிகனஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு ஜூனியர் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார். "குடும்பத்துடன் வந்து வாக்களித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். ஜனநாயகத்தை வெல்ல அனைவரும் சரியாக வாக்களிக்க வேண்டும்" என்று ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்தார்.

1:53 PM IST

பெங்களூருவில் வாக்குப்பதிவு மந்தம்

பெங்களூருவில் காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. நண்பகல் 1 மணி நிலவரப்படி 30 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

1:51 PM IST

முன்னாள் முதல்வர் சித்தராமையா வாக்குப்பதிவு

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா மைசூரு மாவட்டம் சித்தராமனஹூண்டியில் வாக்களித்தார். சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

1:47 PM IST

ஹொன்னாவரில் சுக்ரி கவுடா வாக்குப்பதிவு செய்தார்

பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் சுக்ரி கவுடா ஹொன்னாவரில் வாக்கு செலுத்தினார். இவர் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக ஹொன்னாவர் சென்றிருந்தபோது, அவரை ஆசிர்வதித்தார். அந்த வீடியோ அப்போது வைரலானது.

1:34 PM IST

வாக்குப்பதிவு நிலவரம் - 1 மணி வரை

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 1 மணி வரை 44.16 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. முதல் ஆறு மணி நேரத்தில், கடலோர மாவட்டமான உடுப்பியில் அதிகபட்சமாக 47.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைநகர் பெங்களூரு மிகக் குறைந்த அளவே வாக்குகள் (29.41 சதவீதம்) பதிவு செய்யப்பட்டுள்ளன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1:31 PM IST

வாக்கு செலுத்த வந்த 2 பேர் மரணம்

ஹாசன் மற்றும் பெல்காம் மாவட்டங்களில் வாக்களிக்க வந்த இரண்டு பேர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

Karnataka Elections: பெல்காம், ஹாசனில் வாக்களிக்க வந்த 2 பேர் மாரடைப்பால் மரணம்

1:09 PM IST

மணக்கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்த ஜோடி

ஹவேரி மாவட்டம் ராணிபென்னுருவில் புதிதாகத் திருமணமான தம்பதிகள் மணக்கோலத்திலேயே வாக்குச்சாவடிக்குச் சென்று தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.

1:01 PM IST

உடுப்பியில் அதிகபட்ச வாக்குப்பதிவு

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் நான்கு மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலோர மாவட்டமான உடுப்பியில் 30.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மிகக் குறைவான வாக்குப்பதிவு சாமராஜநகர் மாவட்டத்தில் (16.77 சதவீதம்) பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12:06 PM IST

முன்னாள் கிரிகெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் வாக்குப்பதிவு

கர்நாடகா சட்டசபை தேர்தலை முன்னிட்டு மைசூரில் இருக்கும் குவெம்பு நகரா பகுதியில் வாக்களிக்க வந்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத்.

11:55 AM IST

டி.கே. சிவக்குமார் வாக்குப்பதிவு செய்தார்

கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் கனகபுரா தொகுதி வேட்பாளருமான டி.கே. சிவக்குமார் தன் சகோதரர் டி.கே. சுரேஷ் உடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.

11:40 AM IST

வாக்குப்பதிவு - 11 மணி நிலவரம்

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக 9 மணி வரை 8.2% சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், அடுத்த இரண்டு மணிநேரத்தில் வாக்குப்பதிவு சதவீதம் கூடியுள்ளது.

11:18 AM IST

தனித்து ஆட்சி அமைப்போம்: டி.கே. சிவக்குமார் நம்பிக்கை

"தேர்தலுக்குப் பின் ஜேடிஎஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க மாட்டோம். பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கும்" என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

11:14 AM IST

ஜெகதீஷ் ஷெட்டர் குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு

கர்நாடக தேர்தல்: பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிரும் ஜெகதீஷ் ஷெட்டர் குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு செய்தார். ஹூப்ளி குசுகல் சாலையில் உள்ள எஸ்பிஐ ஆபீசர்ஸ் சொசைட்டி பள்ளியில் அமைக்கப்பபட்டுள்ள வாக்குச் சாவடி எண் 122 இல் வாக்களித்துள்ளனர். "தொகுதியின் வளர்ச்சிக்காக வாக்களித்துள்ளேன், நீங்களும் தவறாமல் வாக்களியுங்கள்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

10:50 AM IST

ராகுல் காந்தி ட்வீட்

முற்போக்கான மற்றும் '40 சதவீத கமிஷன் இல்லாத' மாநிலத்தை உருவாக்க கர்நாடக மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். அவர் இன்று இந்தியில் பதிவிட்டுள்ள ஒரு ட்வீட்டில், "அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10:36 AM IST

யலபுர்காவில் பெண்கள் அதிக அளவில் வாக்குப்பதிவு செய்கின்றனர்

கொப்பல் மாவட்டம் யலபுர்கா சட்டமன்றத் தொகுதியின் பெனகல் கிராமத்தின் வாக்குச் சாவடி எண் 224 இல் ஏராளமான பெண் வாக்காளர்கள் வந்து வாக்கு செலுத்திச் செல்கின்றனர்.

10:31 AM IST

வருணாவில் 11% வாக்குகள் பதிவு

11 தொகுதிகளை கொண்ட மைசூரு மாவட்டத்தில் வருணா வாக்கு சதவீதம் 11 சதவீதத்தை தாண்டியுள்ளது. வருணா தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

10:29 AM IST

வாக்கு செலுத்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கர்நாடக தேர்தல்: பெங்களூரு ஜெயநகர் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

10:19 AM IST

ஹூப்ளியில் மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி

மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி ஹூப்ளியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். வாக்களித்த பின்பு பேட்டி அளித்த அமைச்சர், "இந்த ஜனநாயகத் திருவிழாவை மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

10:17 AM IST

மணமகள் வாக்கு!

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள காபு சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் (எண் 187) வாக்களிக்க வந்த மணமகள் மெலிதா சரஸ்

10:08 AM IST

வாக்குப்பதிவு செய்த முதல்வர் பொம்மை

முதல்வர் பசவராஜ் பொம்மை, அவரது மகள் அதிதி, மகன் பாரத் பொம்மை ஆகியோர் ஹாவேரி மாவட்டம் ஷிகானில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தனர்.

10:05 AM IST

பழைய விவரத்தைக் காட்டிய வாக்குப்பதிவு இயந்திரம்

தாலுகா சங்கனக்கல்லு கிராமத்தில் அரசு பள்ளியில் அமைந்துள்ள 2வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. வாக்குப்பதிவு எந்திரத்தை ஸ்டார்ட் செய்யும் போது, இயந்திரம் பழைய புள்ளிவிவரங்களைக் காட்டியது. வேட்பாளர் 45 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறுதியில், அதிகாரிகள், பழைய விவரங்களை அழித்துவிட்டு, இயந்திரத்தை மீண்டும் ஸ்டார்ட் செய்தனர். வாக்குப்பதிவு இயந்திரம் தயாராகும் வரை மக்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

9:54 AM IST

வாக்களிக்க முடியாமல் கதறி அழுத முதியவர்

யம்கன்மரடி தொகுதியில் உள்ள ஹோசா வந்தமுரி கிராமத்தைச் சேர்ந்த 89 வயதான சத்யப்பா லக்கப்பா கிலராகி, வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் கதறி அழுதார்.

9:48 AM IST

வாக்களிக்க அமெரிக்காவில் இருந்து வந்த பெண்

உத்தர கர்நாடக மாநிலம் சிர்சியில் ஜனநாயகக் கடமையைச் செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து வந்த இளம்பெண் அஸ்வின் ராஜசேகா பட்.

9:42 AM IST

9 மணி வரை 8 சதவீதம் வாக்குப்பதிவு

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் இரண்டு மணிநேரம் வரையிலான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகியுள்ளது. அதன்படி காலை 9 மணி வரை 7.83 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

​​

9:37 AM IST

பெல்லாரியில் 8.5 சதவீதம் வாக்குகள் பதிவு

பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் காலை 9 மணி வரை 8.554 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

9:31 AM IST

உடுப்பியில் 12% வாக்குப்பதிவு

உடுப்பி  இதுவரை 12 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவத் தகவல் கிடைத்துள்ளது.

9:30 AM IST

ஆர்வமுடன் வாக்களிக்க வரும் முதியவர்கள்

முதல் முறையாக 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு வீட்டிலேயே வாக்களிக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல முதிய வாக்களார்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்த ஓட்டு போட்டுச் செல்கின்றனர்.

9:25 AM IST

முதல்வர் பொம்மை ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜை

முதல்வர் பசவராஜ் பொம்மை ஹூப்ளியில் உள்ள பார்ஷ்வ பத்மாலயா ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். அவருடன் அவரது மகன் பாரத் மற்றும் மகள் அதிதியும் இருந்தனர்.

9:16 AM IST

பெங்களூருவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு

பெங்களூரு வடக்கு, கிழக்கு மற்றும் சென்டரல் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை எனத் தகவல்.

9:12 AM IST

சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு

பாதுகாப்புப் பணியில் 1.60 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமரா மூலம் வாக்குப்பதிவை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

9:06 AM IST

வாக்களிக்க வந்த மணப்பெண்

சிக்கமகளூர் மாவட்டம் முடிகெரே சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாகோனஹள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் (எண் 165) மணப்பெண் ஒருவர் வாக்களித்தார்.

8:48 AM IST

மோடி மேஜிக் வெற்றியைக் கொடுக்கும்: எடியூரப்பா மகன் நம்பிக்கை

"மோடி மேஜிக் எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுக்கும். இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் 130 இடங்களில் வெற்றி பெறுவோம். லிங்காயத் சமூகம் மட்டுமின்றி மற்ற அனைத்து சமூகத்தினரும் பாஜகவுடன் உள்ளனர். தேர்தலில் காங்கிரஸ் படுமோசமாக தோற்கும்" என முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரர் கூறியுள்ளார். அவர் வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

8:44 AM IST

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி - சுதா மூர்த்தி

பெங்களூரில் வாக்களித்த பின்னர் பேட்டி அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, "முதலில், வாக்களிக்க வேண்டும். பிறகு இது நல்லது, அது நல்லதல்ல என்று சொல்லலாம். அதைச் செய்யாவிட்டால் நமக்கு விமர்சிக்க உரிமை இல்லை. நமது இளைஞர்களால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 0.1% நேரத்தை வாக்களிக்க செலவிட முடியாவிட்டால், சட்டமன்ற உறுப்பினர்களை குறை கூறுவது எப்படி?" என்று கேள்வி எழுப்பினார். அவர் மனைவி சுதா மூர்த்தியும் அவருடன் வந்து வாக்களித்தார். "தங்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டு இளைஞர்கள் முன்கூட்டிய வந்து வாக்களிக்க முன்வரவேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.

8:25 AM IST

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பெங்களூரு ஜெயநகரில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் வாக்களிக்கிறார்.

8:23 AM IST

ராவுச்சூரில் கூட்டம்

ராவுச்சூரில் உள்ள வாக்குச் சாவடிகளில் பெரும் கூட்டம் காணப்படுகிறது. ஏராளமான மக்கள் வாக்களிக்கக் காத்திருக்கின்றனர்.

8:14 AM IST

'சித்தராமையா முதல்வர் ஆவார்!'

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் படித்த வகுப்புத் தோழரான மகாதேவா, தனது நண்பர் மீண்டும் முதல்வராக வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

8:11 AM IST

ஹூப்ளியில் பொம்மை

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஹூப்ளியில் வாக்குப்பதிவு செய்தார். "எங்கள் கட்சி பிரச்சாரத்தை நடத்திய விதம் மற்றும் மக்கள் எதிர்வினையாற்றிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடகாவின் வளர்ச்சிக்கு மக்கள் வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.

8:05 AM IST

ஆட்சி அமைப்போம்: எடியூரப்பா நம்பிக்கை

வாக்குப்பதிவு செய்த பின் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பா, "விஜயேந்திரா (எடியூரப்பாவின் மகன்) 40,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறார். நாங்கள் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்போம், அதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

8:00 AM IST

வாக்குச்சாவடி எண் 222 இல் வாக்குப்பதிவு தாமதம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தட்சிண கன்னடாவின் சுல்லியா தொகுதியில் உள்ள கூனட்காவில் உள்ள வாக்குச் சாவடி எண் 222 இல் வாக்குப்பதிவு சற்று தாமதமாகத் ஆரம்பித்தது. 7 மணிக்குப் பதிலாக காலை 7.20 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

7:54 AM IST

ஜெயநகர் வாக்குச்சாவடியில்

ஜெயநகரில் பிஎஸ்ஈ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஏராளமான வாக்காளர்கள் அதிகாலை முதலே வந்து வாக்களித்துச் செல்கின்றனர்.

7:51 AM IST

நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்குப்பதிவு

நடிகர் பிரகாஷ் ராஜ் சாந்தி நகரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்

7:44 AM IST

நட்சத்திர வேட்பாளர்கள்

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சிகான் தொகுதியிலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும் டி.கே. சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திலா ஷிகாரிபுராவில் களமிறங்குகிறார்.

7:33 AM IST

மதுக்கடைகள் இயங்காது

கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் மே 13 நள்ளிரவு வரை மதுபான கடைகள் மூடப்படுகின்றன. தலைநகர் பெங்களூருவில் மே 8ஆம் தேதி மாலை 5 மணி முதல் மதுபான கடைகள் மற்றும் மதுபானம் வழங்கும் உணவகங்கள் மூடப்பட்டன.

மேலும் படிக்க

கர்நாடக தேர்தல் 2023 : இந்த நாட்களில் மதுபான கடைகள் இயங்காது.. வெளியான முக்கிய அறிவிப்பு

7:29 AM IST

இளம் வாக்காளர்கள் குறைவு!

2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது கர்நாடக மாநிலத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்களில் இளைஞர்கள் எண்ணிக்கை 12 சதவீதம் குறைந்துள்ளது. 80 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 35 சதவீதம் கூடியுள்ளது.

மேலும் படிக்க

கர்நாடகாவில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு! 5 ஆண்டுகளில் 12 சதவீதம் சரிவு!

7:11 AM IST

58,282 வாக்குச் சாவடிகள்

தேர்தலுக்கான 58,282 வாக்குச் சாவடிகளில் 24,063 நகர்ப்புறங்களிலும், 34,219 கிராமப்புறங்களிலும் உள்ளன. வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்க, 1,320 வாக்குச் சாவடிகளை பெண்களும், 224 வாக்குச் சாவடிகளை இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் நிர்வகிக்கின்றனர்.

7:10 AM IST

15 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் கூடுதலாக 15,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேர்தல் பணிகளுக்காக மட்டும் சுமார் 3,700 பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

7:04 AM IST

5.31 கோடி வாக்காளர்கள்

மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 2.62 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.59 கோடி பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 4,699 பேரும் உள்ளனர். நூறு வயதைக் கடந்த வாக்காளர்கள் 16,976 பேரும், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12.15 லட்சம் பேரும் உள்ளனர். 9.17 லட்சம் பேர் முதல்முறை வாக்கு செலுத்த உள்ளனர்.

7:02 AM IST

கர்நாடக தேர்தல் - வாக்குப்பதிவு தொடக்கம்

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மாநிலத்தின் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கும் வாக்குப்பதி்வு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவுக்கு வரவுள்ளது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

8:30 PM IST:

கர்நாடகா எக்சிட் போல் 2023ல் பாஜக, காங்கிரஸ், ஜேடி(எஸ்) ஆகியவற்றின் முழுமையான கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்க்கலாம்.

மேலும் படிக்க

7:42 PM IST:

கர்நாடகாவில் தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த எக்சிட் போலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது. ஜன் கி பாத் - ஏசியாநெட்டின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு பற்றி இங்கு காணலாம்.

மேலும் படிக்க

7:41 PM IST:

கர்நாடகாவில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

4:03 PM IST:

கர்நாடக மாநிலம் எல்லப்பூரில் 100 வயதான மூதாட்டி சுப்பக்கா கோமாரா நேரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

80 வயதைக் கடந்தவர்கள் விரும்பினால் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வசதி இந்தத் தேர்தலில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

3:55 PM IST:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 9 மணி வரையான முதல் இரண்டு மணிநேரத்தில் 7.83 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகளும் பகல் 1 மணி நிலவரப்படி 44.16 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் சுமார் 2 மணி நேரம் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

3:57 PM IST:

கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து, CVoter, Lokniti-CSDS, Axis My India மற்றும் Today's Chanakya உள்ளிட்ட பல ஏஜென்சிகள், தொலைக்காட்சி சேனல்களில் தங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக் காத்திருக்கின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் போட்டி நிலவுகிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், நடைபெறும் தேர்தல் என்பதால் காங்கிரஸ் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

3:29 PM IST:

செவ்வாய்க்கிழமை இரவு மங்களூரு வடக்கு பகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் பி ஏ மொகிதீன் பாவாவின் ஆதரவாளர்கள் தங்களைத் தாக்கியதாக காங்கிரஸ் தொண்டர்கள் பாஜ்பே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதற்கு ஜேடிஎஸ் தரப்பிலும் எதிர்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த நிஜாம், ஹஷர் ஆகிய இரண்டு காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3:21 PM IST:

பெங்களூருவின் நெலமங்களாவில் டாக்டர் சின்மயி - மனோஜ்குமார் ஜோடி திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்களித்தனர்.

 

3:16 PM IST:

"அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து காஸ் சிலிண்டர்களைப் ஒரு முறை பார்த்துவிட்டு வாக்களிக்கவும். வாக்குச்சாவடிக்கு வெளியே ஒரு காஸ் சிலிண்டரை வைத்து அதற்கு மாலை அணிவிக்குமாறு எங்கள் கட்டியினரை அறிவுறுத்தியுள்ளேன்" என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பாஜக அரசு தவறிவிட்டதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

2:58 PM IST:

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா பாஜக தெளிவான பெரும்பான்மையைப் பெறும் என்றும் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளிலேயே அதைப் பார்க்க முடியும் என்றும் கூறியுள்ளார். சிவமோகா மாவட்டம் ஷிகாரிபுரா நகரில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார். அப்போது ஷிகாரிபுராவில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திராவும் உடன் இருந்தார்.

2:50 PM IST:

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 60 சதவீத வாக்குகளைப் பெற்று 130 முதல் 160 இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். வருணாவில் வாக்களிக்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, மாநிலத்தில் காங்கிரஸ் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். "வாக்களிப்பதில் உற்சாகம் தெரிகிறது. பாராட்டுக்குரிய வகையில் வாக்குப்பதிவுக்கு அதிக அளவு மக்கள் வருகை தந்துகொண்டிருக்கின்றனர்" என்று அவர் கூறினார்.

2:06 PM IST:

கர்நாடகாவில் ஜேடிஎஸ் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி ராம்நகரில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். பிடாதி பேரூராட்சிக்கு உட்பட்ட கெட்டிகனஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு ஜூனியர் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார். "குடும்பத்துடன் வந்து வாக்களித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். ஜனநாயகத்தை வெல்ல அனைவரும் சரியாக வாக்களிக்க வேண்டும்" என்று ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்தார்.

1:54 PM IST:

பெங்களூருவில் காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. நண்பகல் 1 மணி நிலவரப்படி 30 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

1:51 PM IST:

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா மைசூரு மாவட்டம் சித்தராமனஹூண்டியில் வாக்களித்தார். சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

1:47 PM IST:

பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் சுக்ரி கவுடா ஹொன்னாவரில் வாக்கு செலுத்தினார். இவர் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக ஹொன்னாவர் சென்றிருந்தபோது, அவரை ஆசிர்வதித்தார். அந்த வீடியோ அப்போது வைரலானது.

2:53 PM IST:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 1 மணி வரை 44.16 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. முதல் ஆறு மணி நேரத்தில், கடலோர மாவட்டமான உடுப்பியில் அதிகபட்சமாக 47.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைநகர் பெங்களூரு மிகக் குறைந்த அளவே வாக்குகள் (29.41 சதவீதம்) பதிவு செய்யப்பட்டுள்ளன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1:31 PM IST:

ஹாசன் மற்றும் பெல்காம் மாவட்டங்களில் வாக்களிக்க வந்த இரண்டு பேர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

Karnataka Elections: பெல்காம், ஹாசனில் வாக்களிக்க வந்த 2 பேர் மாரடைப்பால் மரணம்

1:09 PM IST:

ஹவேரி மாவட்டம் ராணிபென்னுருவில் புதிதாகத் திருமணமான தம்பதிகள் மணக்கோலத்திலேயே வாக்குச்சாவடிக்குச் சென்று தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.

1:01 PM IST:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் நான்கு மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலோர மாவட்டமான உடுப்பியில் 30.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மிகக் குறைவான வாக்குப்பதிவு சாமராஜநகர் மாவட்டத்தில் (16.77 சதவீதம்) பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1:15 PM IST:

கர்நாடகா சட்டசபை தேர்தலை முன்னிட்டு மைசூரில் இருக்கும் குவெம்பு நகரா பகுதியில் வாக்களிக்க வந்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத்.

11:55 AM IST:

கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் கனகபுரா தொகுதி வேட்பாளருமான டி.கே. சிவக்குமார் தன் சகோதரர் டி.கே. சுரேஷ் உடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.

12:58 PM IST:

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக 9 மணி வரை 8.2% சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், அடுத்த இரண்டு மணிநேரத்தில் வாக்குப்பதிவு சதவீதம் கூடியுள்ளது.

11:18 AM IST:

"தேர்தலுக்குப் பின் ஜேடிஎஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க மாட்டோம். பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கும்" என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

11:14 AM IST:

கர்நாடக தேர்தல்: பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிரும் ஜெகதீஷ் ஷெட்டர் குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு செய்தார். ஹூப்ளி குசுகல் சாலையில் உள்ள எஸ்பிஐ ஆபீசர்ஸ் சொசைட்டி பள்ளியில் அமைக்கப்பபட்டுள்ள வாக்குச் சாவடி எண் 122 இல் வாக்களித்துள்ளனர். "தொகுதியின் வளர்ச்சிக்காக வாக்களித்துள்ளேன், நீங்களும் தவறாமல் வாக்களியுங்கள்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

10:50 AM IST:

முற்போக்கான மற்றும் '40 சதவீத கமிஷன் இல்லாத' மாநிலத்தை உருவாக்க கர்நாடக மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். அவர் இன்று இந்தியில் பதிவிட்டுள்ள ஒரு ட்வீட்டில், "அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10:36 AM IST:

கொப்பல் மாவட்டம் யலபுர்கா சட்டமன்றத் தொகுதியின் பெனகல் கிராமத்தின் வாக்குச் சாவடி எண் 224 இல் ஏராளமான பெண் வாக்காளர்கள் வந்து வாக்கு செலுத்திச் செல்கின்றனர்.

10:31 AM IST:

11 தொகுதிகளை கொண்ட மைசூரு மாவட்டத்தில் வருணா வாக்கு சதவீதம் 11 சதவீதத்தை தாண்டியுள்ளது. வருணா தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

10:29 AM IST:

கர்நாடக தேர்தல்: பெங்களூரு ஜெயநகர் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

10:19 AM IST:

மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி ஹூப்ளியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். வாக்களித்த பின்பு பேட்டி அளித்த அமைச்சர், "இந்த ஜனநாயகத் திருவிழாவை மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

10:40 AM IST:

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள காபு சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் (எண் 187) வாக்களிக்க வந்த மணமகள் மெலிதா சரஸ்

10:08 AM IST:

முதல்வர் பசவராஜ் பொம்மை, அவரது மகள் அதிதி, மகன் பாரத் பொம்மை ஆகியோர் ஹாவேரி மாவட்டம் ஷிகானில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தனர்.

10:05 AM IST:

தாலுகா சங்கனக்கல்லு கிராமத்தில் அரசு பள்ளியில் அமைந்துள்ள 2வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. வாக்குப்பதிவு எந்திரத்தை ஸ்டார்ட் செய்யும் போது, இயந்திரம் பழைய புள்ளிவிவரங்களைக் காட்டியது. வேட்பாளர் 45 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறுதியில், அதிகாரிகள், பழைய விவரங்களை அழித்துவிட்டு, இயந்திரத்தை மீண்டும் ஸ்டார்ட் செய்தனர். வாக்குப்பதிவு இயந்திரம் தயாராகும் வரை மக்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

9:54 AM IST:

யம்கன்மரடி தொகுதியில் உள்ள ஹோசா வந்தமுரி கிராமத்தைச் சேர்ந்த 89 வயதான சத்யப்பா லக்கப்பா கிலராகி, வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் கதறி அழுதார்.

9:49 AM IST:

உத்தர கர்நாடக மாநிலம் சிர்சியில் ஜனநாயகக் கடமையைச் செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து வந்த இளம்பெண் அஸ்வின் ராஜசேகா பட்.

9:46 AM IST:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் இரண்டு மணிநேரம் வரையிலான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகியுள்ளது. அதன்படி காலை 9 மணி வரை 7.83 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

9:37 AM IST:

பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் காலை 9 மணி வரை 8.554 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

9:32 AM IST:

உடுப்பி  இதுவரை 12 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவத் தகவல் கிடைத்துள்ளது.

9:30 AM IST:

முதல் முறையாக 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு வீட்டிலேயே வாக்களிக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல முதிய வாக்களார்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்த ஓட்டு போட்டுச் செல்கின்றனர்.

9:25 AM IST:

முதல்வர் பசவராஜ் பொம்மை ஹூப்ளியில் உள்ள பார்ஷ்வ பத்மாலயா ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். அவருடன் அவரது மகன் பாரத் மற்றும் மகள் அதிதியும் இருந்தனர்.

9:22 AM IST:

பெங்களூரு வடக்கு, கிழக்கு மற்றும் சென்டரல் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை எனத் தகவல்.

9:12 AM IST:

பாதுகாப்புப் பணியில் 1.60 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமரா மூலம் வாக்குப்பதிவை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

9:07 AM IST:

சிக்கமகளூர் மாவட்டம் முடிகெரே சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாகோனஹள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் (எண் 165) மணப்பெண் ஒருவர் வாக்களித்தார்.

8:48 AM IST:

"மோடி மேஜிக் எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுக்கும். இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் 130 இடங்களில் வெற்றி பெறுவோம். லிங்காயத் சமூகம் மட்டுமின்றி மற்ற அனைத்து சமூகத்தினரும் பாஜகவுடன் உள்ளனர். தேர்தலில் காங்கிரஸ் படுமோசமாக தோற்கும்" என முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரர் கூறியுள்ளார். அவர் வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

1:04 PM IST:

பெங்களூரில் வாக்களித்த பின்னர் பேட்டி அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, "முதலில், வாக்களிக்க வேண்டும். பிறகு இது நல்லது, அது நல்லதல்ல என்று சொல்லலாம். அதைச் செய்யாவிட்டால் நமக்கு விமர்சிக்க உரிமை இல்லை. நமது இளைஞர்களால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 0.1% நேரத்தை வாக்களிக்க செலவிட முடியாவிட்டால், சட்டமன்ற உறுப்பினர்களை குறை கூறுவது எப்படி?" என்று கேள்வி எழுப்பினார். அவர் மனைவி சுதா மூர்த்தியும் அவருடன் வந்து வாக்களித்தார். "தங்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டு இளைஞர்கள் முன்கூட்டிய வந்து வாக்களிக்க முன்வரவேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.

8:25 AM IST:

பெங்களூரு ஜெயநகரில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் வாக்களிக்கிறார்.

8:23 AM IST:

ராவுச்சூரில் உள்ள வாக்குச் சாவடிகளில் பெரும் கூட்டம் காணப்படுகிறது. ஏராளமான மக்கள் வாக்களிக்கக் காத்திருக்கின்றனர்.

8:15 AM IST:

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் படித்த வகுப்புத் தோழரான மகாதேவா, தனது நண்பர் மீண்டும் முதல்வராக வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

8:11 AM IST:

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஹூப்ளியில் வாக்குப்பதிவு செய்தார். "எங்கள் கட்சி பிரச்சாரத்தை நடத்திய விதம் மற்றும் மக்கள் எதிர்வினையாற்றிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடகாவின் வளர்ச்சிக்கு மக்கள் வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.

8:05 AM IST:

வாக்குப்பதிவு செய்த பின் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ். எடியூரப்பா, "விஜயேந்திரா (எடியூரப்பாவின் மகன்) 40,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறார். நாங்கள் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்போம், அதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

8:00 AM IST:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தட்சிண கன்னடாவின் சுல்லியா தொகுதியில் உள்ள கூனட்காவில் உள்ள வாக்குச் சாவடி எண் 222 இல் வாக்குப்பதிவு சற்று தாமதமாகத் ஆரம்பித்தது. 7 மணிக்குப் பதிலாக காலை 7.20 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

7:54 AM IST:

ஜெயநகரில் பிஎஸ்ஈ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஏராளமான வாக்காளர்கள் அதிகாலை முதலே வந்து வாக்களித்துச் செல்கின்றனர்.

7:51 AM IST:

நடிகர் பிரகாஷ் ராஜ் சாந்தி நகரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்

7:44 AM IST:

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சிகான் தொகுதியிலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும் டி.கே. சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திலா ஷிகாரிபுராவில் களமிறங்குகிறார்.

8:58 AM IST:

கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் மே 13 நள்ளிரவு வரை மதுபான கடைகள் மூடப்படுகின்றன. தலைநகர் பெங்களூருவில் மே 8ஆம் தேதி மாலை 5 மணி முதல் மதுபான கடைகள் மற்றும் மதுபானம் வழங்கும் உணவகங்கள் மூடப்பட்டன.

மேலும் படிக்க

கர்நாடக தேர்தல் 2023 : இந்த நாட்களில் மதுபான கடைகள் இயங்காது.. வெளியான முக்கிய அறிவிப்பு

8:59 AM IST:

2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது கர்நாடக மாநிலத்தில் ஒட்டுமொத்த வாக்காளர்களில் இளைஞர்கள் எண்ணிக்கை 12 சதவீதம் குறைந்துள்ளது. 80 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 35 சதவீதம் கூடியுள்ளது.

மேலும் படிக்க

கர்நாடகாவில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு! 5 ஆண்டுகளில் 12 சதவீதம் சரிவு!

7:11 AM IST:

தேர்தலுக்கான 58,282 வாக்குச் சாவடிகளில் 24,063 நகர்ப்புறங்களிலும், 34,219 கிராமப்புறங்களிலும் உள்ளன. வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்க, 1,320 வாக்குச் சாவடிகளை பெண்களும், 224 வாக்குச் சாவடிகளை இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் நிர்வகிக்கின்றனர்.

7:10 AM IST:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் கூடுதலாக 15,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேர்தல் பணிகளுக்காக மட்டும் சுமார் 3,700 பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

7:06 AM IST:

மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 2.62 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.59 கோடி பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 4,699 பேரும் உள்ளனர். நூறு வயதைக் கடந்த வாக்காளர்கள் 16,976 பேரும், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12.15 லட்சம் பேரும் உள்ளனர். 9.17 லட்சம் பேர் முதல்முறை வாக்கு செலுத்த உள்ளனர்.

7:45 AM IST:

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மாநிலத்தின் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கும் வாக்குப்பதி்வு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவுக்கு வரவுள்ளது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.