Asianet News TamilAsianet News Tamil

2028ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சொந்த ஜெட் மாதிரி ரெடி.. வெளியான சூப்பர் தகவல் !!

2028 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சொந்த இரட்டை எஞ்சின் போர் ஜெட் முன்மாதிரி தயாரித்து முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

India own Twin Engine Deck Based Fighter jet prototype by 2028
Author
First Published Oct 26, 2022, 6:07 PM IST

இந்தியாவின் சொந்த இரட்டை எஞ்சின் டெக் அடிப்படையிலான போர் ஜெட் Twin-Engine Deck-Based Fighter (TEDBF)-ன் வடிவமைப்பு மதிப்பாய்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், மேலும் முதல் மாதிரி அமைப்பு 2028 இல் வெளியிடப்படும் என்றும் மூத்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அதிகாரி நமது ஏசியாநெட் நியூஸ் நிறுவனத்திற்கு பிரத்யேக தகவலை அளித்தார்.

ஜூன் 2023க்குள் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் அனுமதியை டிஆர்டிஓ (DRDO) எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து நம்மிடம் பேசிய டிஆர்டிஓ திட்ட இயக்குனர் பி.தங்கவேல், ‘இதன் லேஅவுட் டிசைன் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. சூப்பர்சோனிக் விமானத்தின் செயல்திறனை மதிப்பிடும் வகையில் அதிவேக செயல்திறனுடன் உருவாக்கி வருகிறோம்.

சிஸ்டம் டிசைனுக்கான நிதியை கொண்டு வருகிறோம். மார்ச் மாதத்திற்குள் பூர்வாங்க வடிவமைப்பு மதிப்பாய்வு வேண்டும். PDRக்குப் பிறகு, இதற்கான வரைபடங்கள் உருவாக்கப்படும். 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் CCS அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் முதல் முன்மாதிரிக்கு 4 முதல் 4.5 ஆண்டுகள் ஆகலாம். ஏனெனில் கடற்படை வடிவமைப்பு வேறுபட்டது.

இதையும் படிங்க..சத்தீஸ்கர் முதல்வருக்கு விழுந்த சவுக்கடி!! அடேங்கப்பா, பயங்கர அடி - வெளியான பகீர் காரணம்

2031 அல்லது 2032 வாக்கில், TEDBF விமானம் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும்’ என்று கூறினார். இந்திய கடற்படைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதன் இறக்கைகளை மடித்து, ஏவுவதற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியும். மேக் 1.6 வேகத்தை எட்டும் திறனுடன், TEDBF போர் விமானங்கள் INS விக்ரமாதித்யா மற்றும் INS விக்ராந்தில் நிறுத்தப்படும். 16.3 மீட்டர் நீளம் கொண்ட இந்த போர் விமானம் பல பங்கு போர் விமானமாகவும் இருக்கும்.

போர் விமான ரோந்து, டெக் ஏவுகணை இடைமறிப்பு, விமானத்திலிருந்து வான்வழி போர், கப்பல் எதிர்ப்பு, தரைவழி தாக்குதல் வேலைநிறுத்தம் போன்றவை இதில் அடங்கும். இது மேம்பட்ட குறுகிய தூர ஏர்-டு ஏர் ஏவுகணை (ASRAM) மற்றும் அஸ்ட்ரா பியோண்ட் விஷுவல் ரேஞ்ச் (BVR) ஆகாயத்திலிருந்து வான் ஏவுகணை அமைப்புகளுடன் பொருத்தப்பட்டிருக்கும். இது இரண்டு GE F414 INS6 இன்ஜின்களில் இருந்து உந்து சக்தியைக் கொண்டிருக்கும்.

இந்தியாவின் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கப்படுவதற்கு முன்னதாக, ரஃபேல் (எம்) மற்றும் எஃப்/ஏ-18 சூப்பர் ஹார்னெட் பிளாக் III போர் விமானங்களை கடற்படை கவனித்து வருவதாக இந்திய கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்என் கோர்மேட் தெரிவித்திருந்தார்.

பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் (எம்) மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப்/ஏ-18 சூப்பர் ஹார்னெட் பிளாக் III ஆகியவை மாதங்களுக்கு முன்பு ஐஎன்எஸ் விக்ராந்தில் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா

இதையும் படிங்க..கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் அதிரடியாக களத்தில் குதித்த சிபிசிஐடி

Follow Us:
Download App:
  • android
  • ios