Asianet News TamilAsianet News Tamil

Kedarnath Helicopter Crash:உத்தரகாண்டில் சோகம்கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது: 6 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் குப்தகாசியிலிருந்து கேதார்நாத்துக்கு இன்று பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மலையில் விழுந்து நொறுங்கியது. இதில் 6 பேர் பலியானார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Helicopter crashed in Uttarakhand, killing seven people.
Author
First Published Oct 18, 2022, 1:11 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தில் குப்தகாசியிலிருந்து கேதார்நாத்துக்கு இன்று பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மலையில் விழுந்து நொறுங்கியது. இதில் 6 பேர் பலியானார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Helicopter crashed in Uttarakhand, killing seven people.

இந்த விபத்துக் குறித்து உத்தரகாண்ட் முதல்வரின் சிறப்பு முதன்மைச் செயலர் அபினவ் குமார் கூறுகையில் “ பட்டா குப்த்காசியிலிருந்து  இன்று காலை ஹெலிகாப்டர் ஒன்று 7 பக்தர்களுடன் கேதார்நாத்துக்கு புறப்பட்டது.

குஜராத் காந்திநகரில் நாளை பாதுகாப்பு துறை கண்காட்சி: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

Helicopter crashed in Uttarakhand, killing seven people.

ஆனால் சாட்டி வனப்பகுதியில் பறந்தபோது, ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது அப்போது தீப்பிளம்புகள் வந்ததாக அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மோசமான வானிலை, அதிகமான மஞ்சுமூட்டம் காரணமாக விபத்து நடந்திருக்கலாம். 

பில்கிஸ் பானு வழக்கு:குற்றவாளிகளை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு: அனுமதி கொடுத்த உள்துறை அமைச்சகம்

 

இந்த விபத்து கேதார்நாத் தாம் கோயிலில் இருந்து 2.கி.மீ தொலைவில் நடந்துள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு மீட்புப்படையினர் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்து துறையின் தகவலின்படி, “ முதல்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் பெல் 407 விடி-ஆர்பிஎன் வகையாகும். டெல்லியைச் சேர்ந்த பட்டியலிடப்படாத உரிமம் பெற்ற தனியார் நிறுவனத்துடையது. ஆர்யன் விமானப் போக்குவரத்து நிறுவனம் என்றபெயரில் இயங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் 41 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டனர்: ஐ.நா. அறிக்கை

 ஹெலிகாப்டர் புறப்பட்டு பறந்தபோது கேதார்நாத் அருகே 2 கி.மீ தொலைவில் வந்தபோது, கருட் சாத்தி வனப்பகுதியில் வந்தபோது ஹெலிகாப்டரின் பின்பகுதியில் திடீரென தீப்பிளம்புகள் உருவாகியதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். 

Helicopter crashed in Uttarakhand, killing seven people.

விபத்துஎவ்வாறு நடந்தது, இயந்திரக் கோளாறா என்பது குறித்து விசாரணையின் முடிவில் தெரியவரும். விமானத்தில் 2 விமானிகள் உள்ளிட்ட 7 பேர் பயணித்துள்ளனர். அனைவருமே உயிரிழந்திருக்கலாம் எனஅஞ்சப்படுகிறது” எனத் தெரிவித்தனர்

 

Follow Us:
Download App:
  • android
  • ios