சுருக்கம்
கூகுள் பே மற்றும் போன்பே மூலம் ரூ.2000க்கு மேல் பணம் அனுப்பினால் அதற்கு இனி 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் செய்யும் முறையை அமல்படுத்த மத்திய நிதியமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அப்படி எந்தத் திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசுத் தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது.
UPI transaction charges above 2000: இனி கூகுள் பே மற்றும் ஃபோன்பே மூலமாக ரூ.2000 பண பரிவர்த்தனை செய்தாலும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் செய்வது குறித்து மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் இது முற்றிலும் வதந்தி என்று மத்திய அரசு மறுத்துள்ளது.
UPI transaction charges above 2000 மக்கள் எதிர்ப்பு :
இந்தியாவில் UPI பரிவர்த்தனைகளுக்கு GST விதிக்கப்படலாம். ரூ.2,000க்கு அதிகமான UPI பரிவர்த்தனைகளுக்கு 5% GST விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், UPI மூலம் பணம் செலுத்தும் பல இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள். GST வசூலை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் இதுகுறித்து முடிவு எடுப்பார் ன சொல்லப்படுகிறது. இந்த திட்டம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிறிய வியாபாரிகள் மற்றும் சம்பளம் வாங்குபவர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அரசு, தற்போது அதற்கு வரி விதிப்பது சரியல்ல என்று அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: மொத்த கிராமத்துக்குமே செருப்பு வழங்கிய பவன் கல்யாண்... குவியும் பாராட்டுக்கள்
UPI transaction பணவரித்தனைக்கு ஜிஎஸ்டி :
நிதி அமைச்சகம் UPI பரிவர்த்தனைகள் மீது GST விதிக்க பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் இன்னும் பரிசீலனையில் உள்ளது. ரூ.2,000க்கு அதிகமான UPI பரிவர்த்தனைகளுக்கு 5% GST விதிக்கப்படலாம். கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு தற்போது 5% GST விதிக்கப்படுகிறது. அதேபோல UPI பரிவர்த்தனைகளுக்கும் விதிக்கப்படலாம். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்துவது குறைய வாய்ப்புள்ளது.
இந்த திட்டம் குறித்து CBIC அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். ரூ.2,000க்கு அதிகமான UPI பரிவர்த்தனைகளுக்கு 5% GST விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு UPI பயன்படுத்தும் போது இந்த வரி விதிக்கப்படலாம். தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான பரிவர்த்தனைகளுக்கு இந்த வரி பொருந்தாது என்று கூறப்படுகிறது. அதாவது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணம் அனுப்பும் போது இந்த வரி இருக்காது.
UPI transaction charges above 2000 நிபுணர்கள் கருத்து :
டெல்லி வரி ஆலோசகர் அன்ஷுல் மேத்தா கூறுகையில், "தனிப்பட்ட பரிமாற்றங்கள் மற்றும் வணிகப் பரிவர்த்தனைகள் மிகவும் வேறுபட்டவை. அமேசானில் ஒரு போன் அல்லது உணவகத்தில் உணவு வாங்கும் போது UPI பயன்படுத்தினால் வரி விதிக்கப்படலாம்." என்றார். இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், "டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிப்பதில் இருந்து அதற்கு வரி விதிப்பது வரை, இந்த அரசு U-டர்ன் எடுப்பதில் வல்லவர்" என்று பதிவிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கூறுகையில், "இது பணத்தைப் பற்றியது அல்ல. இது நடுத்தர வர்க்கத்தினரை மேலும் சுமையாக மாற்றுவது. இந்த நடவடிக்கை மக்களை மீண்டும் பணப் பரிவர்த்தனைகளுக்குத் தள்ளும். இது டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு எதிரானது" என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: walking mistakes சம்மரிலும் வாக்கிங் போறீங்களா? இந்த 8 விஷயங்களை தவிர்க்க மறந்துடாதீங்க
UPI transaction டிஜிட்டல் பரிவர்த்தனை பாதிக்கப்படும் :
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. UPI மூலம் ஒவ்வொரு மாதமும் சுமார் 13 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இதன் மதிப்பு பல லட்சம் கோடிகளைத் தாண்டும். சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை UPI மூலம் பணம் செலுத்துவதை மக்கள் விரும்புகின்றனர். UPI பரிவர்த்தனைகள் இலவசமாகவும், எளிமையாகவும் இருப்பதால் இந்த முறை பிரபலமாக உள்ளது. GST விதிக்கப்பட்டால், மக்கள் UPI பயன்படுத்துவதை நிறுத்த வாய்ப்புள்ளது.
UPI transaction charges above 2000 ஆர்பிஐ என்ன சொல்கிறது?
இந்த திட்டத்திற்கு RBI ஆதரவு தெரிவிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இலவசமாக இருக்க வேண்டும் என்று RBI விரும்புகிறது. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத RBI அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை எங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தடுக்கும் எந்த முடிவும் நாங்கள் இதுவரை செய்த வேலைகளுக்கு எதிராக இருக்கும்." என்றார். இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் GST கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்த திட்டம் குறித்து விவாதிக்கப்படலாம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஜூலை 1, 2025 முதல் புதிய வரி விதிக்கப்படலாம்.
UPI transaction இது வெறும் வதந்தியே - மத்திய அரசு மறுப்பு
இதுதொடர்பாக நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமான விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி , தவறான செய்தி, அடிப்படை ஆதாரம் இல்லாத செய்தியாகும். அப்படி ஒரு திட்டமே பரிசீலனையில் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்தும் இந்தியர்கள், இந்த திட்டம் குறித்து கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில்தான் நிதி அமைச்சகம் இதுகுறித்து விளக்கம் வெளியிட்டுள்ளது.