ஆந்திராவில் சிவகோடு கிராமத்தில், மீன்வளர்ப்பு குளம் வைத்திருக்கும் விவசாயி ஒருவர் தண்ணீரை இறைக்க மோட்டாரை இயக்கிய போது அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

ஆந்திரப் பிரதேசத்தின் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் சனிக்கிழமை காலை விவசாயி ஒருவர் தண்ணீரை இறைக்க மோட்டரை இயக்கினார். அப்போது, தண்ணீருடன், இயற்கை எரிவாயு நீரோடை பம்பிலிருந்து வெளியேறி தீப்பிடித்தது மற்றும் தீ 20 அடி உயரத்திற்கு சென்றது. இதனால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த சம்பவம் குறித்து பேசிய மாவட்ட தீயணைப்பு அதிகாரி பார்த்தசாரதி, "இது ஐந்து வருடங்கள் பழமையான ஆழ்துளை கிணறு என்றும், மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து விலகி உள்ளது என்றும் அவர் கூறினார். முழு பகுதியிலும் மீன்வளர்ப்பு குளங்கள் மட்டுமே உள்ளன. அதனால், அருகில் உள்ள கிராம மக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றார்.

தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தின் (ONGC) அதிகாரிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தால் அருகில் உள்ள மீன் குட்டைகள் சேதமடைவதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

யார்ரா நீங்க.? விலை உயரும் தக்காளியை பாதுகாக்கும் விஷ பாம்பு - ட்ரெண்டாகும் அதிர்ச்சி வீடியோ

“இந்தப் பகுதி கிருஷ்ணா-கோதாவரி படுகையில் நெருக்கமாக உள்ளது மற்றும் ONGC மற்றும் Gas Authority of India Limited (GAIL) எரிவாயு குழாய்கள் அந்த இடத்திலிருந்து (சம்பவம் நடந்த இடத்தில்) தொலைவில் செல்கிறது. இருப்பினும், எரிவாயு கசிவுக்கும் இந்த குழாய்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தீயணைப்பு அதிகாரி கூறினார்.

Scroll to load tweet…

மாலைக்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு போர்வெல் மூடப்பட்டது. இப்பகுதி மண்ணின் அடுக்குகளில் ஆழமான இயற்கை வாயுவைக் கொண்டுள்ளது. ஒருவேளை, மண்ணில் உள்ள போர்வெல் குழாயின் உறை உடைந்திருக்கலாம். இதன் விளைவாக எரிவாயு குழாய்க்குள் நுழைந்து போர்வெல்லிலிருந்து வெளியேறியிருக்கலாம் என்று கூறினார்.

ராஜ்யசபா எம்.பி ஆகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - இதை எதிர்பார்க்கவே இல்லையே !