Asianet News TamilAsianet News Tamil

ரூ.4 கோடிக்கு செல்லாத நோட்டு காணிக்கை: திருப்பதி ஏழுமலையானுக்கே நாமம்

The black money counterfeit money in an attempt to eradicate corruption in circulation
demonetisation affects-tirupati
Author
First Published Mar 3, 2017, 5:11 PM IST


பிரதமர் மோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டு தடைக்குப் பின், திருப்பதி பாலாஜி கோயிலில் ரூ. 4 கோடிக்கு செல்லாத ரூபாய் நோட்டுகள் குவிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கருப்பு பணம், கள்ளநோட்டு, ஊழலை ஒழிக்கும் முயற்சியில், புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் செல்லாத நோட்டுகளை வங்கியில் கொடுத்து, மாற்றிக்கொண்டனர். இதில் கடவுளுக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செல்லாத நோட்டுகளாகவே செலுத்தி வந்தனர்.

demonetisation affects-tirupati

மேலும், வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள காலக்கெடு முடிந்தபின்னும் செல்லாத ரூபாயை கையில் வைத்திருப்பவர்கள், என்ன செய்வது எனத் தெரியாமல் கோயில் உண்டியல்களில் செலுத்தி வந்தனர். அவ்வாறு கடந்த 2 மாதங்களில் மட்டும் திருப்பதி கோயிலில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக ரூ. 4 கோடி வந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி டி சாம்பசிவ  ராவ் கூறுகையில்,“ மத்திய அரசு செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரூ. 4 கோடிக்கு உண்டியலில் காணிக்கையாக வந்துள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் நாங்கள் கடிதம் எழுதி இருக்கிறோம்.

demonetisation affects-tirupati

ஆனால், இன்னும் அவர்களிடம் இருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை'' எனத் தெரிவித்தார்.

செல்லாத ரூ. 4கோடியை  வைத்து என்ன செய்வது எனத் தெரியாமல் அதிகாரிகள் கையை பிசைந்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios