ஜார்க்கண்டில் பெரும் தொகையுடன் சிக்கிய 3 எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 

ஜார்க்கண்டில் பெரும் தொகையுடன் சிக்கிய 3 எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸின் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப் மற்றும் நமன் பிக்சல் மூன்று எம்.எல்.ஏக்கள் மேற்கு வங்காளத்தில் கடந்த சனிக்கிழமையன்று பெரும் தொகையுடன் தேசிய நெடுஞ்சாலை-16ல் ஹவுராவில் உள்ள ராணிஹாட்டியில் எஸ்யூவி வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தடுத்த நிறுத்துப்பட்டனர். அவர்களது வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பெரும் தொகை சிக்கியது. இதை அடுத்து அவர்களை காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: செஸ் போஸ்டர் விவகாரம்.. மோடிக்கு அவமரியாதை.. தமிழர்களுக்கு அவமானம்.. ஸ்டாலின் அரசு மீது சீமான் ஆவேச அட்டாக்!

மூன்று எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அறிவித்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் உள்ளனர், ஆனால் சட்டமன்றக் கட்சியை பலவீனப்படுத்த முயற்சிப்பவர்கள். கட்சித் தலைமையிடம் முழுத் தகவல் உள்ளது. உரிய நேரத்தில் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். மேலும் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸும் அரசு நிலையானது என்று கூறியுள்ளது. அரசாங்கத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.

இதையும் படிங்க: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது.. அமலாக்கத்துறை எடுத்த அதிரடி முடிவு !

Scroll to load tweet…

அரசாங்கம் பாதுகாப்பாகவும் நிலையானதாகவும் உள்ளது. இது போன்ற சில கருப்பு ஆடுகளை ஒதுக்கி விடுங்கள். அரசாங்கம் பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே ஜார்க்கண்டில் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதாக பாஜக கூட்டணி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஜூலை 30 அன்று ட்விட்டரில், ஜார்கண்டில் பாஜகவின் 'ஆபரேஷன் தாமரை' ஹவுராவில் இன்றிரவு அம்பலமானது. டெல்லியில் 'ஹம் தோ'வின் கேம் பிளான் மகாராஷ்டிராவில் இ-டி டியோ நிறுவி ஜார்கண்டிலும் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.