மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு  அனுப்பிய மின்னஞ்சலில் ரூ. 40 கோடி வருமானத்தை குறைத்து அறிக்கை தாக்கல் செய்ததாக பிபிசி ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது, 2002 குஜராத் கலவரம் வெடித்தது. இந்த சூழலில் இந்த கலவரத்துடன் பிரதமர் மோடியை தொடர்புப்படுத்தி பிரிட்டனை தளமாக கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம், மோடிக்கான கேள்விகள் என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் ஆவணப்படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது. எனினும் தடையை மீறி, பல இடங்களில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்து டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் உள்ள பிபிசிக்குசொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் இது பிபிசிக்கு எதிரானபழிவாங்கும்நடவடிக்கைஎன்றும், பத்திரிக்கைசுதந்திரத்தின்மீதானவெட்கக்கேடானசெயல்என்றும்பலஎதிர்க்கட்சித்தலைவர்கள்விமர்சனம் செய்தனர்.

பிரக்யா தாக்கூருடன் கேரளா ஸ்டோரி படம் பார்த்த பெண் முஸ்லிம் காதலருடன் மாயம்!

இந்த நிலையில் வருமான வரித்துறையின் நடவடிக்கைகளை பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காட்ட பிபிசி இந்தியா வேண்டுமென்றே முயற்சித்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வருமானவரித்துறைஅதிகாரிகளின்கூற்றுப்படி, பிபிசிதிருத்தப்பட்டவரிகணக்கைதாக்கல்செய்யவேண்டும்அல்லதுசட்டநடவடிக்கையைஎதிர்கொள்ளவேண்டும். பிபிசிஇந்தியாநிலுவைத்தொகையையும்அபராதத்தையும்செலுத்தவேண்டும். இதற்கு பல கோடி ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் பிபிசிமத்தியநேரடிவரிகள்வாரியத்திற்குஅனுப்பியமின்னஞ்சலில்ரூ. 40 கோடிவருமானத்தைகுறைத்துஅறிக்கைசெய்ததாகஒப்புக்கொண்டதாகவும்தகவல்கள் தெரிவிக்கின்றன. பிபிசி இந்தியா நிறுவனத்தால் காட்டப்படும்லாபம்மற்றும்வருமானம்நாட்டின்செயல்பாடுகளின்அளவிற்குஏற்பஇல்லைஎன்று சோதனை நடத்திய போது வருமானவரித்துறைஅதிகாரிகள்கூறியிருந்தனர்.

முன்னதாக பிபிசிஅலுவலகங்களில்நடத்தப்பட்டசோதனையை காங்கிரஸ் கட்சி கடுமையாகசாடியதுமற்றும்நரேந்திரமோடிஅரசாங்கத்தின்சர்வாதிகாரத்தின்அடையாளம்என்றுவிமர்சித்தது. சமாஜ்வாடிபோன்றகட்சிகளும் வருமான வரித்துறை பிபிசி அலுவலகங்களில் நடத்திய சோதனையை கடுமையாக விமர்சித்திருந்தன. இந்த சூழலில் தனது நிறுவனத்தின் வருமானத்தை குறைத்து காட்டியதாக பிபிசி நிறுவனம் ஒப்புக்கொண்டதால், எதிர்க்கட்சிகள் என்ன சொல்ல போகின்றன என்ற எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

பெண்கள் இலவச பேருந்து பயணம்: யாரெல்லாம் பயணிக்கலாம்? - வழிமுறைகள் வெளியீடு!