Asianet News TamilAsianet News Tamil

பெண்கள் எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள்… சர்ச்சையை கிளப்பிய பாபா ராம்தேவ்!!

பெண்கள் எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள் என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் மனைவி முன் பாபா ராம்தேவ் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

baba ramdev statement about womens dressing creates controversy
Author
First Published Nov 25, 2022, 6:07 PM IST

பெண்கள் எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள் என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் மனைவி முன் பாபா ராம்தேவ் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பதஞ்சலி யோகா பீடமும் மும்பை மகிளா பதஞ்சலி யோகா சமிதியும் இணைந்து யோகா அறிவியல் முகாம் மற்றும் மகளிர் கூட்டத்தை தானேயின் ஹைலேண்ட் பகுதியில் ஏற்பாடு செய்தன. இந்த கூட்டத்தில் அம்ரிதா ஃபட்னாவிஸ் கலந்து கொண்டார். அப்போது பாபா ராம்தேவ் பெண்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது பாபா ராம்தேவ் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வாயில் ரப்பர் செருப்பை கவ்விச் செல்லும் பாம்பு; இணையத்தை கலக்கி வரும் வைரல் வீடியோ!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், யோகா குரு ராம்தேவ் பாபாவும் பெண்களின் ஆடை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். ஏக்நாத் ஷிண்டே குழுவைச் சேர்ந்த அப்துல் சத்தார், என்சிபியைச் சேர்ந்த சுப்ரியா சுலேவிடம் பேசிய வழக்குகள் இன்னும் இருக்கும் நிலையில், ராம்தேவ் பாபா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இதையும் படிங்க: ஒரே பாலினத்தவர்கள் திருமணத்தை சிறப்புத் திருமணச் சட்டத்தில் அனுமதிக்கலாமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

தானேயில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பேசிய பாபா ராம்தேவ், பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், அவர்கள் சல்வார் உடையில் அழகாக இருக்கிறார்கள், அவர்கள் எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள் என்று கூறினார். துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ரிதா ஃபட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும் எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் முன்னிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios