உரிமங்களை புதுப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கியும், சுமார் ஆறாயிரம் நிறுவனங்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று உள்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.

உரிமங்களை புதுப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கியும், சுமார் ஆறாயிரம் நிறுவனங்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று உள்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செயல்படும் அமைப்புகள், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின் (FCRA) கீழ் உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் இந்த உரிமத்தை உரிய கால இடைவெளியில் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் புதுப்பிக்க வேண்டும். அந்தவகையில் உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்திருந்த அமைப்புகள் மற்றும் என்.ஜி.ஓ.-க்களில் சுமார் 18,778 நிறுவனங்களின் உரிமம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் காலாவதியானது. அதில் 12,989 நிறுவனங்கள் மட்டும் உரிமத்தை புத்துப்பிக்க விண்ணப்பித்து இருந்தன.

ஏற்கெனவே உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்திருந்த 5,789 நிறுவனங்கள் தங்களது உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான FCRA உரிமம் ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல், உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்த 179 நிறுவனங்களின் விண்ணப்பங்களையும் உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இதானால் இந்த நிறுவனங்களுக்குமான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

உள்துறை அமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கையால் சுமார் ஆறாயிரம் நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கான FCRA உரிமத்தை இழந்துள்ளன. நேற்று முன்தினம் வரை சுமார் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த உரிமத்தை வைத்திருந்த நிலையில் தற்போது 16,829 நிறுவனங்களிடம் மட்டும் இந்த உரிமம் உள்ளது. என்.ஜி.ஓ.-க்கள் தங்கள் உரிமங்களை புதுப்பிக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனங்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிட்த்துள்ளன.

வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான உரிமங்களை இழந்த பட்டியலில் இந்தியாவின் பிரபலமான என்.ஜி.ஓ.-க்கள், அமைப்புகள் இடம்பிடித்துள்ளன. வெளிநாட்டுநன்கொடைஒழுங்காற்றுசட்டத்துடன்தொடர்புடையஅதிகாரப்பூர்வஇணையதளத்தில் வெளியிட்டுள்ளதகவலின்அடிப்படையில், இந்திராகாந்திதேசியகலைமையம், இண்டியன்இன்ஸ்டிட்யூட்ஆப்பப்ளிக்அட்மினிஸ்ட்ரேஷன், லால்பஹதூர்சாஸ்திரிநினைவுஅறக்கட்டளை, லேடிஸ்ரீராம்மகளிர்கல்லூரி, டெல்லிபொறியியல்கல்லூரி, ஆக்ஸ்பாம்இந்தியாஉள்ளிட்டநிறுவனங்கள்மற்றும்அமைப்புகள்தங்கள்உரிமத்தைஇழந்துள்ளன. இந்தியமருத்துவச்சங்கம், இந்தியாமுழுதும் 12-க்கும்மேற்பட்டமருத்துவமனைகளைநடத்திவரும்இமானுவேல்மருத்துவமனைசங்கம், இந்தியகாசநோய்சங்கம், விஷ்வதர்மயத்தன், மகரிஷிஆயுர்வேதபிரதிஷ்தன், தேசியமீனவகூட்டுறவுகூட்டமைப்புஉள்ளிட்டவையும் வெளிநாட்டு நிதியுதவி பெறும் உரிமத்தை இழந்துள்ளன.

ஹம்தர்ட்எஜூகேஷன்சொசைட்டி, டெல்லிஸ்கூல்ஆப்சோஷியல்வர்க்சொசைட்டி, பாரதியசான்ஸ்க்ரிதிபரிஷத், டிஏவிகாலேஜ்டிரஸ்ட்அண்ட்மேனேஜ்மெண்ட்சொசைட்டி, இந்தியஇஸ்லாமியகலாச்சாரமையம், காத்ரேஜ்நினைவுஅறக்கட்டளை, டெல்லிபப்ளிக்ஸ்கூல்சொசைட்டி, ஜேன்யூஅணுஅறிவியல்மையம், இந்தியாஹேபிடட்சென்டர் ஆகிய அமைப்புகளும் உரிமங்களை இழந்துள்ளன.

இந்தியாவில் செயல்படும் என்.ஜி.ஓ.-க்கள் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. ஆனால், அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களே காரணம் என்று ஆளும் தரப்பு தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று, இந்தியாவில் இந்த அமைப்புகள் போராட்டங்களை தூண்டி விடுகிறார்கள் என்பதும் அவர்களின் புகராகும். இந்தநிலையில், ஆறாயிரம் என்.ஜி.ஓ.-க்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.