You do not do this without protecting your skin during the snowy season.
பனிக் காலத்தில் சருமத்தை பாதுகாக்க
** பொதுவாக பனிக்காலத்தில் சருமம் வறண்டு செதில் படிந்து காணப்படும். இதனால் முகம் மற்றும் உதடு பகுதிகளில் அவலட்சணமான தோற்றம் ஏற்படும்.
** அதற்கு பாலாடையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறிய பிறகு குளித்தால் வறண்ட சருமம் பொலிவு பெறும்.
** பாலாடையுடன் கசகசாவை ஊறவைத்து அரைத்து முகம் மற்றும் கை கால்களில் பூசி சிறிதுநேரம் கழித்து குளிப்பதும் சருமத்தை மென்மையாக்கும்.
** வறண்ட சருமக்காரர்கள் பப்பாளி ஆப்பிள் போன்றவற்றைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.
** எல்லா வகை சருமத்தினரும் தண்ணீர் அதிகமாக குடிக் வேண்டும்.
** அரை கிலோ துவரம் பருப்பு 100கிராம் பயத்தம் பருப்பு, 25 கிராம் கசகசா, 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் இவற்றை மெலியதாக அரைத்துக்கொள்ளவும். இந்த கலவையை தினந்தோறும் முகம் முதல் பாதம் வரை தேய்த்து குளிக்கவும். தொடர்ந்து இவ்வாறு 1 மாதம் செய்து வந்தால் தோலின் வறட்டு தன்மை நீங்கி மிருதுவாக ஜொலிக்கும்.
** பனிக்காலங்களில் தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பனிக்காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது. அது சருமத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச எண்ணெய் பசையையும் உறிஞ்சிவிடும்.
** மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு, போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து குளித்து வரவேண்டும்.
