Why is acne Some ways to get rid of it ...

முகத்தில் இருக்கின்ற செபாசியஸ் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் "சீபம்" எனும் எண்ணெய்க் கசிவு முகத்தில் படிவதால்தான் நம் முகம் பலவிதமான இரசாயன மாற்றங்களுக்கு உட்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த இரசாயான மாற்றமே முகப்பருவாக மாறுகிறது. முகப்பரு இருந்தால் உடனே கிள்ளி எறிந்து விட கூடாது. கிள்ளினால் பெரும் விளைவுகள் உண்டாகும்.

முகப்பருக்களை போக்குவதற்கான சில வழிகள். ..

1.. புதினா இலைகளை அரைத்து தடவலாம்.

2.. வேப்பிலை பொடியுடன் மஞ்சள் தூள் மற்றும் சந்தானம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வரலாம்.

3..வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப் பொடி ஆகியவைகளை சம அளவு எடுத்துக்கொண்டு மிதமான சுடுதண்ணீரில் சேர்த்து குழைத்து முகத்தில் தடவவும். கண்களுக்கு அடியில் கண்டிப்பாக தடவ கூடாது. 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பரு குறைவதை கண்கூடே காணலாம்.