Asianet News TamilAsianet News Tamil

நரைமுடி, செம்பட்டை முடியை கருமையாக்க இந்த ஒரு பொருள் போதும்..!!

முன்பெல்லாம் 35 வயதை கடந்தவர்களுக்கு தான் நரைமுடி அதிகளவில் காணப்படும். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்குக் கூட நரைமுடி முளைக்க ஆரம்பித்துவிட்டது. அது இளநரை என்று குறிப்பிடப்படுவதை அடுத்து, மருத்துவ பரிசோதனைகள் வரை பிரச்சனை நீண்டு விடுகிறது. உடனடியாக மருத்துவர்கள் ரசாயனம் கொண்ட மருந்துகளை பரிந்துரைப்பார்கள். 
 

This one ingredient is enough to darken gray and red hair
Author
First Published Oct 30, 2022, 5:52 PM IST

முன்பெல்லாம் 35 வயதை கடந்தவர்களுக்கு தான் நரைமுடி அதிகளவில் காணப்படும். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்குக் கூட நரைமுடி முளைக்க ஆரம்பித்துவிட்டது. அது இளநரை என்று குறிப்பிடப்படுவதை அடுத்து, மருத்துவ பரிசோதனைகள் வரை பிரச்சனை நீண்டு விடுகிறது. உடனடியாக மருத்துவர்கள் ரசாயனம் கொண்ட மருந்துகளை பரிந்துரைப்பார்கள். 

இதனால் முழுமையாக தீர்வு கிடைக்காது என்று சொல்ல முடியாது. பொதுவாக சரும தொந்தரவு மற்றும் முடி வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கு இயற்கை முறையில் பல்வேறு தீர்வுகள் உள்ளன. அதன்படி, குறிப்பிட்ட ஒரு பொருளை வைத்து இள வயதில் ஏற்படும் நரைமுடி பாதிப்பை களவதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

வயல்வெளி ஓரங்கள் மற்றும் குப்பைப் மேட்டுப் பகுதியில் கேட்பாரற்று கிடைக்கும் இடங்களில் முளைக்கும் செடி தான் கையாந்தரை. இந்த ஒரு அற்புதமான செடியை மட்டும் வைத்து நரைமுடியை கருப்பாக மாற்றிவிடலாம். இதை பயன்படுத்துவதற்கு முன்பு பலமுறை சுத்தம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம். குப்பைப் பகுதிகள் மற்றும் கேட்பாரற்ற நிலப்பகுதிகளில் கையாந்தரைச் செடி வளருவதால், அதை நன்றாக சுத்தம் செய்வது அவசியாமாகும்.

This one ingredient is enough to darken gray and red hair

மேலும் இதில் மண் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் இருக்கும் என்பதால், ஒவ்வொரு இலைகளையும் நன்றாக பார்த்து பார்த்து சுத்தம் செய்துகொள்ளவும். அதையடுத்து சிறிதுநேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, மிக்ஸியில் நன்றாக மைப் போல அரைத்துக்கொள்ளவும்.  அரைக்கும் போது இலைகளில் இருக்கும் ஈரப்பதமே போதும். வேண்டுமென்றால் கூடுதலாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 

வெர்ஜ்னிட்டியை இழந்துவிட்டால் உடலில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா?

நல்ல மையாக அரைத்து எடுத்துக் கொண்ட பேஸ்டை, முடிகளில் வேர்களில் இருந்து நுனி வரை நன்றாக தேய்க்க வேண்டும். இதை ஒரு மாத காலம் வாரம் இருமுறை என்கிற கணக்கில் தேய்த்து வரவேண்டும். கையாந்தரை பேஸ்டு நன்றாக காய்ந்தவுடன், பி.எச். அளவு மைல்டாக இருக்கும் ஷாம்பூவை கொண்டு தலையை நன்றாக கழுவிடுவது நல்லது. குறைந்தது இந்த செயல்முறையை ஒரு மாத காலம் தொடர்ந்து வாருங்கள்.

இந்த செயல்முறையை செய்ய துவங்கிய இரண்டு வாரங்களில் உங்களுடைய கேசத்தில் மாற்றம் தெரியும். நரைமுடிகள் உதிர்ந்து அந்த இடத்தில் கருமையான முடிகள் வளர துவங்கும். அவ்வப்போது தலைக்கு எண்ணெய் வைத்து வருவதும் நல்ல பலனை தரும். வெறும் நரைமுடி என்றில்லாமல், செம்பட்டை பாய்ந்த முடிகளுக்கும் இதே செயல்முறையை பின்பற்றலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios