இது உடல் நோய் அல்ல மன நோய் மட்டுமே
உணர்ச்சி மிகுதியினால் உருவாகும் ஜீரண மண்டல நோய்தான் இந்த, 'உறுத்து குடல் அழற்சி' நோய். உடல் நோயாக இருந்தாலும், இந்நோய்க்கு அடிப்படை காரணம் மனதின் உணர்ச்சிப் போராட்டங்கள்தான்! இதனால் மலச்சிக்கலும்,வயிற்றுப்போக்கும் மாறி மாறி ஏற்படும். அதிக அளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அறிகுறியாக வயிற்றுப்போக்கும், உணர்ச்சிகளை அடக்குவதன் அறிகுறியாக மலச்சிக்கலும் ஏற்படும்.
இந்த, 'உறுத்து குடல் அழற்சி' நோயின் முக்கிய அறிகுறி வயிற்றுவலி. அடிவயிற்றின் வலது அல்லது இடதுபக்கம் வலி பரவும். மலம் கழித்ததும் சற்றே வலி குறைவது போல் இருக்கும். சிறந்த மனநல ஆலோசனையே இந்நோய்க்கான சிகிச்சை என்றாலும், பிரச்னைகளின் சிக்காமல், மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதே, இந்நோய் வராமல் தடுக்கும்.