இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்பதை இந்த அறிகுறிகள் வைத்தே தெரிந்து கொள்ளலாம்...
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்...
** அடிக்கடி சிறுநீர் வருவது, முக்கியமாக இரவு நேரங்களில்
** கண்பார்வை திடீரென மங்க துவங்குவது
** எந்த ஒரு விஷயத்திலும் சீராக கவனம் செலுத்த முடியாமல் போகும்.
** எவ்வளவு நீர் அல்லது நீர் பானம் உட்கொண்டாலும் வாய் வறட்சியான உணர்வு தொடர்ந்து இருக்கும். தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும்.
** சிறு காயங்களாக இருந்தாலும், அது சரியாக நீட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.
** வயிறு சார்ந்து கோளாறுகள் அடிக்கடி உண்டாகும்.
** சருமத்தில் ஒருவிதமான அரிப்பு அல்லது எரிச்சல் இருந்துக் கொண்டே இருக்கும்.
** அடிக்கடி பசிக்கும். எத்தனை உணவு உண்டாலும், சிறிது நேரத்தில் மீண்டும் சாப்பிட தூண்டும்.
** தளர்ச்சி, நடுக்கம் போன்ற நரம்பு மண்டல கோளாறுகள் உண்டாகும்.