No coloring for white hair

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நரைமுடி இன்றைய தலைமுறைகளில் சர்வ சாதரணமாகிவிட்டது. நமது பாட்டிகளுக்கு 60 வயதுகளிலுமே ஒன்றிரண்டு முடிகள்தான் நரைத்தது. இப்போதும் பல முதியவ்ர்களுக்கு முடி கருமையாக இருப்பதை காணலாம். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஷாம்பு உபயோகித்தது இல்லை.

இன்று பதினெட்டு ப்ளஸ்களிலேயே நரைமுடியை மறைக்க கலரிங் செய்து கொள்கிறார்கள். இவை எத்தகைய அபாயத்தை உண்டு பண்ணும். பலவித நோய்களை தருவதோடு கூந்தல் வளர்ச்சியும் 30 க்கு மேல் மோசமாக இருக்கும்.

இள நரையை தடுக்க கலரிங்க் செய்யத் தேவையில்லை. நெல்லிகாய் சிரப்-ஐ வாரம் ஒருமுறை உபயோகித்தாலே நரை முடி காணாமல் போய்விடும்.

1.. புதிதான நெல்லிக்காயை சுத்தம் செய்து அதனை துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்.

2.. நெல்லிக்காயை இடித்து அல்லது மிக்ஸியில் போட்டு சாறை எடுத்துக் கொள்ளவும்.

3.. அந்த நெல்லிக்காய் சாறை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

4.. ஒரு நீரில் தேயிலைப் பொடியை போட்டு கொதிக்க வைத்து, வரத் தேநீர் தயார் செய்து, அதனை நெல்லிக்காய்சாறுடன் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

5.. உங்கள் கூந்தலை தனித்தனியான பிரித்து இந்த் சாறினை தடவவும். தலையில் ஸ்கால்ப்பில் தடவுங்கள். மிச்சமிருந்தால் நுனிவரை தடவலாம்.

6.. ஒரு மணி நேரம் பிறகு தலை அலசவும்.

7.. இப்படி வாரம் 1 அல்லது 2 முறை செய்தால் உங்கள் கூந்தலின் நரை போக்கி இளமையாக மிளிரும்.