Asianet News TamilAsianet News Tamil

பக்கவாதம் பாதிப்பு.. உலகிலேயே இந்தியா முதலிடம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..

இந்தியாவில் நரம்பியல் கோளாறுகளுக்கு பக்கவாதம் மிகவும் கணிசமான பங்களிப்பாக உள்ளது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

India tops in global list for new strokes cases lanced study reveals Rya
Author
First Published Oct 17, 2023, 7:43 AM IST

2019 ஆம் ஆண்டில் உலகளவில் அதிக எண்ணிக்கையிலான புதிய பக்கவாதம் பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி உள்ளது என்பது தி லான்செட்டில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு, நாட்டில் பக்கவாதம் நோயின் பாதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தியாவில் நரம்பியல் கோளாறுகளுக்கு பக்கவாதம் மிகவும் கணிசமான பங்களிப்பாக உள்ளது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. மேலும், பக்கவாதம் தொடர்பான இறப்புகளில் உலகளவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2050 வாக்கில், உலகளாவிய எண்ணிக்கை 9.7 மில்லியனாக உயரக்கூடும், இது முதன்மையாக குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளை பாதிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பக்கவாதம் என்பது மூளையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைபடுவது அல்லது மூளையில் உள்ள இரத்த நாளம் வெடித்து மூளை பாதிப்பு அல்லது இறப்புக்கு வழிவகுக்கும் ஒரு நிலை என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வரையறுக்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் வழங்கல் மிகவும் முக்கியமானது, மேலும் தடுக்கப்பட்ட இரத்த ஓட்டம் மூளை செல் சேதம் அல்லது மரணம், பக்கவாதத்தை ஏற்படுத்தும்.

முகம் தொங்குதல், உணர்வின்மை, உடலின் ஒரு பக்கத்தில் முடக்கம் அல்லது உணர்வின்மை, மந்தமான பேச்சு, கடுமையான தலைவலி, பார்வைக் கோளாறுகள், நடப்பதில் சிரமம் மற்றும் சமநிலை அல்லது ஒருங்கிணைப்பு இழப்பு ஆகியவை பக்கவாதத்தில் சில பொதுவான அறிகுறிகளில் அடங்கும்.

புற்றுநோய் முதல் விந்தணு எண்ணிக்கை குறைவது வரை: தண்ணீர் கேன்களால் ஏற்படும் ஆபத்தான பிரச்சனைகள்..

எனினும் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் பக்கவாதம் வராமல் தடுக்க உதவும். குறிப்பாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும், இதில் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சமச்சீர் உணவு சாப்பிடுவது அவசியம். நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் உப்பின் அளவை கட்டுப்படுத்துவம் அவசியம்.

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அதிக கொழுப்பு, உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவு, உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்ட பல முக்கிய ஆபத்து காரணிகள் பக்கவாதத்திற்கு காரணமாக அமைகின்றன.
இந்த ஆபத்து காரணிகளை நிவர்த்தி செய்வதற்கும் பக்கவாதம் பாதிப்பின் அதிகரித்து வரும் போக்கைக் கட்டுப்படுத்துவதற்கும் பொது சுகாதார முன்முயற்சிகளின் அவசரத் தேவையையும் இந்த ஆய்வு முடிவுகள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios