சிப்ஸ்கள் மறுபயன்பாட்டு எண்ணெயில் பொரிக்கப்படுகின்றன. இது அக்ரிலாமைடு என்ற நச்சுப்பொருளை உருவாக்குகிறது. குளிர்பானங்களில் அதிக பிரக்டோஸ் சோளப்பாகு உள்ளது. இவை இரண்டுமே மூளையில் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்துகின்றன.
இப்போதைய மாறி வரும் உலகத்தில் சிப்ஸ் சாப்பிடுவதும், குளிர் பானங்கள் குடிப்பதும் வழக்கமாகி விட்டது. இந்த UPF அல்லது அதி-பதப்படுத்தப்பட்ட உணவு ஒரு மெதுவான விஷம் போல செயல்படுகிறது என்று நரம்பியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மூளையை சுருங்கச் செய்கிறது
அதிகப்படியான சர்க்கரை மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் ஹிப்போகேம்பஸின் அளவைச் சுருக்குகின்றன என்று ஹார்வர்ட் ஆராய்ச்சி கூறுகிறது. ஹிப்போகேம்பஸ் என்பது நினைவுகள் உருவாகும் மூளையின் ஒரு பகுதியாகும். தினமும் குளிர் பானங்கள் அருந்துவது, 10 ஆண்டுகளில் மூளையை 5 ஆண்டுகள் முதுமையடையச் செய்யும். அதாவது, 30 வயதில் 35 வயது மூளையைப் பெற்றுவிடும்.
சிந்தனைத் தெளிவின்மை மற்றும் கவனக்குறைவு
சிப்ஸ்களில் உள்ள கூடுதல் உப்பும் எம்.எஸ்.ஜி-யும் மூளையில் டோபமைன் சுரப்பைத் தூண்டுகின்றன. ஆரம்பத்தில், அது ஒரு நல்ல உணர்வைத் தருகிறது, பின்னர் அது ஒரு போதைப் பழக்கமாக மாறுகிறது. அதன் பிறகு எல்லா நேரமும் தூக்கக் கலக்கமாக உணர்வது, வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது, விஷயங்களை நினைவில் கொள்ள முடியாமல் இருப்பது. இதுதான் மூளை மந்தம் எனப்படுகிறது. குழந்தைகள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை, அதனால் அவர்களின் தேர்வு முடிவுகள் பாதிக்கப்படுகின்றன.
அழற்சியை அதிகரித்து, மறதி நோயை ஏற்படுத்துகிறது
சிப்ஸ்கள் மறுபயன்பாட்டு எண்ணெயில் பொரிக்கப்படுகின்றன. இது அக்ரிலாமைடு என்ற நச்சுப்பொருளை உருவாக்குகிறது. குளிர்பானங்களில் அதிக பிரக்டோஸ் சோளப்பாகு உள்ளது. இவை இரண்டுமே மூளையில் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்துகின்றன என்று ஜாமா நியூராலஜி இதழ் தெரிவிக்கிறது. ஒரு நாளைக்குத் தங்கள் கலோரிகளில் 20%-ஐ மறுபயன்பாட்டு எண்ணெயிலிருந்து (UPF) உட்கொள்பவர்களுக்கு, மறதி நோய் (dementia) ஏற்படும் அபாயம் 28% அதிகமாக உள்ளது. அவர்களின் கலோரிகளில் 50% மறுபயன்பாட்டு எண்ணெயிலிருந்து கிடைத்தால், அந்த அபாயம் 50% ஆகும்.
குடல்-மூளை இணைப்பைச் சிதைக்கிறது
நமது வயிற்றுக்கும் மூளைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. சிப்ஸ் மற்றும் குளிர் பானங்கள் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடுகின்றன. இதன் விளைவாக, செரோடோனின் மற்றும் டோபமைன் ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மனநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன. வயிற்றுக் கோளாறு என்பது மனக் கோளாறையும் குறிக்கும்.
குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது
5 முதல் 15 வயதுக்குட்பட்ட காலத்தில் மூளை வளர்ச்சி அடைகிறது. இந்தக் காலகட்டத்தில், தினமும் சிப்ஸ் மற்றும் குளிர்பானங்களைச் சாப்பிடுவது அறிவுக் குறியீட்டைக் (IQ) குறைக்கிறது, ADHD மற்றும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. படித்ததை நினைவில் கொள்ள இயலாமை, எளிதில் கோபமடைதல் போன்றவை இதன் பாதிப்புகளாகும். இந்தியாவில் 30% குழந்தைகள் UPF-க்கு அடிமையாகி உள்ளனர் என்று தி லான்செட் அறிக்கை கூறுகிறது.
சிப்ஸுக்குப் பதிலாக மாற்று உணவுப்பொருட்கள்
சிப்ஸுக்குப் பதிலாக மக்கானா ரோஸ்ட், வறுத்த கொண்டைக்கடலை, பாதாம் ஆகியவற்றை சாப்பிடலாம்.கு ளிர் பானங்களுக்குப் பதிலாக இளநீர், பதநீர், எலுமிச்சை-புதினா சோர்பெட், மோர், பழச்சாறுகள் குடிக்கலாம்.
குறிப்பு: இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. இது தனிநபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்படுகிறது.


