Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா? அரைவேக்காடாக கோழிக்கறியை சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் வரும்...

Do you know Eating chicken in half is so bad ...
Do you know Eating chicken in half is so bad ...
Author
First Published Apr 2, 2018, 1:10 PM IST


 

உலகளவில் மக்களின் அன்றாட வாழ்வில் கோழிக்கறி அத்தியாவசியமாகிவிட்டது. கோழிக்கறியை பலவித உணவாக சமைத்து சாப்பிடுகின்றனர். இதனால் அதை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். மாறாக அரை வேக்காடு நிலையில் சாப்பிட்டால் தீமை மட்டுமே மிஞ்சும். 

அதிலும் "பக்கவாதம் நோய்" ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

நன்றாக வேக வைக்காத கோழிக்கறியில் ‘ஜி.பி.எஸ்.’ எனப்படும் ‘குயிலன் பேர் சின்ட்ரோம்’ பேக்டீரியா உருவாகிறது. 

அவை நரம்பு செல்களில் புகுந்து சிறிது சிறிதாக அவற்றை செயல் இழக்க செய்யும் தன்மை வாய்ந்தது. இது தீவிரம் அடைந்து நரம்பு மண்டலத்தை பாதித்து பக்கவாதம் நோய் ஏற்படும்.

இத்தகவலை அமெரிக்காவின் மிக்சிகன் மாகாண பல்கலைக்கழக நிபுணர் லிண்டா மேன்ஸ்பீல்டு தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios