காலநிலை மாற்றத்தால், பனியில் உறைந்த பழங்கால கிருமிகளை வெளிவரலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் என்பது தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. உலகம் முழுவதும் தொழிற்சாலை பெருகியது, காடுகளை அழிப்பது, நீர் நிலைகளை அழிப்பது போன்ற பல காரணங்களால் பூமி இயல்பை விட மிக வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதனால் பனிப்பாறைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக உருகி வருகின்றன. இதனால் கடல்நீர் மட்டமும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கடலோர நகரங்கள் மற்றும் கடலா சூழப்பட்ட தீவுகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறை உருகுவதால், நீண்டகாலமாகபனியில்உறைந்திருக்கும்பழங்காலகிருமிகள்வெளியேறி, புதியஇடங்களுக்குசெல்லக்கூடும்என்றுநிபுணர்கள்எச்சரித்துள்ளனர். அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் (PSA) முன்முயற்சியான டெல்லி ஆராய்ச்சி அமலாக்கம் மற்றும் கண்டுபிடிப்பு மாநாடு நேற்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் மாறிவரும்காலநிலை, அதிகவெள்ளம்மற்றும்அதிகமழைப்பொழிவைஏற்படுத்துவதால், மேலும்நீரினால்பரவும்மற்றும்ஜூனோடிக்நோய்களுக்கும்வழிவகுக்கும்என்றுநிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நிதிஆயோக்உறுப்பினர்விகேபால்மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ராஜீவ்பால்உள்ளிட்டவல்லுநர்கள் இதுகுறித்த கவலையைஎடுத்துரைத்தனர்.வெப்பநிலைஅதிகரிக்கும்போது, வெப்பத்தால்காயம்ஏற்படும்ஆபத்துஅதிகமாகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் பருவநிலைமாற்றத்தின்காரணமாகநீண்டகாலமாகபனியில்உறைந்திருக்கும்மிகவும்பழமையானநோய்க்கிருமிகள்புதியஇடங்களுக்குச்செல்லக்கூடும்என்றுநிதி ஆயோக் தலைவர் வி.கே பால் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மேலும் பேசிய அவர் " அதிக வெப்பநிலைகாரணமாகபனிஉருகும்போது, இந்தபழங்காலகிருமிகள்வெளியிடப்படலாம். இதுஏற்கனவேசிக்கலானஉடல்நலம்மற்றும்காலநிலைமாற்றம்பற்றியகவலையின்மற்றொரு பிரச்சனையை சேர்க்கிறது" என்றுதெரிவித்தார்..

அறிவியல்செயலர்பர்விந்தர்மைனிகூறுகையில், "பருவநிலைமாற்றத்தால், கொசுக்கள் மூலம்பரவும்நோய்கள், மற்றும்ஜூனோடிக்நோய்கள்பரவும்அபாயம்அதிகரிக்கிறது. மறைமுகமாக, உணவுமுறைகள், ஊட்டச்சத்து, நீர்அணுகல், வீட்டுவசதி, கல்வி, மற்றும்கவனிப்பு ஆகியவை இதற்கு காரணமாக இருக்கலாம். " இந்தசவால்களைஎதிர்த்துப்போராடஅறிவியல், தொழில்நுட்பம்மற்றும்கண்டுபிடிப்புகளைஉள்ளடக்கியஒருவிரிவானஅணுகுமுறை தேவை. காலநிலைமாற்றப்பிரச்சினையைகூட்டாகக்கையாள்வதில்தொழில்துறை, கல்வித்துறை, அரசுமற்றும்உள்ளாட்சிஅமைப்புகள்உட்படபல்வேறுதுறைகளின் பங்களிப்பும் தேவை” என்று தெரிவித்தார். 

அடுத்த அச்சுறுத்தலாக மாறும் புதிய வகை Eris கொரோனா.. WHO வெளியிட்ட முக்கிய தகவல்