Asianet News TamilAsianet News Tamil

Recipes: தேங்காய் பால் புலாவ் ரெசிபி இதோ!!

 Coconut Milk Pulao in Tamil : இந்த கட்டுரையில் தேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். இது சுவையை கொடுப்பதுடன் தேங்காய் பால் உடலுக்கும் ஆரோக்கியமானது.

easy and tasty coconut milk pulao recipe in tamil mks
Author
First Published Jul 24, 2024, 2:03 PM IST | Last Updated Jul 24, 2024, 2:46 PM IST

இன்று மதியம் சீக்கிரம் சமைத்து முடிக்க ஏதாவது ரெசிபி யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் தேங்காய் பால் புலாவ் செய்து சாப்பிடுங்கள். இது சாப்பிடுவதற்கு ரொம்பவே டேஸ்டா இருக்கும். முக்கியமாக, இந்த தேங்காய் பால் புலாவ் செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக, குழந்தைகளுக்கு மதியம் உணவிற்கு காலை வேலையில் இந்த ரெசிபி செய்து கொடுக்கலாம். பேச்சுலர்களுக்கு கூட இந்த ரெசிபி செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் தேங்காய் பால் புலாவ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  ருசியான பீட்ரூட் புலாவ்.. சுலபமாக செய்யலாம் வாங்க.. ரெசிபி இதோ!

தேங்காய் பால் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
கேரட் - 2 (நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
பீன்ஸ் - 50 கிராம்
காலிஃப்ளவர் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 7
தேங்காய் பால் - 4 கப்
பட்டை - 1 சின்னது
கிராம்பு - 3
ஏலக்காய் - 2 
பிரியாணி இலை - 1 
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
புதினா இலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  கமகமன்னு.. டேஸ்ட்டான.. பன்னீர் புலாவ்.. ரெசிபி இதோ!

செய்முறை:
தேங்காய் பால் புலாவ் செய்ய முதலில் எடுத்து வைத்த அரிசியை நன்றாக கழுவி சுமார் அரை மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் பிரியாணி இலை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்த மசாலாவை அதில் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் நறுக்கி வைத்த கேரட், காலிபிளவர், பீன்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

இப்போது இதனுடன் அரிசி தேங்காய் பால் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பால் கொதித்து வரும்போது அதில் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து, மூன்று விசில் விட்டு இறக்கவும். குக்கரில் விசில் போன பிறகு மூடியை திறந்து நெய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலை தூவி ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் தேங்காய் பால் புலாவ் தயார்.

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios