MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • இந்தியா எங்களோடு இருக்கிறது..! ட்ரம்பின் முட்டாள்தானத்தை தோலுரித்த உக்ரைன் அதிபர்..!

இந்தியா எங்களோடு இருக்கிறது..! ட்ரம்பின் முட்டாள்தானத்தை தோலுரித்த உக்ரைன் அதிபர்..!

இந்தியா உக்ரைனுடன் நிற்கிறது. ஐரோப்பா இண்நியாவுடனான உறவுகளை ஆழப்படுத்த வேண்டும். மேற்கத்திய கூட்டணி இந்தியாவை அதன் மடியில் கொண்டு வர வேண்டும்’’ என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

2 Min read
Thiraviya raj
Published : Sep 24 2025, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : X/narendramodi

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்தியாவை ஆதரித்து, அதை ஒரு முக்கியமான கூட்டாளி என்று கூறியுள்ளார். இந்தியா உக்ரைனுடன் நிற்பதாகவும், ஐரோப்பா இண்நியாவுடனான உறவுகளை ஆழப்படுத்த வேண்டும். மேற்கத்திய கூட்டணி இந்தியாவை அதன் மடியில் கொண்டு வர வேண்டும்’’ என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் போருக்கு இந்தியா நிதியுதவி செய்வதாகவும், எரிசக்தி கொள்முதல் மூலம் இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவின் போருக்கு நிதியளிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டிய அதே வேளையில், இந்தியா முழுமையாக நம் பக்கம் இருப்பதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஃபாக்ஸ் நியூஸில் ஒரு சிறப்பு நேர்காணலில் ரஷ்யாவின் எரிசக்தி கொள்முதல் குறித்து கேட்டபோது, ​​"ஈரான் ஒருபோதும் நம் பக்கம் இருக்காது. ஆனால், இந்தியா முழுமையாக எங்களுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். எங்களுக்கு நிச்சயமாக எரிசக்தி பிரச்சினைகள் உள்ளன. ஆனால் ஜனாதிபதி டிரம்ப் அவற்றை சரிசெய்ய முடியும்’’ எனத் தெரிவித்தார்.

23
Image Credit : Asianet News

இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. ரஷ்யாவுடனான எரிசக்தி உறவுகளில் பதட்டங்கள் இருந்தபோதிலும் இந்தியாவை நம்முடன் ஈடுபடுத்த வேண்டும். ஐரோப்பா, இந்தியாவுடன் வலுவான உறவுகளை உருவாக்க வேண்டும். இந்தியர்களிடமிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ளக்கூடாது. இந்தியாவில் இருந்து நம்மைத் தூர விலக்கிக் கொள்ளாமல் இருக்க நாம் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அவர்கள் ரஷ்ய எரிசக்தித் துறை மீதான தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வார்கள்" என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

33
Image Credit : X-@ZelenskyyUa

நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபைக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், உக்ரைன் போருக்கு இந்தியாவும் சீனாவும் முக்கிய நிதியளிப்பவர்கள் என்று குற்றம் சாட்டினார். இரு நாடுகளும் தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை வாங்குவதை அவர் மேற்கோள் காட்டினார். நேட்டோ உறுப்பினர்களையும் குறிவைத்து டிரம்ப், "நேட்டோ நாடுகள் ரஷ்ய எரிசக்தி விநியோகத்தை கணிசமாகக் குறைக்கவில்லை என்பது மன்னிக்க முடியாதது. கற்பனை செய்து பாருங்கள் - அவர்கள் தங்களுக்கு எதிரான போருக்கு நிதியளிக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டி இருந்தார்.

About the Author

TR
Thiraviya raj
டொனால்ட் டிரம்ப்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved