ஸ்கெட்ச் போட்டு கவுத்த ஈரான்.. ஹெலிகாப்டர் என நினைத்து 3D பெயிண்டை தாக்கிய இஸ்ரேல்..
ஈரானில் தளவாடத்தில் நின்று கொண்டிருந்த ஈரானிய ஹெலிகாப்டரை தாக்கிவிட்டதாக இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு மறுப்பு தெரிவித்துள்ள ஈரான் வல்லுநர்கள் அது ஹெலிகாப்டர் அல்ல வெறும் ஓவியம் தான் என தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டரை தாக்கிய இஸ்ரேல் படை
ஈரான், இஸ்ரோல், அமெரிக்கா இடையேயான போர் உலக அளவில் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF), ஈரானில் உள்ள ராணுவ இலக்குகளைத் தாக்கியதாக சில வீடியோக்களை வெளியிட்டது. அதில் ஒரு வீடியோவில், தரையில் நின்றுகொண்டிருந்த ஈரான் ராணுவத்திற்குச் சொந்தமான Mi-17 ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஏவுகணை மூலம் இஸ்ரேல் துல்லியமாகத் தாக்கி அழிப்பது போன்ற காட்சிகள் இருந்தன.
ஆனால், இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் வெடித்தது. இஸ்ரேல் ஏவுகணை வீசி அழித்தது உண்மையான ஹெலிகாப்டர் அல்ல, அது எதிரிகளை ஏமாற்றுவதற்காகத் தரையில் வரையப்பட்ட ஒரு 'முப்பரிமாண ஓவியம்' (3D Painting/Decoy) என்று பலரும் ஆதாரங்களுடன் பதிவிடத் தொடங்கினர்.
உண்மை நிலை என்ன?
ஏமாற்றும் தந்திரம் (Decoys)
ஈரான் தனது ராணுவத் தளங்களில் உண்மையான போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்குப் பதிலாக, அதே அளவில் இருக்கும் மரக்கட்டை மாதிரிகள் அல்லது தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியங்களைப் பயன்படுத்துவது வழக்கம். இது செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன்களின் கண்களில் இருந்து உண்மையான சொத்துகளைப் பாதுகாக்கச் செய்யப்படும் ஒரு போர் தந்திரம் (Asymmetric Warfare) ஆகும்.
காட்சிகளில் உள்ள சந்தேகம்
ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியபடி, ஏவுகணை தாக்கும் முன் அந்த ஹெலிகாப்டரின் நிழல் விழும் விதம் மற்றும் அதன் அமைப்பு ஒரு தட்டையான ஓவியம் போலத் தெரிவதாகக் கூறப்படுகிறது. "மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணையை வெறும் சில டாலர் பெயிண்டிங் மீது வீணடிக்க வைத்துவிட்டோம்" என ஈரான் ஆதரவு கணக்குகள் கிண்டல் செய்து வருகின்றன.
இஸ்ரேல் தரப்பு விளக்கம்
இந்த விவாதம் குறித்து இஸ்ரேல் ராணுவம் (IDF) இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இருப்பினும், இஸ்ரேல் தரப்பு ஆதரவாளர்கள், அது ஈரான் பரப்பும் ஒரு பொய்யான தகவல் (Propaganda) என்றும், அழிக்கப்பட்டது உண்மையான ஹெலிகாப்டர் தான் என்றும் கூறி வருகின்றனர்.
Looks like the Israeli Air Force struck a decoy of an Iranian Mil Mi-17 helicopter painted on the ground. pic.twitter.com/mtEznE308A
— Status-6 (War & Military News) (@Archer83Able) March 4, 2026
தற்போதைய சூழல்
2026 மார்ச் மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் 60% ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் 80% வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இத்தகைய கடுமையான போருக்கு நடுவே, இந்த "ஓவிய ஹெலிகாப்டர்" விவகாரம் ஒரு மிகப்பெரிய உளவியல் போராக (Psychological Warfare) மாறியுள்ளது.

