MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ்: பிரதமர் மோடி ஆவேசம்

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக செயல்படும் காங்கிரஸ்: பிரதமர் மோடி ஆவேசம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது, காங்கிரஸ் கட்சி இந்திய ராணுவத்திற்கு ஆதரவாகச் செயல்படாமல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

1 Min read
SG Balan
Published : Sep 14 2025, 03:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அசாமில் பிரதமர் மோடி
Image Credit : X@narendramodi

அசாமில் பிரதமர் மோடி

அசாம் மாநிலம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது, காங்கிரஸ் கட்சி இந்திய ராணுவத்திற்கு ஆதரவாகச் செயல்படாமல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் இன்று அசாமில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார்.

23
காங்கிரஸ் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுகிறது
Image Credit : X-@BJP4India

காங்கிரஸ் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுகிறது

பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அவர் கூறியதாவது:

"அரசியல் லாபத்திற்காக காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுகிறது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது இதை நாம் பார்த்தோம். இந்த நடவடிக்கையின்போது நமது ராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை வேரோடு அழித்தார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு ஆதரவாக நின்றது. இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நிற்க வேண்டிய காங்கிரஸ், தனது கருத்தினால் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் பக்கம் நின்றது.

காங்கிரஸுக்கு வாக்கு அரசியல்தான் முக்கியம். இதில் அவர்கள் தேச நலனைக் கருத்தில் கொள்வதில்லை. ஊடுருவி வந்தவர்கள் இந்தியாவில் நிரந்தரமாகத் தங்க வேண்டும் என்று காங்கிரஸ் அவர்களுக்குப் பாதுகாப்பாக நிற்கிறது."

Related Articles

Related image1
பாகிஸ்தானில் 45 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! 19 ராணுவ வீரர்களும் மரணம்!
Related image2
Asia Cup 2025: பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை தண்ணி குடிக்க வைத்த ஓமன் பவுலர்கள்! சூப்பர் பவுலிங்!
33
பஹல்காம் தாக்குதலும் ஆபரேஷன் சிந்தூரும்
Image Credit : PTI

பஹல்காம் தாக்குதலும் ஆபரேஷன் சிந்தூரும்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது.

மத்திய அரசு, 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அழித்ததாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தராகச் செயல்பட்டுப் போர் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
பாகிஸ்தான்
ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காம்
நரேந்திர மோடி
இந்திய தேசிய காங்கிரஸ்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved