- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Anna Serial: சண்முகம் சொன்ன வார்த்தை; கடலில் விழுந்த பரணி! 'அண்ணா' சீரியல் அப்டேட்!
Anna Serial: சண்முகம் சொன்ன வார்த்தை; கடலில் விழுந்த பரணி! 'அண்ணா' சீரியல் அப்டேட்!
கிராமத்து கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும், 'அண்ணா' சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்றைய எபிசோடில் நடக்க உள்ளது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலும் கதம்பம் போல்... வெவ்வேறு ஜானரில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் கிராமத்து சாரல் வீசும் வகையில் ஓடிக்கொண்டிருக்கும் 'அண்ணா' சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த சீரியலின், நேற்றைய எபிசோடில், பரணியை விசா பிராசசுக்கு யார் அழைத்து செல்வது என சௌந்தர பாண்டி மற்றும் சண்முகம் இடையே வந்த மோதலை பார்த்து, கடுப்பான பரணி நீங்கள் யாரும் என் கூட வரவேண்டாம் நானே செல்கிறேன் என சொல்லிவிட்டு தனியாக சென்னைக்கு செல்கிறாள்.
தங்கைக்காக பேசிய அண்ணன் முத்துப்பாண்டி
இதை தொடர்ந்து சண்முகத்தை பார்த்து பேசும் முத்துப்பாண்டி, 'இங்க பாரு சண்முகம், அவ உன்னை விட்டுட்டு போகணும்னு நினைச்சிருந்தா என்னைக்கோ போய் இருக்கா.. அவ உனக்காக தான் இன்னும் போகாம இருக்கா. அதை நீ தான் புரிஞ்சி நடந்துக்கணும் என சொல்கிறான்.
வைகுண்டம் சொன்ன வார்த்தை:
இதை தொடர்ந்து வைகுண்டபமும், 'நீ அவளை தேடி அங்க வருவ அப்படிங்கிற நம்பிக்கையில் தான் தனியா போய் இருக்கா என சொல்ல அப்போது தான் சண்முகத்துக்கு தன்னுடைய தவறு தெரியவருகிறது. பரணி அமெரிக்கா போறேன்னு சொல்லும் போது கூட, நான் தான் அவனுக்கு ஆதரவா இருந்துருக்கும் என பழைய விஷயங்களை நினைத்து கவலை படுகிறான்.
எந்த மூளைக்கு போனாலும் விடமாட்டேன்:
பின்னர் நீ இந்த உலகத்துல எந்த மூளைக்கு போனாலும் நான் உனக்காக வருவேன் என்று கூறி.... சென்னைக்கு கிளம்பி செல்கிறான். இதை தொடர்ந்து, பரணி விசா ப்ராசஸ்க்காக வரிசையில் நின்று கொண்டிருக்க சண்முகம் அங்கு வருகிறான். பரணி சண்முகத்தை பார்த்ததும் இப்போ நீ ஏன் இங்க வந்த என்று கேட்க, என் பொண்டாட்டிக்காக வந்ததாக சொல்கிறான்.
அனைவருக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்த சண்முகம்
தான் செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்பு கேட்கிறான். அங்கு நிறைய பேர் இருப்பதால் நாளைக்கு கூட வந்து இதை பார்த்துக்கொள்ளலாம் வா என அவளை கூப்பிடும் அவன், நீ சாப்பிட்டியா என பரணியை பார்த்து கேட்க, அவள் இல்லை என சொன்னதும், அங்கிருக்கும் மற்றவர்களும் சாப்பிட வாய்ப்பில்லை என நினைத்து, அங்கிருப்பவர்களுக்கும் சாப்பாடு வாங்கி கொடுக்கிறான். சண்முகத்தின் செயல் அங்கு இருப்பவர்களையும் கவர்கிறது. எனவே எங்கிருப்பவர்கள் அவனுக்கு சப்போர்ட் செய்து பேச, பரணி இவனை பத்தி தெரியாது என சொல்கிறாள்.
கடலில் விழுந்த பரணி:
அடுத்து விசா ப்ராசஸ் முடிந்ததும், இருவரும் அப்படியே சென்னை பீச்சுக்கு செல்கின்றனர். அங்கு சண்முகம் நீ எங்க வேணா போ.. நான் உனக்கு துணையா இருப்பேன் என்று வாக்கு கொடுக்கிறான். பிறகு பரணி பீச்சில் கால் நனைக்க பெரிய அலை அவளை கீழே தள்ள சண்முகம் அவளுக்கு என்னாச்சு என அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் என்ன நடக்கும் என்பது பற்றி பார்ப்போம்.