MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Anna Serial: சண்முகத்துக்கும் - சௌந்தரபாண்டிக்கும் வந்த மோதல்; பரணி எடுத்த அதிர்ச்சி முடிவு! 'அண்ணா' அப்டேட்!

Anna Serial: சண்முகத்துக்கும் - சௌந்தரபாண்டிக்கும் வந்த மோதல்; பரணி எடுத்த அதிர்ச்சி முடிவு! 'அண்ணா' அப்டேட்!

கிராமத்து மனம் கமழும் சீரியல்கள் குறைந்து வரும் நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வில்லேஜ் கான்ஸ்சப்ட்டை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் 'அண்ணா' விறுவிறுப்பான காட்சிகளோடு சென்று கொண்டிருக்கும் இந்த தொடரின் இன்றைய அப்டேட் குறித்து பார்க்கலாம். 

1 Min read
manimegalai a
Published : Mar 20 2025, 06:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நேற்றைய எபிசோடில் சண்முகம் குடும்பத்தை பிரிப்பதிலேயே குறியாக இருக்கும் சௌந்தரபாண்டி, தன்னுடைய மகள் பரணியை சென்னைக்கு அழைத்து சென்று அப்படியே யாருக்கும் தெரியாமல் அமெரிக்காவுக்கு அனுப்ப முடிவு செய்கிறார். ஆனால் பரணியை வைத்து தான் இன்று பிரச்சனையே துவங்கி உள்ளது. அது பற்றி பார்ப்போம்.

24
சென்னைக்கு செல்லும் பரணி

சென்னைக்கு செல்லும் பரணி

பரணிக்கு விசா விஷயமாக சென்னைக்கு வர சொல்ல, இதை சண்முகத்திடம் கூறி பரணியை சென்னைக்கு அழைத்து செல்லுமாறு கூறுகிறாள் பாக்கியம். இருவரும் ஒன்றாக வெளி ஊருக்கு செல்வதால் அவர்களுக்குள் ஒரு நெருக்கம் உண்டாகும் என பாக்கியம் திட்டம் போடும் நிலையில், சண்முகம் பரணியை அழைத்து செல்ல சம்மதிக்கிறார்.

Anna Serial: ஆசிட் கலந்த தண்ணீரால் வெந்து போன கால்; பரணியை ஏத்திவிடும் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட் !

34
சௌந்தரபாண்டிக்கு வந்த அச்சம்

சௌந்தரபாண்டிக்கு வந்த அச்சம்

ஆனால் சண்முகம் இப்படி சொல்வதால், சௌந்தரபாண்டியின் திட்டம் பலிக்காமல் போய் விடுமோ என்கிற அச்சத்தில், நான் தான் பரணியை சென்னைக்கு கூட்டிட்டு போவேன் என சொல்லி அடம்பிடிக்க, பாக்கியமும் நீங்க எதுக்கு போறீங்க? சண்முகம் போயிட்டு வரட்டும் என்று சொல்கிறார். ஆனால் சௌந்திரபாண்டி அதெல்லாம் முடியாது, என் மகளை நான் தான் கூட்டி போவேன் என சொல்ல, சண்முகமும் தன்னுடைய பங்கிற்கு அவள் என் பொண்டாட்டி. அவளை கூட்டிட்டு போக நான் இருக்கேன் என சொல்ல.. இதை வைத்தே சண்முகம் மற்றும் சௌந்தரபாண்டி இடையே மோதல் வெடிக்கிறது.

44
சென்னைக்கு தனியாக கிளம்பும் பரணி

சென்னைக்கு தனியாக கிளம்பும் பரணி

இதனால் கடுப்பாகும் பரணி, உங்க சண்டையை நிறுத்துறீங்களா?  என் கூட யாரும் வர வேண்டாம்.. எனக்கு சென்னைக்கு போக வழி தெரியும். நானே போகிறேன் என்று கிளம்பி செல்கிறாள்.  இப்படியான நிலையில் பரணியை தேடி சண்முகமும் சென்னைக்கு செல்வனா? பரணி மனம் மாறுவாளா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Anna Serial: சண்முகத்துக்கு ஆப்பு வைக்க நினைத்து; பிரச்சனையில் சிக்கிய சௌந்தரபாண்டி! அண்ணா சீரியல் அப்டேட்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்
தமிழ் சீரியல்
தமிழ் சினிமா
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved