- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Anna Serial: சண்முகத்துக்கும் - சௌந்தரபாண்டிக்கும் வந்த மோதல்; பரணி எடுத்த அதிர்ச்சி முடிவு! 'அண்ணா' அப்டேட்!
Anna Serial: சண்முகத்துக்கும் - சௌந்தரபாண்டிக்கும் வந்த மோதல்; பரணி எடுத்த அதிர்ச்சி முடிவு! 'அண்ணா' அப்டேட்!
கிராமத்து மனம் கமழும் சீரியல்கள் குறைந்து வரும் நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வில்லேஜ் கான்ஸ்சப்ட்டை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் 'அண்ணா' விறுவிறுப்பான காட்சிகளோடு சென்று கொண்டிருக்கும் இந்த தொடரின் இன்றைய அப்டேட் குறித்து பார்க்கலாம்.

நேற்றைய எபிசோடில் சண்முகம் குடும்பத்தை பிரிப்பதிலேயே குறியாக இருக்கும் சௌந்தரபாண்டி, தன்னுடைய மகள் பரணியை சென்னைக்கு அழைத்து சென்று அப்படியே யாருக்கும் தெரியாமல் அமெரிக்காவுக்கு அனுப்ப முடிவு செய்கிறார். ஆனால் பரணியை வைத்து தான் இன்று பிரச்சனையே துவங்கி உள்ளது. அது பற்றி பார்ப்போம்.
சென்னைக்கு செல்லும் பரணி
பரணிக்கு விசா விஷயமாக சென்னைக்கு வர சொல்ல, இதை சண்முகத்திடம் கூறி பரணியை சென்னைக்கு அழைத்து செல்லுமாறு கூறுகிறாள் பாக்கியம். இருவரும் ஒன்றாக வெளி ஊருக்கு செல்வதால் அவர்களுக்குள் ஒரு நெருக்கம் உண்டாகும் என பாக்கியம் திட்டம் போடும் நிலையில், சண்முகம் பரணியை அழைத்து செல்ல சம்மதிக்கிறார்.
சௌந்தரபாண்டிக்கு வந்த அச்சம்
ஆனால் சண்முகம் இப்படி சொல்வதால், சௌந்தரபாண்டியின் திட்டம் பலிக்காமல் போய் விடுமோ என்கிற அச்சத்தில், நான் தான் பரணியை சென்னைக்கு கூட்டிட்டு போவேன் என சொல்லி அடம்பிடிக்க, பாக்கியமும் நீங்க எதுக்கு போறீங்க? சண்முகம் போயிட்டு வரட்டும் என்று சொல்கிறார். ஆனால் சௌந்திரபாண்டி அதெல்லாம் முடியாது, என் மகளை நான் தான் கூட்டி போவேன் என சொல்ல, சண்முகமும் தன்னுடைய பங்கிற்கு அவள் என் பொண்டாட்டி. அவளை கூட்டிட்டு போக நான் இருக்கேன் என சொல்ல.. இதை வைத்தே சண்முகம் மற்றும் சௌந்தரபாண்டி இடையே மோதல் வெடிக்கிறது.
சென்னைக்கு தனியாக கிளம்பும் பரணி
இதனால் கடுப்பாகும் பரணி, உங்க சண்டையை நிறுத்துறீங்களா? என் கூட யாரும் வர வேண்டாம்.. எனக்கு சென்னைக்கு போக வழி தெரியும். நானே போகிறேன் என்று கிளம்பி செல்கிறாள். இப்படியான நிலையில் பரணியை தேடி சண்முகமும் சென்னைக்கு செல்வனா? பரணி மனம் மாறுவாளா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.