MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது

துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனுக்கு எதிராக சாட்சி சொல்ல விசாலாட்சியை அணுகி இருக்கிறது போலீஸ் அதிகாரி கொற்றவை டீம். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 05 2025, 09:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரனை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நேற்று போலீஸ் செக் போஸ்டிலும் ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆனார் குணசேகரன். இதையடுத்து தன்னுடைய தம்பிகளுடன் பாண்டிச்சேரிக்கு சென்று அங்கு தன்னுடைய நண்பனின் பண்ணைவீட்டில் தங்கி இருக்கிறார். மறுபுறம் சக்தியும் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். சக்தியை பார்த்ததும் கண்ணீர் சிந்திய விசாலாட்சி அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
சக்தியிடம் மன்னிப்பு கேட்ட விசாலாட்சி
Image Credit : youtube/suntv

சக்தியிடம் மன்னிப்பு கேட்ட விசாலாட்சி

சக்தியிடம் உங்க அண்ணன் பண்ணுனது எல்லாம் எனக்கு தெரியாதுடா... தெரிஞ்சா இப்படி செய்ய விட்டிருப்பேனா என ஃபீல் பண்ணி பேசும் விசாலாட்சி, இதையடுத்து சக்தியை ரூமுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுக்கிறார். அப்போது, சக்தியிடம், நீ காணாமல் போனபோது சாமியிடம் நிறைய வேண்டிகிட்டு இருந்ததாகவும், நிறைய கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டி இருப்பதாகவும் கூறுகிறார். இதைக்கேட்டுக் கொண்டிருந்த ஜனனி, அத்தை வேண்டுதல் எல்லாம் அப்புறம் பண்ணிக்கொள்ளலாம். அதற்கு முன்னாடி முக்கியமான வேலை ஒன்னு இருக்கு என சொல்கிறார்.

Related Articles

Related image1
கை உடைந்தும் திருந்தாத அறிவுக்கரசி; ஜனனிக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related image2
ரவுண்ட் அப் பண்ணிய போலீஸ்... குண்டாஸில் கைதாகும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
34
ஜனனி சொன்னதைக் கேட்டு ஷாக் ஆன விசாலாட்சி
Image Credit : youtube/suntv

ஜனனி சொன்னதைக் கேட்டு ஷாக் ஆன விசாலாட்சி

என்னடி அது என விசாலாட்சி கேட்க, அதற்கு ஜனனி, சக்தி கிடைச்சதுக்கு இப்படி சந்தோஷப்படுறீங்க, ஆனா அவன் இப்படி ஆனதற்கு உங்க இன்னொரு பையன் தான் காரணம். இப்போ செஞ்ச தப்பு எல்லாத்துக்கும் சேர்த்து, தண்டனை கிடைச்சிரும்னு உங்க பையன் இப்போ தலைமறைவா இருக்காரு. எப்படியும் உங்களுக்கு கவலை இல்லாம இருக்காது. அதை நான் தப்புன்னு சொல்லல. பெத்த அம்மாவுக்கு எல்லா குழந்தைகளும் ஒன்னு தான். ஆனா, அதையெல்லாம் தாண்டி, இன்றைக்கு தேவகியில் ஆரம்பித்து, ஈஸ்வரி அக்கா, பார்கவி, சக்தி வரைக்கும் எல்லாருக்கும் ஒரு நியாயம் கிடைக்கனும்னா, இதைவிசாரிக்க போலீஸ் நம்ம வீட்டுக்கு வரும்போது நீங்க உண்மையை சொல்லனும் என கூறுகிறார் ஜனனி.

44
விசாரணையில் இறங்கிய கொற்றவை
Image Credit : youtube/suntv

விசாரணையில் இறங்கிய கொற்றவை

இதையடுத்து விசாரணை நடத்த கொற்றவை வீட்டுக்கு வருகிறார். அப்போது, வீட்டுல இருக்குற எல்லாருமே நடந்த உண்மையை மறைக்காமல் சொன்னால் தான் எங்களால் நியாயமான ஆக்‌ஷன் எடுக்க முடியும் என கூறுகிறார் கொற்றவை. பின்னர் விசாலாட்சியிடம் விசாரணை நடத்த தொடங்கும் அவர், இப்போ நீங்க சொல்றதை வச்சு தான் குணசேகரனுக்கு கிடைக்கப் போற தண்டனை, ஸ்ட்ராங் ஆக மாறும், தைரியமா சொல்லுங்க என கொற்றவை கேட்க, அதற்கு விசாலாட்சி என்ன சொன்னார். அவர் குணசேகரனுக்கு எதிராக சொன்னாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
இதெல்லாம் உன் செட் அப் தானா? விஜயாவை சந்தேகப்பட்ட முத்து; கதறி அழும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
அந்நியனாக இருந்த தம்பிகளை ரெமோவாக மாற்றிய ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Related Stories
Recommended image1
கை உடைந்தும் திருந்தாத அறிவுக்கரசி; ஜனனிக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
ரவுண்ட் அப் பண்ணிய போலீஸ்... குண்டாஸில் கைதாகும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved