MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கை உடைந்தும் திருந்தாத அறிவுக்கரசி; ஜனனிக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

கை உடைந்தும் திருந்தாத அறிவுக்கரசி; ஜனனிக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியை பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்த நந்தினி, ஜனனிக்கு போன் போட்டு அதிர்ச்சி தகவல் ஒன்றை சொல்லி இருக்கிறார். அது என்ன என்பதை பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Dec 03 2025, 11:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வீட்டுக்குள் எண்ட்ரியானதும் அரிவாள் எடுத்து வெட்ட வந்த அறிவுக்கரசியை எட்டி உதைத்து தர்ம அடி கொடுக்கிறார் ஜனனி. அதுமட்டுமின்றி அவரை கீழே தள்ளிவிட்டு கையையும் உடைத்துவிடுகிறார். இதையடுத்து உள்ளே சென்றதும் விசாலாட்சியிடம் ஆதி குணசேகரன் பற்றிய உண்மைகளை எல்லாம் கூறுகிறார். அதுமட்டுமின்றி இந்த சொத்து அனைத்தும் தேவகி உடையது எனவும், அதை அபகரித்துவிட்டு தேவகியை ஆதி குணசேகரன் கொலை செய்த விஷயத்தையும் ஜனனி சொல்ல, அதைக்கேட்டு ஷாக் ஆகிறார் விசாலாட்சி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
நந்தினி சொன்ன ஷாக்கிங் தகவல்
Image Credit : youtube/suntv

நந்தினி சொன்ன ஷாக்கிங் தகவல்

ஈஸ்வரியை பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்த நந்தினி, அங்கிருந்து ஜனனிக்கு போன் போட்டு பேசுகிறார். 15 லட்சம் கொடுத்தால் தான் ஈஸ்வரி அக்காவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுப்போம் என ஆஸ்பத்திரியில் இருந்து சொன்னது எல்லாமே ஆதி குணசேகரன் மிரட்டலுக்கு பயந்து தான் சொல்லி இருக்கிறார்கள். அக்கா இன்னைக்கு உசுரோட இருக்குறதே பெரிய விஷயம்னு சொல்றாங்க. அவரை கொலை பண்ண பல வழிகளில் முயற்சி செஞ்சிருக்கான் அந்த மனுஷன் என கண்ணீர்விட்டு கலங்கியபடி கூறுகிறார் நந்தினி. இதையெல்லாம் போனில் கேட்ட தர்ஷன், தர்ஷினி அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.

Related Articles

Related image1
அறிவுக்கரசியை அடிச்சு ஓடவிட்ட ஜனனி... அம்பலமாகும் தேவகி பற்றிய ரகசியங்கள் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related image2
கைதுக்கு பயந்து எஸ்கேப் ஆன ஆதி குணசேகரன்... அடுத்த ஆக்‌ஷனுக்கு ரெடியான ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
34
கோபத்தில் பொங்கிய தர்ஷன்
Image Credit : youtube/suntv

கோபத்தில் பொங்கிய தர்ஷன்

தன் அம்மாவை கொல்ல நினைத்த அந்த ஆளை விடக்கூடாது என கூறும் தர்ஷன், அந்த ஆள் சாக வேண்டும், அவரை என் கையாலேயே கொன்றால் தான் என்னுடைய ஆத்திரம் அடங்கும் என கூறிவிட்டு கோபத்துடன் வெளியே செல்கிறார். அப்போது அவரை தடுத்து நிறுத்தும் ஜனனி, நம்ம இப்படி எமோஷனல் ஆக வேண்டும் என்பதற்காக தான் அவர் இப்படியெல்லாம் செய்கிறார். நீ அமைதியா இரு என கூறுகிறார். இன்னும் கொஞ்ச நாள்ல அந்த ஆள் உள்ளே போய்விடுவார் என ஜனனி சொல்ல, அதற்கு தர்ஷன், இல்ல சித்தி அந்த ஆள் திருந்த மாட்டாரு. திரும்பவும் வெளிய வந்து இந்த அநியாயத்தை பண்ணிகிட்டு தான் இருப்பார் என சொல்கிறார்.

44
ரீ-எண்ட்ரி கொடுக்கும் அறிவுக்கரசி
Image Credit : youtube/suntv

ரீ-எண்ட்ரி கொடுக்கும் அறிவுக்கரசி

பின்னர் நந்தினியிடம், அக்கா நல்லா இருக்காங்களா என கேட்கும் ஜனனி, அவரை அந்த ஆஸ்பத்திரியில் இருந்து வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை நாம் செய்யலாம் என கூறுகிறார். அக்கா நிச்சயம் திரும்ப வருவாங்க, நம்ம நாலு பேரும் முடிவெடுத்தபடி ஃபுட் டிரக் பிசினஸை ஆரம்பிப்போம் என கூறுகிறார் ஜனனி. இந்த வேளையில், வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார் அறிவுக்கரசி. ஜனனி அவர் கையை உடைத்துவிட்டதால், மாவுக்கட்டு போட்டுக்கொண்டு வீட்டுக்குள் வருகிறார் அறிவுக்கரசி. இதையடுத்து என்ன ஆனது? ஆதி குணசேகரனை போலீஸ் கைது செய்ததா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
என்னுடைய உயிரே என் புருஷன் தான் – கார்த்திக்கிற்காக அம்மாவை எதிர்க்கும் ரேவதி!
Recommended image2
அம்மாவை இழந்த கிரிஷ்... அடைக்கலம் தர மறுக்கும் விஜயா; முத்து எடுத்த முடிவு என்ன? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு – வீட்டு முன்னாடி போலீஸ் ஜீப் நிற்க வேண்டும்; கதிரின் ஆசை நிறைவேறுமா?
Related Stories
Recommended image1
அறிவுக்கரசியை அடிச்சு ஓடவிட்ட ஜனனி... அம்பலமாகும் தேவகி பற்றிய ரகசியங்கள் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
கைதுக்கு பயந்து எஸ்கேப் ஆன ஆதி குணசேகரன்... அடுத்த ஆக்‌ஷனுக்கு ரெடியான ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved