- Home
- Cinema
- தொலைக்காட்சி
- உன் வயித்துல இருப்பது எவன் குழந்தைடி? தங்க மயிலை வார்த்தைகளால் நோகடித்த சரவணன்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்.!
உன் வயித்துல இருப்பது எவன் குழந்தைடி? தங்க மயிலை வார்த்தைகளால் நோகடித்த சரவணன்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்.!
Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை மருத்துவர் உறுதி செய்து இருக்கிறார்.

Pandian Stores 2 Serial Today Episode
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. தங்க மயிலின் பெற்றோர் பல பொய்களை சொல்லி தங்க மயிலை சரவணனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த விஷயம் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வர தங்க மயிலை வீட்டை விட்டு அனுப்புகின்றனர். இதனால் கோபமடைந்த தங்க மயிலின் தாயார் காவல் துறையை நாட, பிரச்சனை பெரிதாகிறது. இந்த விவகாரம் தற்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது.
வாந்தி எடுத்த தங்கமயில்
விவாகரத்து பிரச்சனை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தங்க மயிலை அவரது தாயார் மிகவும் மோசமாக நடத்துகிறார். இதனால் மனமுடைந்த தங்கமயில் ஒரு வயதானவரை கவனித்துக் கொள்ளும் வேலையில் சேர்க்கிறார். வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது தங்க மயிலுக்கு லைட்டாக தலை சுற்றுகிறது. திடீரென்று வாந்தி எடுக்கத் தொடங்குகிறார். அப்போது மீனாவுக்கு போன் செய்யும் அவர் மீனாவை வேலை செய்யும் வீட்டிற்கு வரவழைக்கிறார். தனக்கு காலையிலிருந்து வாந்தி வருவதாகவும், தலை சுற்றுவதாகவும் கூறுகிறார்.
கர்ப்பமாக இருக்கும் தங்க மயில்
உடனே அவரை மீனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு தங்கமயிலை பரிசோதிக்கும் மருத்துவர் தங்கமயில் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார். இதைக் கேட்டு மகிழ்ச்சியடையும் தங்கமயில், இந்த விஷயத்தை சரவணன் இடம் கூறுவதற்காக அவரை கோவிலுக்கு வரவழைக்கிறார். கோவிலுக்கு வரும் சரவணனிடம் மருத்துவர் அளித்த ரிப்போர்ட்டுகளை காட்டி, அதை வாங்கி பிரித்துப் பார்க்குமாறு கூறுகிறார். ஆனால் சரவணன் வந்த விஷயத்தை மட்டும் கூறுமாறு கடுமையாக பேசுகிறார்.
தங்க மயிலை வசைபாடும் சரவணன்
அப்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும், உங்கள் வாரிசை வயிற்றில் சுமப்பதாகவும் சரவணனிடம் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் சரவணன், “இந்த குழந்தை யாருடையது?” என்று கடுமையான வார்த்தைகளால் தங்க மயிலை வசைபாடுகிறார். மேலும், “உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கடுமையான சொற்களைக் கூறுகிறார். இதனால் மணமுடையும் தங்கமயில் கதறி அழுகிறார்.
இனி நடக்கப்போவது என்ன?
இனி தங்க மயிலின் வாழ்க்கையில் என்ன நிகழப் போகிறது? அவர் மீண்டும் சரவணனுடன் இணைவாரா? இல்லையா? என்ற சஸ்பென்ஸ் உடன் கதை நகர்கிறது. இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

