- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சாமுண்டீஸ்வரியை ஏமாற்றி வீட்டை ஆட்டைய போட்ட சிவனாண்டி; உடந்தையாக இருந்த சந்திரகலா: கார்த்திகை தீபம் 2!
சாமுண்டீஸ்வரியை ஏமாற்றி வீட்டை ஆட்டைய போட்ட சிவனாண்டி; உடந்தையாக இருந்த சந்திரகலா: கார்த்திகை தீபம் 2!
Sivanandi Cheating Chamudeshwari : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சாமூண்டீஸ்வரிக்கு சொந்தமான வீட்டை அவரது தங்கை சந்திரகலா கணவர் சிவனாண்டி எழுதி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.

கார்த்திகை தீபம் 2 சீரியல் இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு புறம் உண்மையை வெளிக் கொண்டு வர கார்த்திக் கான்ஸ்டபிள் மொபைல் போனை தேடிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் ரோகிணி கர்ப்பமாக இருப்பது சாமுண்டீஸ்வரியைத் தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதே போன்று சிறையிலிருந்த வெளியில் வந்த காளியம்மாள் தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். முதல் கட்டமாக கார்த்திக் வீட்டில் இல்லாத நிலையில் சாமுண்டீஸ்வரியை ஏமாற்றி அவரது வீட்டை எழுதி வாங்க பிளான் போட்டார்.
இதற்காக டிரஸ்ட் என்ற பெயரில் பெண்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறோம் என்று கூறி வீட்டிற்கு வந்த இருவரிடம் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் இடத்தை எழுதி கொடுக்க முன் வந்துள்ளார். அப்போது காளியம்மாள் மேஜிக்பேனாவை வைத்து சாமுண்டீஸ்வரியை ஏமாற்ற திட்டம் போட்டார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
கார்த்திக் ரேவதி ஆகியோர் துர்கா நவீனை சந்தித்து பேசுகின்றனர். அடுத்ததாக சந்திரகலா சிவனாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் டாக்குமெண்ட்டை கொடுத்து சாமுண்டீஸ்வரியிடம் கையெழுத்து வாங்குகின்றனர். கையெழுத்து வாங்கி இவர்கள் வெளியே கிளம்ப கார்த்திக் வீட்டுக்குள் நுழைய என்ன விஷயம் என்று விசாரிக்க சாமுண்டீஸ்வரி கையெழுத்து போட்ட விஷயத்தை சொல்கிறார். கார்த்திக் எல்லாத்தையும் முழுசா படிச்சுதானே கையெழுத்து போட்டீங்க என்று விசாரிக்க சாமுண்டீஸ்வரியும் ஆமாம் என்று சொல்கிறார்.
அடுத்த நாள் காலையில் சிவனாண்டி வீட்டுக்கு வந்து சாமுண்டீஸ்வரி வீட்டை எழுதிக் கொடுத்துட்டார். இனி இது என்னுடைய வீடு. வீட்டில் உள்ள எல்லோரும் வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொல்ல, ஒட்டு மொத்த குடும்பத்னர் மட்டுமின்றி ஊர் மக்களும் அதிர்ச்சி அடைகின்றனர். சாமுண்டீஸ்வரி கையெழுத்து நான்தான் போட்டேன். ஆனா வீட்டை எழுதி கொடுக்கவில்லை என்று சொல்கிறார்.
இதைத் தொடர்ந்து சிவனாண்டி மீது புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறேன் என்று சொல்ல, கார்த்திக் அதெல்லாம் வேண்டாம். பிறகு கோர்ட்டுக்கு செல்ல வேண்டி வரும். அதன் பின் 24 மணி நேரத்தில் வீட்டை எழுதி கொடுக்க வேண்டி வரும். அதனால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நானே உண்மையை கண்டுபிடிக்கிறேன் என்று தனது ஆக்ஷன் வேட்டையில் இறங்குகிறார்.
இதைத் தொடர்ந்து ரூமுக்கு சென்ற கார்த்திக்கிற்கு ரேவதி ஷாக் மேல ஷாக் கொடுக்கிறார். அவர் ஃபர்ஸ்ட் நைட் ஷெட்டப்புக்கு ஏற்பாடு செய்து வைத்திருக்க, அதைப் பார்த்து கார்த்து அதிர்ச்சி அடைகிறார். ஏற்கனவே கார்த்திக் தனது அத்தை பையன் என்பது தெரிந்தும், அவர் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரிந்தும் அவரை துரத்தி துரத்தி காதலிக்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்பதும் கூட ரேவதிக்கு தெரிந்துவிட்டது.
இந்த சூழலில் தான் ரேவதி தனக்கு முதலிரவு நடக்க வேண்டி அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கார்த்திகை தீபம் 2 சீரியலின் இன்றைய எபிசோடு.