- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Singappenne: உண்மையை உடைத்த ஆனந்தி - அடிவாங்கி அசிங்கப்படும் அன்பு! நெட்டிசன்களின் ரியாக்ஷன் இதோ!
Singappenne: உண்மையை உடைத்த ஆனந்தி - அடிவாங்கி அசிங்கப்படும் அன்பு! நெட்டிசன்களின் ரியாக்ஷன் இதோ!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய அப்டேட் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இன்றைய தினம் நடக்க உள்ளது பற்றியும், அதற்கான நெட்டிசன்கள் ரியாக்ஷன் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Sun tv Singapenne Serial
சன் டிவியில் ஒவ்வொரு வாரமும், TRP-யில் கெத்து காட்டி கொண்டிருக்கும் தொடர் 'சிங்கப்பெண்ணே'. கடந்த இரண்டு வருடமாக ஓடி கொண்டிருக்கும் இந்த தொடர், முழுக்க முழுக்க, ஆனந்தி என்கிற ஹீரோயினை மையமாக வைத்து தான் நகர்ந்து வருகிறது.
ஆனந்தியை, அழகன் என்கிற பெயரின் காதலித்தது அன்பு தான் என்பது ஆனந்திக்கு தெரியவர... ஆனந்தியும் அன்புவை ஏற்று கொள்கிறாள். அன்புவின் அம்மா ஆனந்தி - அன்பு காதலுக்கு தடையாக இருந்த நிலையில், தற்போது அந்த தடையும் நீங்கி உள்ளது. ஆனந்தி, அன்புவை திருமணம் செய்வதில் உறுதியாக இருப்பது போல், மகேஷும் ஆனந்தியை மட்டும் தான் திருமணம் செய்வேன் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
Mahesh Angry
பலமுறை ஆனந்தி, மகேஷிடம் அன்பு மீதான காதலை வெளிப்படுத்த முயன்ற போதும் அது முடியாமல் போகிறது. அன்பு, ஆனந்தி தன்னுடைய காதலி என்கிற உண்மையை சொன்னால் அதை புரிந்து கொள்ளும் மனநிலையில் மகேஷ் இல்லை. ஹாஸ்டல் வார்டன் இதை, மறைமுகமாக சொன்ன நிலையில், மகேஷ் அவர் மீதும் தன்னுடைய கோபத்தை காட்டினார்.
புது வரவுகளால் TRP-யில் அதள பாதாளத்துக்கு போன விஜய் டிவி; டாப் 5 லிஸ்டில் கூட இடம்பிடிக்காத சோகம்!
Anbu and Aandhi Love
பலமுறை ஆனந்தி, மகேஷிடம் அன்பு மீதான காதலை வெளிப்படுத்த முயன்ற போதும் அது முடியாமல் போகிறது. அன்புவும், ஆனந்தி தன்னுடைய காதலி என்கிற உண்மையை சொன்னால் அதை புரிந்து கொள்ளும் மனநிலையில் மகேஷ் இல்லை என்பதை அறிந்து, ஹாஸ்டல் வார்டன் மூலம் இதை, மறைமுகமாக சொல்ல சொன்ன நிலையில், மகேஷ் அவர் மீதும் தன்னுடைய கோபத்தை காட்டுகிறார்.
New section Open
இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள புரோமோவில்... மகேஷின் அம்மா எப்படியும் ஆனந்திக்கு நெருக்கடி கொடுத்து, அன்புவை காதலிக்கும் விஷயத்தை அவர் வாயாலேயே மகேஷிடம் சொல்ல வேண்டும் என பிளான் போட்டு, மகேஷ் தனிமையில் இருக்கும் படி ஒரு ஆபிஸ் ரூம் ஓப்பன் செய்கிறார். அந்த அறையில் இருக்கும் போது மகேஷ் ரொமான்டிக்காக ஆனந்தியை நெருங்கி வருகிறார்.
'சிங்க பெண்ணே' சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் வாங்கும் சம்பளம்! யாருக்கு அதிகம் தெரியுமா?
Anandhi revel Truth
இதில் கோபம் அடையும் ஆனந்தி, நான் அழகனை தான் காதலிக்கிறேன். அன்பு தான் அழகன். அழகன் தான் அன்பு என்கிற ரகசியத்தை உடைக்கிறார். அன்பு மீது கோபமடையும் மகேஷ் அன்புவை துரோகி என அடித்து, அசிங்கப்படுத்தி கழுத்தை பிடித்து வெளியே தள்ள சொல்கிறார். இந்த புரோமோ இப்படி இருக்க, நெட்டிசன்கள் இந்த புரோமோவுக்கு தங்கள் மனதில் பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
ஒரு தரப்பு ரசிகர்கள் கண்டிப்பாக இந்த காட்சி கனவாக தான் இருக்கும் என கூறுகிறார்கள். மகேஷ் மற்றும் ஆனந்தியை பிரிக்கத்துடிக்கும், மகேஷின் அம்மா அல்லது பவித்ராவின் கனவாக இருக்கும் என்பதே பலரின் கருத்து .
Netizen Reaction
இதை தொடர்ந்து பெரும்பாலான ரசிகர்கள், மகேஷ்க்கு எதிராகவும்... அன்புவை ஏன் அடிக்கிறீங்க அவர் அடிவாங்குவது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அன்புவும் ஆனந்தியும் தான் சேர வேண்டும் என கமெண்ட் போட்டு வருகிறார்கள். எனினும் இன்றைய தினம் என்ன நடக்க போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.