- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சத்யாவை கையும் களவுமாக பிடித்த கயல் மற்றும் ஆதிரை - வெளிச்சத்திற்கு வந்த உண்மை: கயல் மருமகள் மகா சங்கமம்!
சத்யாவை கையும் களவுமாக பிடித்த கயல் மற்றும் ஆதிரை - வெளிச்சத்திற்கு வந்த உண்மை: கயல் மருமகள் மகா சங்கமம்!
Sathya caught red handed as Kayal and Aadhirai: கயல் மற்றும் மருமகள் இணைந்து நடக்கும் மகா சங்கமம் இன்றைய எபிசோடில் வைர நெக்லஸை திருடிய சத்யாவை கையும் களவுமாக ஒரு சின்ன நாடகம் நடத்தி கயல் மற்றும் ஆதிரை பிடித்தனர்

கயல் மற்றும் மருமகள்
கயல் மற்றும் மருமகள் இணைந்து நடக்கும் மகா சங்கமத்தில் நேற்றைய எபிசோடில் ரேவதி மீது பழி சுமத்தி போலீசிடம் சொன்னனர்.ஆனால் கயல் மற்றும் ஆதிரை இருவரும் சேர்ந்து நாங்கள் இதை கண்டுபிடித்து தருகிறோம் என்று ரேவதியை போலீஸிடம் இருந்து விடுவித்தனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த நிக்ரஸை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.
சத்யாவை கையும் களவுமாக பிடித்த கயல் மற்றும் ஆதிரை
இப்பொழுது வடிவு மற்றும் சத்யா இதனை கண்காணித்துக் கொண்டே இருந்தனர். இவர்களை பார்த்துக் கொண்டிருந்த சத்யா மற்றும் வடிவு. கயல் ஆதிரை மீது பழி சுமத்தி அந்த நெக்லஸை நீதானே எடுத்த ஏன் இப்படி எல்லாம் நீ பண்ற நான் உன்னை நினைச்சேன் நீ என்ன இப்படி இருக்க மீனாட்சி அம்மா பணக்காரங்க தான் ஆனா இது சென்டிமென்ட் அந்த நெக்லஸ் வாங்கினாங்க அத போய் நீ எடுத்து இருக்கியே என்றெல்லாம் ஆதிரையை கயல் திட்டினார்.
சன் டிவி சீரியல் கயல் - மருமகள் சங்கமம்
அந்த நெக்லஸ் எங்க வச்சிருக்க என்று ஆதிரையிடம் கயல் கேட்க என் ரூம்ல தான் வச்சிருக்கேன் என்று ஆதிரைசொல்கிறார்.அதை இப்பவே போய் எடுத்துட்டு வா என்று கயல் சொல்ல. சத்யா குழப்பம் முடிகிறார் அந்த நெக்லஸ் என்கிட்ட தானே இருக்கு என்று சத்யாவும் வடிவும் பேசிக் கொள்கின்றனர். இந்த நெக்லஸை நீ எங்க வச்சிருக்க என்று வடிவு கேட்க என் பேக்ல என் ரூம்ல தான் இருக்கு என்று சொல்கிறார் அதை போய் நீ பாரு என்று வடிவு சொல்ல சத்யாவும் அறைக்கு சென்று நெக்லஸை எடுத்து பார்க்கும்போது கதவை திறந்து ஆதரையும் கயலும் பார்க்கின்றனர் கையும் களவுமாக சத்யாவை பிடித்துள்ளனர்.
ஆதிரை மற்றும் கயல்
நீதான் இந்த நெட்ல செத்துருவேன்னு எங்களுக்கு தெரியும். அதனால தான் ஒரு சின்ன நாடகம் நடத்தினோம் என்று உண்மையை சொல்கின்றனர். நீ நெக்லஸை எடுத்துட்டு ரேவதி மேல பழி போடுறியா என்று கயல் கேட்க நீயெல்லாம் என்னை கேக்குறதுக்கு ரைட்சே இல்லை என்று சத்யா கோபமுடன் கூறுகிறார். அப்பொழுது கயல் சத்யாவை ஓங்கி பளார் என்று ஒரு அறை கன்னத்தில் வைக்கிறார். அதன் பிறகு ஆதிரையும் சத்யாவின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார். குடும்பம் உடைந்துவிடும் பாக்குறேன் இல்லேன்னா நான் உன்னை இந்த வீட்டை விட்டு தொரைத்திருப்பேன். கார்த்திக் ரொம்ப பாவம் நல்ல மனுஷன் அதனால நீ தப்புச்சுக்கிட்டு இருக்க இல்லனா உன்னைய நான் அப்பவே போலீஸ்ல சொல்லி அரெஸ்ட் பண்ணி இருப்பேன் என்று எல்லாம் சத்யாவை கையலும் ஆதிரையும் மிரட்டுகின்றனர் அதனை பிடிக்காமல் கடும் கோபத்தில் இருக்கிறார் சத்யா இத்துடன் இந்த எபிசோடு முடிவடைகிறது.