MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஆதி குணசேகரனின் கொட்டத்தை அடக்க மாஸ் எண்ட்ரி கொடுக்கும் மெயின் வில்லன்... ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியல்

ஆதி குணசேகரனின் கொட்டத்தை அடக்க மாஸ் எண்ட்ரி கொடுக்கும் மெயின் வில்லன்... ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியல்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தன்னைமிஞ்ச ஆளே இல்லை என டெரர் வில்லனாக ஆட்டம் போட்டு வரும் ஆதி குணசேகரனுக்கு ஆப்பு வைக்க மெயின் வில்லன் எண்ட்ரி கொடுக்கப் போகிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 11 2025, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial New Villain
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial New Villain

சினிமாவுக்கு நிகராக விறுவிறுப்பான கதைக்களத்தோடு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியல் வாரத்தின் 7 நாட்களில் சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்னர் கோலங்கள் என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் சீரியலை இயக்கி இருக்கிறார். எதிர்நீச்சல் தொடரின் முதல் சீசன் 2022 முதல் 2024 வரை நடந்த நிலையில், அதன் இரண்டாவது சீசன் எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற பெயரில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு தற்போது 280 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்த ட்விஸ்ட்
Image Credit : youtube/suntv

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்த ட்விஸ்ட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் - பார்கவியின் திருமணம் பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த ட்விஸ்டாக ஆதி குணசேகரன் பற்றிய ரகசியங்கள் வெளிவர இருக்கின்றன. கடந்த வாரம் ஆதி குணசேகரனின் ரூமில் ஏதாவது ஆதாரம் சிக்குமா என தேடிப் பார்த்த சக்திக்கு ஒரு லெட்டர் கிடைத்தது. 30 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அந்த லெட்டரை படித்ததும் சக்தி பதறிப்போனார். அப்படி அந்த லெட்டரில் என்ன தான் இருந்தது என்பதை சீக்ரெட்டாக வைத்திருந்த இயக்குனர், நேற்று ஆதி குணசேகரன் அந்த லெட்டர் தொலைந்து போன விஷயத்தை அறிந்தபோது ஒரு பின்னணி குரல் மூலம் அந்த லெட்டரில் இருந்தவற்றை போட்டுடைத்தார்.

Related Articles

Related image1
டம்மி போனுக்கு பயந்து ஜனனியிடம் டீல் பேசும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இன்றைய எபிசோடு
Related image2
ஆதி குணசேகரனை பழிவாங்க அறிவுக்கரசி போட்ட பலே பிளான்; அலேக்காக தூக்க வரும் போலீஸ் - எதிர்நீச்சல் தொடர்கிறது
34
அந்த லெட்டரில் என்ன இருந்தது?
Image Credit : youtube/suntv

அந்த லெட்டரில் என்ன இருந்தது?

ஒரு பெண் தான் குணசேகரனுக்கு அந்த லெட்டரை எழுதி இருக்கிறார். அதில் அவர், இந்த லெட்டரை நான் எழுதும்போது மணி ராத்திரி 2.30, அக்டோபர் மாதம் 18ந் தேதி, வருடம் 1990. இப்போ இங்கே ராமேஸ்வரத்தில் கடல் அலைகள் ஆர்ப்பரித்து அழிச்சுட்டு இருக்கு. என் மனசும் அதேபோல் தான் உள்ளது. இந்த லெட்டர் உனக்கு கிடைக்கும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். பாக்கி மிச்சம் எதுவும் இல்லைனு சந்தோஷப்படாத. அப்படியே மிச்சம் இருந்தாலும் பேப்பர் மட்டும்தானே... அது காலப்போக்கில் அழிஞ்சு போயிடும்னு நினைக்காத. நீ விட்டுட்டு போனது வெறும் பேப்பர் இல்ல, ஒரு விதை. அந்த விதை நாளைக்கு ருக்‌ஷமா வந்து, அதோடு கிளைகள் உன்னோட கழுத்தை நெரிக்கும். 

உன்னை மட்டுமல்ல, உன்னுடைய தாய், உன் தம்பிகள், உன் தங்கச்சி, பிள்ளைங்க, பேரன், பேத்திங்கனு உன்னுடைய வம்சத்தையே அழிச்சு, உன்னை நிர்மூலம் ஆக்கிடும். இப்போ எல்லாம் அழிஞ்சிடுச்சுனு நினைச்சுட்டு இருக்க, ஒரு காலம் வரும், அப்போ நீ... அய்யய்யோ விட்டுட்டோமே, ஏமாந்துட்டோமேனு நினைப்ப. அன்னைக்கு உனக்கு தெரியும், நீ பண்ணிய பாவம், உன்னை துரத்தி வரும்” என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

44
புது வில்லன் யார்?
Image Credit : X

புது வில்லன் யார்?

ஆதி குணசேகரன் ஏமாற்றிய அந்த பெண், உன்னை அழிக்க ஒரு விதை இருப்பதாக சொல்லி ஹிண்ட் கொடுத்திருக்கிறார். அநேகமாக அது ஆதி குணசேகரனின் காதலியாகவோ அல்லது முதல் மனைவியாகவோ இருக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் சொன்ன அந்த விதை தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மெயின் வில்லனாக எண்ட்ரி கொடுக்க உள்ளார். அவர் வேறு யாருமில்லை கோலங்கள் சீரியலில் ஆதியாக மிரட்டிய அஜய் கபூர் தான். அவர் விரைவில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மெயின் வில்லனாக எண்ட்ரி கொடுக்க உள்ளதால் இனி சீரியல் மேலும் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதி.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image2
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Recommended image3
Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!
Related Stories
Recommended image1
டம்மி போனுக்கு பயந்து ஜனனியிடம் டீல் பேசும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இன்றைய எபிசோடு
Recommended image2
ஆதி குணசேகரனை பழிவாங்க அறிவுக்கரசி போட்ட பலே பிளான்; அலேக்காக தூக்க வரும் போலீஸ் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved