MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கயல் சீரியல் நடிகையின் உயிரைப் பறித்த வீடியோ கால்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

கயல் சீரியல் நடிகையின் உயிரைப் பறித்த வீடியோ கால்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வந்த சுபாஷினி சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 06 2026, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kayal Serial Actress Subashini Death
Image Credit : instagram

Kayal Serial Actress Subashini Death

சுபாஷினி பாலசுப்பிரமணியம், 36 வயதான இவர் சென்னை போரூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு பரிச்சயமான முகம். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், கயல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர், இலங்கையில் பிறந்து பின்னர் இந்தியாவில் செட்டிலாகிவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிப்பின் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கையில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் தற்கொலை செய்துள்ளார் சுபாஷினி.

24
இறப்புக்கு காரணம் என்ன?
Image Credit : instagram

இறப்புக்கு காரணம் என்ன?

சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்த சுபாஷினி, சம்பவம் நடந்ததற்கு முன்புவரை வழக்கம்போல தனது தினசரி வாழ்க்கையை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்பாராத வகையில், நேற்று இரவு கணவருடன் வீடியோ கால் பேசியபோது ஏற்பட்ட குடும்ப பிரச்சனை அவரை கடுமையாக பாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மனஅழுத்தம் காரணமாக திடீரென எடுத்த முடிவு, அவருடைய வாழ்க்கையை துயரமான முடிவுக்கு கொண்டு சென்றுள்ளது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சிறிய கருத்து வேறுபாடு கூட எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. சினிமா மற்றும் தொலைக்காட்சி வட்டாரங்களில் இந்த செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Related image1
Kayal Marumagal MahaSangamam: மீனாட்சி பிறந்தநாள் விழாவில் அரங்கேறும் பயங்கர சதி! ஆனந்தி, ரோகிணியின் முகத்திரையை கிழிப்பாரா கயல்?
Related image2
கயல் மற்றும் ஆதிரை கைகோர்த்த மாஸ் ஆக்ஷன்! ஆனந்தி, ரோகிணி எங்கே? மகா சங்கமத்தில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்கள்!
34
யார் இந்த சுபாஷினி?
Image Credit : instagram

யார் இந்த சுபாஷினி?

இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 2012-ம் ஆண்டு இலங்கையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட இனி அவன் என்கிற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதையடுத்து ஆரி நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு ரிலீஸ் ஆன ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் திருமணத்துக்கு பின்னர் பெங்களூருவில் கணவருடன் வசித்து வந்தார். சன் டிவியின் கயல் சீரியலில் நடித்து வந்ததால் சென்னையில் உள்ள ஐயப்பன் தாங்கலில் வீடு வாடைகைக்கு எடுத்து வசித்து வந்தார்.

44
போலீஸ் விசாரணை
Image Credit : instagram

போலீஸ் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை இரவு தன்னுடைய கணவருடன் வீடியோ காலில் பேசியபோது, சுபாஷினிக்கும் அவருடைய கணவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மனமுடைந்து போன சுபாஷினி, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சொல்லிவிட்டு போனை கட் பண்ணி இருக்கிறார். பின்னர் சென்னையில் உள்ள வீட்டிலேயே தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இச்சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
குழந்தை பொசிஷன் கிரிட்டிக்கல்; மருத்துவர் சொன்ன அதிர்ச்சித் தகவல்.. நிலைகுலைந்து போன அன்பு!
Recommended image2
குணசேகரனை மாட்டிவிட ஜனனியோடு கூட்டு சேரும் அறிவுக்கரசி... எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image3
ரவியை புருஷனாக்கிய நீத்து; பதறிப்போன ஸ்ருதி... மனோஜுக்கு குட்நியூஸ் சொன்ன ஸ்வேதா - சிறகடிக்க ஆசை
Related Stories
Recommended image1
Kayal Marumagal MahaSangamam: மீனாட்சி பிறந்தநாள் விழாவில் அரங்கேறும் பயங்கர சதி! ஆனந்தி, ரோகிணியின் முகத்திரையை கிழிப்பாரா கயல்?
Recommended image2
கயல் மற்றும் ஆதிரை கைகோர்த்த மாஸ் ஆக்ஷன்! ஆனந்தி, ரோகிணி எங்கே? மகா சங்கமத்தில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved