MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • போலீஸுக்கு டிமிக்கி கொடுத்த ஜனனியை அலேக்காக கடத்திய கும்பல் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்

போலீஸுக்கு டிமிக்கி கொடுத்த ஜனனியை அலேக்காக கடத்திய கும்பல் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஜனனியை ஒரு கும்பல் கடத்திச் சென்றிருக்கிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 28 2026, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதைக்களம் தலைகீழாக மாறி இருக்கிறது. இதுவரை ஆதி குணசேகரனும் அவரது தம்பிகளும் ஓடி ஒளிந்துகொண்டிருந்த நிலையில், தற்போது அமுதா கொலை வழக்கில் ஜனனி, போலீஸிடம் இருந்து தப்பி தலைமறைவாகி இருக்கிறார். ஜனனியை காப்பாற்ற கலெக்டர் மதிவதினியின் உதவியை நந்தினி, ரேணுகா, சக்தி ஆகியோர் நாடி உள்ள நிலையில், போலீஸார் கலெக்டர் வீட்டுக்கே வந்து அதிரடி சோதனை நடத்தி இருக்கிறார்கள். மதிவதினியும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
கடத்தப்படும் ஜனனி
Image Credit : youtube/suntv

கடத்தப்படும் ஜனனி

மதுரையில் மிகப்பெரிய ரெளடியாக இருக்கும் பினாமி குமாரின் வீட்டில் தான் தலைமறைவாக இருக்கிறார் ஆதி குணசேகரன். பினாமி குமார் பற்றி குணசேகரன் ஏற்கனவே பில்டப் கொடுத்திருந்தாலும் அதற்கு ஏற்றார் போல் அவர் எந்த சம்பவமும் செய்யாமல் இருந்து வந்தார். இதனால் அவர் ஒரு டம்மி பீஸ் என ஆடியன்ஸ் கருதி வந்தனர். அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு தரமான சம்பவத்தை செய்திருக்கிறார் பினாமி குமார். போலீசிடம் இருந்து தப்பியோடிய ஜனனியை, பினாமி குமார் ஆள் வைத்து தூக்கி இருக்கிறார். ஜனனியை கடத்திச் சென்று ஒரு இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.

Related Articles

Related image1
எஸ்கேப் ஆன ஜனனி... வேட்டையாட களமிறங்கும் கலெக்டர் மதிவதினி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்த ட்விஸ்ட்
Related image2
குண்டாஸ் கேன்சல்... மீண்டும் கோதாவில் இறங்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் செம ட்விஸ்ட்
34
பினாமி குமார் போட்ட உத்தரவு
Image Credit : youtube/suntv

பினாமி குமார் போட்ட உத்தரவு

ஜனனியை கடத்திய தன்னுடைய ஆட்களிடம், போன் போட்டு பேசும் குமார், ஆதி குணசேகரன் அண்ணனின் குண்டாஸ் நாளைக்கு ரத்தாகிவிடும். அவர் வீட்டிற்கு சென்று காலடி எடுத்து வைத்ததும் ஜனனியை முடிச்சுவிட்றுங்க என உத்தரவிடுகிறார். ஜனனி வாய், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார். மறுபுறம் வீட்டில் அராஜகம் செய்து வரும் கதிர் கேங், போலீஸிடம் இருந்து தப்பிச்சு ஓடுனால்ல அந்த மெட்ராஸ் காரி, ஒரே நாள்ல மாட்டுவா, அவளை வச்சே உங்களை ஒட்டுமொத்தமா காலி பண்ணப் போறேன் என ரேணுகா மற்றும் நந்தினியிடம் வாய்ச்சவடால் விடுகிறார்.

44
சிக்கிய ஆதாரம்
Image Credit : youtube/suntv

சிக்கிய ஆதாரம்

ஆதி குணசேகரன் வெளியே வரும் முன் அவர் சம்பந்தப்பட்ட முக்கிய ஆதாரம் வீட்டில் இருப்பதாகவும் அதை எப்படியாவது தேடி எடுக்கும்படியும் கதிரிடம் வக்கீல் கூறி இருந்தார். அதை வீட்டில் உள்ள பெண்களுக்கு தெரியாமல் தேடி கண்டுபிடிக்க கதிர் திட்டம் போட்டிருந்த நிலையில், நீங்க தேடுற வீடியோ ஆதாரம் இப்போ எங்ககிட்ட தான் இருக்கு என ரேணுகா சொன்னதும் வெடவெடத்துப் போன கதிர், எங்க காட்டுங்க என கேட்க, எதுக்கு நீ புடுங்கிட்டு ஓடவா, அதெல்லாம் முடியாது என சொல்லிவிடுகிறார். இதையடுத்து என்ன ஆனது? ரேணுகா வைத்திருக்கும் வீடியோ ஆதாரம் என்ன? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மனோஜ் உடன் சேர ரோகிணி போடும் புது ஸ்கெட்ச்... அடங்காத நீத்துவால் அல்லல்படும் ரவி - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
Pandian Stores 2 S2 701: படுக்கையுடன் வெளியேறிய கோமதி.! தனிமையில் தவிக்கும் மீனா.! பாண்டியன் ஸ்டோர்சில் என்னப்பா நடக்குது.?!
Recommended image3
எஸ்கேப் ஆன ஜனனி... வேட்டையாட களமிறங்கும் கலெக்டர் மதிவதினி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்த ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
எஸ்கேப் ஆன ஜனனி... வேட்டையாட களமிறங்கும் கலெக்டர் மதிவதினி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்த ட்விஸ்ட்
Recommended image2
குண்டாஸ் கேன்சல்... மீண்டும் கோதாவில் இறங்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் செம ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved