MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • என் புள்ளைய கேள்வி கேட்குற உரிமை எவனுக்கும் கிடையாது! கொந்தளித்த ஈஸ்வரி..! இன்றிய 'எதிர்நீச்சல்' புரோமோ!

என் புள்ளைய கேள்வி கேட்குற உரிமை எவனுக்கும் கிடையாது! கொந்தளித்த ஈஸ்வரி..! இன்றிய 'எதிர்நீச்சல்' புரோமோ!

குணசேகரன் கதாபாத்திரம் இல்லாமல் 'எதிர்நீச்சல்' சீரியல் ஒளிபரப்பாகி வருவது சற்று டல்லடிக்க துவங்கி இருந்தாலும், புதிய கோணத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத காட்சிகள் இடம்பெற துவங்கியுள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Sep 16 2023, 04:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

'எதிர்நீச்சல்' தொடரில், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து, மாரடைப்பு ஏற்பட்டு இறந்த நிலையில், அடுத்ததாக இவரின் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்கிற மிகப்பெரிய குழப்பமே நீடித்து வருகிறது. முதலில் மாரிமுத்து நடித்த குணசேகரன் வேடத்தில், வேல ராமமூர்த்தி நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், பின்னர் பசுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுவரை எந்த உறுதியான தகவல்களும் சன் டிவி தரப்பில் இருந்து வரவில்லை.

25

குணசேகரன் இல்லாமல், சீரியல் ஒளிபரப்பாகி வருவது, உப்பு சப்பு இல்லாதது போல் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் அவரை மிகவும் மிஸ் செய்வதாக பலர் சமூக வலைத்தளத்தில் கூறி வருவதையும் பார்க்க முடிகிறது.

Nayanthara: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கே விபூதி அடித்த நயன்தாரா! அந்த விஷயத்துக்கு பழிக்கு பழி வாங்கிட்டாரோ?

35

இந்நிலையில் நேற்றைய எபிசோடில், ஈஸ்வரி தன்னுடைய மகன் தர்ஷனுடன் சென்று, ஜீவானந்தத்தையும், அவரின் மகள் வெண்பாவையும் பார்த்து பேசிய காட்சிகள் இடம்பெற்றது. அப்போது வெண்பா தன்னுடைய அம்மாவை பற்றி உருக்கமாக பேசியது, தர்ஷனை சங்கடத்தில் ஆழ்த்தியது. பின்னர் சித்தப்பா மற்றும் அப்பா பேச்சை கேட்டு கொண்டு அம்மாவை தவறாக நினைத்ததற்கு மன்னிப்பு கேட்டார்.

45

இதை தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அப்பத்தா தர்ஷனிடம் கல்லூரிக்கு பீஸ் காட்டவில்லையா என கேட்க, அந்த ஆளோட காசுல நான் படிக்க மாட்டேன் என தர்ஷன் கூறுகிறார். இதை கேட்டதும், கதிர் யாரை பார்த்து அந்த ஆளுன்னு சொல்ற என கையை ஓங்கி கொண்டு அடிக்க வருகிறார். பின்னர் ஞானமும் தர்ஷனை பார்த்து கேள்வி எழுப்ப, பத்ரகாளி போல் மாறும் ஈஸ்வரி என்னுடைய பிள்ளையை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என கூறுகிறார்.

Vanitha Net Worth: தங்கத்தட்டில் பிறந்து.. இன்று தன்னந்தனியாக தவிக்கும் வனிதா விஜயகுமார் சொத்து மதிப்பு விவரம்

55

குணசேகரன் கதாபாத்திரம் இல்லை என்றாலும், சீரியலை சாமர்த்தியமாக நகர்த்தி செல்கிறார் இயக்குனர் திருச்செல்வம். தற்போது, ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகிய மூவருமே தெரிந்தும், தெரியாமலும் வேலை செய்ய துவங்கி விட்ட நிலையில், அடுத்ததாக ஈஸ்வரியும்... தன்னுடைய திறமைக்கு ஏற்ற வேலையை செய்ய துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved